Sunday, September 30, 2012




ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இளங்கலை மாணவர்கள் நல்லதொரு   முன்முயற்சியில் இறங்கியுள்ளனர். Medi Club ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை   நிகழ்ச்சியை நடத்திடத் திட்டமிட்டுள்ளனர். எச் பிரவீண், இறுதி ஆண்டு MBBS மாணவர் Mediclub  அமைப்பின் செயலாளராக உள்ளார்.,

கதிர்வீச்சியல் என்ற விரிவுரையுடன் முதல் கூட்டம் தொடங்கியது. கதிரியக்க சிகிச்சைத் துறை, சி அமர்நாத் இரண்டு மணி நேரம் விளக்கவுரை ஆற்றினார்.. சென்ற வெள்ளியன்று நடந்த மேற்படி கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மாணாக்கர்கள் பங்கேற்றனர். 

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி உள்ள KAP விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.  ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் ."சி கீதாலட்சுமியும் பங்கேற்றுச் சிறப்பித்தார்...   

மெடி கிளப்பிற்காக நாற்பது உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களை அழைக்க திட்டமிட்டுச் செயலாற்றுவர்.. வரும் மாதங்களில் மற்ற நிகழ்வுகளத் தொடர்ச்சியாக நடத்திடவும்  திட்டமிட்டுள்ளது.

புற்றுநோய் குறித்ததொரு  ஆராய்ச்சிப் பட்டறை , அத்துடன் சொற்பொழிவுகளை இந்த ஆண்டு  நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.

\"எங்களது   ஸ்டேன்லியில் மெடி கிளப் .  நன்றாக இயங்கினால்,  ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி மருத்துவ மாணாக்கர்களை  மற்ற மாநிலங்களில் இருந்து  அழைக்கவும் முடியும் என்று நம்புவதாகப் "பிரவீண் கூறினார். 

இவ்வரிசையில்  சங்கங்களில் இந்திய  மருத்துவ மாணவர் சங்கம்,  திருச்சியில் இயங்கிவரும் இசிஜி-எகோ-கிளப் அகியவற்றக் குறிப்பிடலாம். எங்களது மெடி கிளப்பும் அவற்றைப் போன்று மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
















கற்பதோடு கேட்டலும் நன்று- ஸ்டேன்லியில் மெடிகிளப் துவக்கம் !




ஸ்டான்லி மருத்துவ கல்லூரி இளங்கலை மாணவர்கள் நல்லதொரு   முன்முயற்சியில் இறங்கியுள்ளனர். Medi Club ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை   நிகழ்ச்சியை நடத்திடத் திட்டமிட்டுள்ளனர். எச் பிரவீண், இறுதி ஆண்டு MBBS மாணவர் Mediclub  அமைப்பின் செயலாளராக உள்ளார்.,

கதிர்வீச்சியல் என்ற விரிவுரையுடன் முதல் கூட்டம் தொடங்கியது. கதிரியக்க சிகிச்சைத் துறை, சி அமர்நாத் இரண்டு மணி நேரம் விளக்கவுரை ஆற்றினார்.. சென்ற வெள்ளியன்று நடந்த மேற்படி கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மாணாக்கர்கள் பங்கேற்றனர். 

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி உள்ள KAP விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.  ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் ."சி கீதாலட்சுமியும் பங்கேற்றுச் சிறப்பித்தார்...   

மெடி கிளப்பிற்காக நாற்பது உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களை அழைக்க திட்டமிட்டுச் செயலாற்றுவர்.. வரும் மாதங்களில் மற்ற நிகழ்வுகளத் தொடர்ச்சியாக நடத்திடவும்  திட்டமிட்டுள்ளது.

புற்றுநோய் குறித்ததொரு  ஆராய்ச்சிப் பட்டறை , அத்துடன் சொற்பொழிவுகளை இந்த ஆண்டு  நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.

\"எங்களது   ஸ்டேன்லியில் மெடி கிளப் .  நன்றாக இயங்கினால்,  ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி மருத்துவ மாணாக்கர்களை  மற்ற மாநிலங்களில் இருந்து  அழைக்கவும் முடியும் என்று நம்புவதாகப் "பிரவீண் கூறினார். 

இவ்வரிசையில்  சங்கங்களில் இந்திய  மருத்துவ மாணவர் சங்கம்,  திருச்சியில் இயங்கிவரும் இசிஜி-எகோ-கிளப் அகியவற்றக் குறிப்பிடலாம். எங்களது மெடி கிளப்பும் அவற்றைப் போன்று மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
















Saturday, September 29, 2012

28 தேதியுடன் சென்னை எழும்பூரில்  முடிவடைந்த தொல்லியல் கன்காட்சியின்போது பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.

அவற்றுள்  கொடுமணல் அகழ்வாய்வு என்ற நூலும், தமிழ்க்கீர்த்தனைகள் என்ற நூலும் கருத்தைக் கவர்ந்தன.

சுமார் 112 பக்கங்கள் கொண்ட தமிழ்க்கீர்த்தனைகள் புத்தகம்விலை குறிப்பிடப்ப்டாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விலைப்பட்டியலில் குறிப்பிட்டிருந்த ரூபாய் 37/-

1993-ல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை-113-லிருந்து 500 பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன. இதன் பதிப்பாசிரியர், ஆர்.வசந்த கல்யாணி எம்.ஏ. கல்வெட்டாய்வாளர் , தொல்பொருள் ஆய்வுத் துறை. பொறுப்பாசிரியர், நடன.காசிநாதன், எம்.ஏ. இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத் துறை. 

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இசைப்பாடல்கள் யாவும் தெலுங்கில்  இயற்றப்பட்டு வேகமாகப் பரவி வந்தன. இச்சூழலில், வாழ்ந்த உடையார் பாளையம், அரியலூர் ஜமீந்தார்கள், கபித்தலம் இராமபத்திர மூப்பனார், அவர் தந்தையார் முத்தைய மூப்பனார், இஞ்சிக்கொல்லை வேங்கடராமன் போன்றவர்கள் தமிழிசைக் கலைஞ்ர்களுக்குக் கொடுத்த ஆதரவும் மதிப்பும், அப்போது இயற்றப்பட்ட தமிழ்க் கீர்த்தனைகள் வாயிலாகத் தெரிய வருகின்றன.  

அவற்றுள் கிடைத்த,

முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்                         2 

கனம் கிருஷ்ணையர் கீர்த்தனைகள்                  31   

பாலகவி சண்பகமன்னார் கீர்த்தனைகள்          11

பால சரஸ்வதி கீர்த்தனை                                          1 

இயற்றியவர் பெயர் தெரியாதவை                         4 - ஆக மொத்தம்  60 தமிழ்க்

கீர்த்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

பாட்டு எண் : 1                                                                                                   கீர்த்தனை:- 1
தளு: தோடி ராகம்                                                                                         ஜம்பை தாளம்
ல்லவி 

அம்பர சிதம்பர சதானந்த 
            அடிகள் மறவாதருளும் அனுதினமே                                       ( அம்பர )  

அனுபல்லவி      

செம்பொன் மலைச் சிலைவளைத்த திவ்விய பரமானந்த 
             சம்போ சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா !                              ( அம்பர )   

சரணம்  
கங்கை மதி அரவசைய காதிற் குழை அசைய  
செங்கைமழு துடிஅசைய செய்ய ஜடை அசைய 
பொங்குபுலி யதளசைய பொற்பாதச் சிலம்பசைய  
மங்கைசிவ காமவல்லி மகிழ நடம் புரியும்                                    ( அம்பர ) 

நின்மல நிரலாம்ப நிர்க்குண நிரஞ்சன 
சின்மயானந்த பர சிற்குண சொரூபா ! 
வன்மலங்கள் நீக்கியருள் வாரியுரவே எனது
புன்மையற உமைக்காணப் பொதுவில் நடம்புரியும்                 ( அம்பர ) 

துங்கமறை ஆகமங்கள் சொன்னவிதி வழுவலாமா ?  
சிங்கார மாமகங்கள் செய்து தினந்தினமும் 
மங்காத  நீறுபுனை வைதிக மூவாயிரவர்  
நங்கோ வென்றே பரவநாளும் நடம்புரியும்                                 ( அம்பர )  


இந்தக் கீர்த்தனை தமிழிசை மூவர் என்று பாரட்டப்பட்டவருள் முதல்வரான 
முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளுள் ஒன்று. எடுத்துக்காட்டாக இங்கே பதியப்பட்டது. இதரக் கீர்த்தனைகள்  விபரங்களைத் தெரிவித்தால் நன்றி உடையவராவோராவோம்.



தமிழ்க் கீர்த்தனைகள் :- முத்துத் தாண்டவர் கீர்த்தனை ஒன்று மாதிரிக்காக !

28 தேதியுடன் சென்னை எழும்பூரில்  முடிவடைந்த தொல்லியல் கன்காட்சியின்போது பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன.

அவற்றுள்  கொடுமணல் அகழ்வாய்வு என்ற நூலும், தமிழ்க்கீர்த்தனைகள் என்ற நூலும் கருத்தைக் கவர்ந்தன.

சுமார் 112 பக்கங்கள் கொண்ட தமிழ்க்கீர்த்தனைகள் புத்தகம்விலை குறிப்பிடப்ப்டாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விலைப்பட்டியலில் குறிப்பிட்டிருந்த ரூபாய் 37/-

1993-ல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை-113-லிருந்து 500 பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன. இதன் பதிப்பாசிரியர், ஆர்.வசந்த கல்யாணி எம்.ஏ. கல்வெட்டாய்வாளர் , தொல்பொருள் ஆய்வுத் துறை. பொறுப்பாசிரியர், நடன.காசிநாதன், எம்.ஏ. இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத் துறை. 

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இசைப்பாடல்கள் யாவும் தெலுங்கில்  இயற்றப்பட்டு வேகமாகப் பரவி வந்தன. இச்சூழலில், வாழ்ந்த உடையார் பாளையம், அரியலூர் ஜமீந்தார்கள், கபித்தலம் இராமபத்திர மூப்பனார், அவர் தந்தையார் முத்தைய மூப்பனார், இஞ்சிக்கொல்லை வேங்கடராமன் போன்றவர்கள் தமிழிசைக் கலைஞ்ர்களுக்குக் கொடுத்த ஆதரவும் மதிப்பும், அப்போது இயற்றப்பட்ட தமிழ்க் கீர்த்தனைகள் வாயிலாகத் தெரிய வருகின்றன.  

அவற்றுள் கிடைத்த,

முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்                         2 

கனம் கிருஷ்ணையர் கீர்த்தனைகள்                  31   

பாலகவி சண்பகமன்னார் கீர்த்தனைகள்          11

பால சரஸ்வதி கீர்த்தனை                                          1 

இயற்றியவர் பெயர் தெரியாதவை                         4 - ஆக மொத்தம்  60 தமிழ்க்

கீர்த்தனைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

பாட்டு எண் : 1                                                                                                   கீர்த்தனை:- 1
தளு: தோடி ராகம்                                                                                         ஜம்பை தாளம்
ல்லவி 

அம்பர சிதம்பர சதானந்த 
            அடிகள் மறவாதருளும் அனுதினமே                                       ( அம்பர )  

அனுபல்லவி      

செம்பொன் மலைச் சிலைவளைத்த திவ்விய பரமானந்த 
             சம்போ சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா !                              ( அம்பர )   

சரணம்  
கங்கை மதி அரவசைய காதிற் குழை அசைய  
செங்கைமழு துடிஅசைய செய்ய ஜடை அசைய 
பொங்குபுலி யதளசைய பொற்பாதச் சிலம்பசைய  
மங்கைசிவ காமவல்லி மகிழ நடம் புரியும்                                    ( அம்பர ) 

நின்மல நிரலாம்ப நிர்க்குண நிரஞ்சன 
சின்மயானந்த பர சிற்குண சொரூபா ! 
வன்மலங்கள் நீக்கியருள் வாரியுரவே எனது
புன்மையற உமைக்காணப் பொதுவில் நடம்புரியும்                 ( அம்பர ) 

துங்கமறை ஆகமங்கள் சொன்னவிதி வழுவலாமா ?  
சிங்கார மாமகங்கள் செய்து தினந்தினமும் 
மங்காத  நீறுபுனை வைதிக மூவாயிரவர்  
நங்கோ வென்றே பரவநாளும் நடம்புரியும்                                 ( அம்பர )  


இந்தக் கீர்த்தனை தமிழிசை மூவர் என்று பாரட்டப்பட்டவருள் முதல்வரான 
முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளுள் ஒன்று. எடுத்துக்காட்டாக இங்கே பதியப்பட்டது. இதரக் கீர்த்தனைகள்  விபரங்களைத் தெரிவித்தால் நன்றி உடையவராவோராவோம்.



மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும் - சோலை சுந்தரபெருமாள்; பக்.296; ரூ.150; முற்றம், சென்னை-14; )98847 14603.

நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்.

தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க, வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல்.

தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின்சிறப்பான இலக்கியங்களைப் பற்றிய அறிமுகமும், விமர்சனங்களும் உள்ள கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. நூலாசிரியர் எழுதிய புத்தக விமர்சனக் கட்டுரைகளும் உள்ளன.

இது தவிர, "கேரளம் - தமிழகம் தண்ணீர் பகிர்வுக்கான பரிந்துரைத் திட்டம்', "வல்லிக்கண்ணன் ஒரு வரலாறு', "கதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா?',

"கல்விக்கூடங்களில் அழியும் குழந்தைமை' என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல கட்டுரைகளைத் தொகுத்திருப்பது, கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

’அருந்தவப் பன்றி ‘ என்று பாரதியார் நூலுக்குப் பெயர் வைத்தபோது ஏற்படாத உறுத்தல் இப்பொழுது மட்டும் ஏன் ஏற்படுகின்றது ?



மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும்-சோலை சுந்தரபெருமாள்-தினமணிக்கு ஓர் கேள்வி ?

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும் - சோலை சுந்தரபெருமாள்; பக்.296; ரூ.150; முற்றம், சென்னை-14; )98847 14603.

நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப் பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்.

தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க, வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல்.

தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின்சிறப்பான இலக்கியங்களைப் பற்றிய அறிமுகமும், விமர்சனங்களும் உள்ள கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. நூலாசிரியர் எழுதிய புத்தக விமர்சனக் கட்டுரைகளும் உள்ளன.

இது தவிர, "கேரளம் - தமிழகம் தண்ணீர் பகிர்வுக்கான பரிந்துரைத் திட்டம்', "வல்லிக்கண்ணன் ஒரு வரலாறு', "கதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா?',

"கல்விக்கூடங்களில் அழியும் குழந்தைமை' என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல கட்டுரைகளைத் தொகுத்திருப்பது, கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

’அருந்தவப் பன்றி ‘ என்று பாரதியார் நூலுக்குப் பெயர் வைத்தபோது ஏற்படாத உறுத்தல் இப்பொழுது மட்டும் ஏன் ஏற்படுகின்றது ?




 அன்பிற்கினிய வலைப்பூ அன்பர்களே !

நான் பார்த்த தெரிந்த நல்லவற்றை- நல்லவர்களை மறக்காமல், மறக்காமல் பதிவு செய்யும் களம்,  “மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும் “  - rssairam.blogspot.com - -வலைப்பூ !

வெளிப்படையாகச் செய்யப்படும் செயல்கள் அனைத்திலுமே  பொது நன்மை  மேலோங்கியிருக்கும்.

http://www.openreadingroom.com http://www.openreadingroom.com இந்த இணையதளத்திலும் அத்தன்மையே ஒளிர்கின்றது. அரசியல். ஆன்மிகம், இசை, இலக்கணம். உடல்நலம், எழுத்தாளர்கள் எனப் பல பிரிவுகள் உள்ளன.  அனைத்தின் மூலமாகவும் தமிழை உலகம் முழுவதும் உலாவரச் செய்து வருகின்றார்.

அசோக மித்திரனும் கிடைப்பார். சின்னப்பா பாகவதரின் கதையையும்   படிக்கலாம். விந்தனும் நமக்காகக் காத்திருக்கின்றார். ஸ்ரீரங்கம் சுஜாதாவும் , குன்றக்குடி அடிகளாரும் உலா வருகின்றனர்.நாம் எதிர்பார்க்கும் பல படைப்பாளிகளின் பங்களிப்பும் உண்டு. வல்லிக்கண்ணனின் பெயர்க் காரணமும் தெரியவரும்.

சிறியன் சிந்திக்காத வல்லிக்கண்ணனும் அன்புடன் அழைக்கின்றார். “ சிறியன சிந்தியாதான், வல்லிக்கண்ணன் “ என்பது ஒரு நூலின் தலைப்பு. இதுபோன்று, ஒருவரைப் புகழ்ந்துரைக்கும் வார்த்தைகள் விக்கிபீடியாவில் இடம்பெறக் கூடாதாம். தமிழ் விக்கிபீடியா பொறுப்பாளர்கள் அதனை நீக்கிவிட்டனர். ஆனால், அந்த நூல் தந்த விபரங்கள் முழுவதையும் ஏற்றுக் கொண்டு விட்டனர். இத்தகு  தடைகளைத் தகர்த்து, தெரிந்த நல்ல ஆவணப்பதிவுகளை  தமிழ் விக்கிபீடியாக்களில் உருவாக்கிட இதுபோன்றதளங்களும், ,அவற்றை இயக்குவோரும் துணை நிற்பர் என்பதே எம்போன்றோர் எதிர்பார்ப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வலைத்தளத்தில் இன்னொரு சிறப்பான வசதியும் இருக்கின்றது. அது ரகசியம். பரம ரகசியம். தெரிந்துகொள்ள விரும்புவோர் செல்க. காண்க. பயன்படுத்திப் பலன் பெறுக.  

எல்லாமே தனிமனித உபயோகத்திற்காகத்தான் !  வியாபாரத்திற்கல்ல !   

இணையதள உரிமையாளர் என்ன சொல்கின்றார்?

Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available at a single resource for the benefit of the Tamil diaspora scattered across the globe.

The project was conceptualized and commissioned by Ramesh Chakrapani, a Singapore-based journalist and Tamil enthusiast.

The free Internet Tamil library includes a wide range of narrative prose such as the novel, the short story, autobiography, travelogue, commentary, children’s literature and translation. Many of the writers featured here played an integral role in the evolution of contemporary Tamil literature. We hope you find the content useful and the web site easy to navigate.

Do let us know how we can do better, and please spread the word.The First 1,000!  (old)

Today, our little Tamil archive hit the 1,000 mark! It is also, coincidentally, the day of the birth of this blog. There are now officially more than one thousand Tamil books for download, and that includes entire novels, short stories, anthologies, poetry collections, essays and essay collections, travelogues, plays and plenty of other category non-fiction. The number of individual works, of course, has long crossed the 1,000 mark since many of the files are collections.

We hope you find this site useful. We plan to keep adding as much public domain material as we can locate and organize. Please spread the word if you liked our little corner of the Web. Feedback and suggestions on content and design are most welcome.

எல்லாமே தனிமனித உபயோகத்திற்காகத்தான் ! வியாபாரத்திற்கல்ல ! - சிங்கப்பூர் ரமேஷ் சக்ரபாணி , இதழியலாளர் !


 அன்பிற்கினிய வலைப்பூ அன்பர்களே !

நான் பார்த்த தெரிந்த நல்லவற்றை- நல்லவர்களை மறக்காமல், மறக்காமல் பதிவு செய்யும் களம்,  “மனித தெய்வங்களும் சில சேகரிப்புக்களும் “  - rssairam.blogspot.com - -வலைப்பூ !

வெளிப்படையாகச் செய்யப்படும் செயல்கள் அனைத்திலுமே  பொது நன்மை  மேலோங்கியிருக்கும்.

http://www.openreadingroom.com http://www.openreadingroom.com இந்த இணையதளத்திலும் அத்தன்மையே ஒளிர்கின்றது. அரசியல். ஆன்மிகம், இசை, இலக்கணம். உடல்நலம், எழுத்தாளர்கள் எனப் பல பிரிவுகள் உள்ளன.  அனைத்தின் மூலமாகவும் தமிழை உலகம் முழுவதும் உலாவரச் செய்து வருகின்றார்.

அசோக மித்திரனும் கிடைப்பார். சின்னப்பா பாகவதரின் கதையையும்   படிக்கலாம். விந்தனும் நமக்காகக் காத்திருக்கின்றார். ஸ்ரீரங்கம் சுஜாதாவும் , குன்றக்குடி அடிகளாரும் உலா வருகின்றனர்.நாம் எதிர்பார்க்கும் பல படைப்பாளிகளின் பங்களிப்பும் உண்டு. வல்லிக்கண்ணனின் பெயர்க் காரணமும் தெரியவரும்.

சிறியன் சிந்திக்காத வல்லிக்கண்ணனும் அன்புடன் அழைக்கின்றார். “ சிறியன சிந்தியாதான், வல்லிக்கண்ணன் “ என்பது ஒரு நூலின் தலைப்பு. இதுபோன்று, ஒருவரைப் புகழ்ந்துரைக்கும் வார்த்தைகள் விக்கிபீடியாவில் இடம்பெறக் கூடாதாம். தமிழ் விக்கிபீடியா பொறுப்பாளர்கள் அதனை நீக்கிவிட்டனர். ஆனால், அந்த நூல் தந்த விபரங்கள் முழுவதையும் ஏற்றுக் கொண்டு விட்டனர். இத்தகு  தடைகளைத் தகர்த்து, தெரிந்த நல்ல ஆவணப்பதிவுகளை  தமிழ் விக்கிபீடியாக்களில் உருவாக்கிட இதுபோன்றதளங்களும், ,அவற்றை இயக்குவோரும் துணை நிற்பர் என்பதே எம்போன்றோர் எதிர்பார்ப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வலைத்தளத்தில் இன்னொரு சிறப்பான வசதியும் இருக்கின்றது. அது ரகசியம். பரம ரகசியம். தெரிந்துகொள்ள விரும்புவோர் செல்க. காண்க. பயன்படுத்திப் பலன் பெறுக.  

எல்லாமே தனிமனித உபயோகத்திற்காகத்தான் !  வியாபாரத்திற்கல்ல !   

இணையதள உரிமையாளர் என்ன சொல்கின்றார்?

Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in the public domain for free download. Close to a thousand works are now permanently available at a single resource for the benefit of the Tamil diaspora scattered across the globe.

The project was conceptualized and commissioned by Ramesh Chakrapani, a Singapore-based journalist and Tamil enthusiast.

The free Internet Tamil library includes a wide range of narrative prose such as the novel, the short story, autobiography, travelogue, commentary, children’s literature and translation. Many of the writers featured here played an integral role in the evolution of contemporary Tamil literature. We hope you find the content useful and the web site easy to navigate.

Do let us know how we can do better, and please spread the word.The First 1,000!  (old)

Today, our little Tamil archive hit the 1,000 mark! It is also, coincidentally, the day of the birth of this blog. There are now officially more than one thousand Tamil books for download, and that includes entire novels, short stories, anthologies, poetry collections, essays and essay collections, travelogues, plays and plenty of other category non-fiction. The number of individual works, of course, has long crossed the 1,000 mark since many of the files are collections.

We hope you find this site useful. We plan to keep adding as much public domain material as we can locate and organize. Please spread the word if you liked our little corner of the Web. Feedback and suggestions on content and design are most welcome.

Friday, September 28, 2012

   
நுட்பமான பதிப்பு வரலாறு

புத்தகங்கள் வாங்கும்போது எல்லோரும் பார்ப்பது விலையைத்தான். வாங்குவதற்குக் கட்டுப்படியாகிற விலையா என்பதே பலரின் ஆர்வம். நல்ல புத்தகம் - படிக்க வேண்டிய புத்தகம் என்று மனம் சொன்னாலும் விலை வாசகனின் கையை இறக்கி விடுவதுண்டு. எந்தப் புத்தகமானாலும் பதிப்பிக்கப்பட்ட ஆண்டினையோ எத்தனையாவது பதிப்பு என்பதையோ பொதுவாக வாசக மனம் பொருட்படுத்துவதில்லை. ஆய்வு மனம் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல இப்போது முதற்பதிப்பு என்று குறிப்பிட்டு வெளிவருகிறது. இது ஏற்கெனவே வெளிவந்திருப்பதாகத் தெரிகிறதே என்று கேட்டால் எங்கள் பதிப்பகம் சார்பில் இதுதான் முதல் பதிப்பு என்கிறார்கள். 

ஒரு புத்தகம் முதற்பதிப்பு கண்டது எப்போது? அடுத்தடுத்த பதிப்புகள் எப்போது வந்தன - இதற்கான தேவை என்னவாக இருந்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதுவது வரலாற்றுக்கு உதவி செய்யும்.

சில ஆசிரியர்கள் பதிப்பு வாரியாக முன்னுரை எழுதியிருப்பார்கள். சிலர் நூலுக்குள்ளேயே திருத்தம் செய்திருப்பார்கள். சிலரோ நூலுக்குள் திருத்தாமல் அடுத்தப் பதிப்பின்போது எவை எவை செய்ய வேண்டிய திருத்தங்களாகவோ சேர்க்க வேண்டிய பகுதிகளாகவோ இருந்தன என்பதை முன்னுரையிலேயே எழுதி முடிப்பார்கள். இதையெல்லாம் பார்த்தால் ஏன் இப்படி பக்கங்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.

ஆனால், அண்மைக் காலமாகப் பெருகிவரும் பதிப்பு வரலாற்று முயற்சிகள் இது போன்ற குறிப்புகளும் முன்னுரைகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும்.


முனைவர் அ. செல்வராசு எழுதியுள்ள புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) ஆய்வு நூலினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்தக் கருத்து மேலும் வலுவானது.

புறநானூற்றை தமிழ் தாத்தா உ.வே.சா தொடங்கி (1894) ம.வே. பசுபதி (2010) வரை 31 பேர் பதிப்பித்துள்ளனர். இத்தனைப் பதிப்புகள் எதற்காக? இவற்றின் சிறப்பு அம்சம் என்ன? இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? உண்டாயின் எத்தகைய வேறு பாடு? என நுட்பமாக அலசி ஆராய்வதாக இந்த நூல் அமைந்துள்ளது. உ.வே.சா உரை எழுதவில்லை. பெயர் தெரியாத ஒருவர் எழுதிய உரையை செம்மை செய்து பதிப்பித்தி ருக்கிறார். அந்தப் பெயர் தெரியாதவர் இன்னமும் தெரியாதவராகவே இருப்பதுதான் வரலாற்று விந்தை.

ஒவ்வொருவர் பதிப்பிக்கும்போது முன்னுரையில் காரணங்கள் குறிப்பிட்டிருப்பது அவர்தம் நேர்மையும் உதவியோர் பெயர்களைச் சுட்டி நன்றி தெரிவித்திருப்பது அவர் தம் பண்பையும் காட்டுகிறது. அதே சமயம் இன்று புறநானூற்றுச் செய்யுள்கள் பாட நூலாக இருப்பினும் இவை எந்தப் பதிப்பைஆதாரமாகக் கொண்டது என்ற குறிப்பின் மையை நூலாசிரியர் மறக்காமல் சுட்டிச் செல்கிறார்.

புறநானூற்று எளிய உரை கண்டவர் புலியூர்க்கேசிகன் என்றால், மரபுக் கவிதைகளிலேயே உரை எழுதியவர் ஆர். மதிசேகரன். புதுக்கவிதை பாணியில் உரை எழுதிய வர் சுஜாதா. பொதுவாகப் பாடலைத் தந்துவிட்டு பொருள் கூறுகிற மரபை மீறி முதலில் செய்யுளுக்கான உரை; அதன்பிறகு செய்யுள் என்ற நடையைக் கையாண்டவர் ரா. சீனிவாசன் அவர்கள்.

பாடல்; பாடியவர்; பாடப் பெற்றவர்; திணை; துறை என்ற வழமையாக பதிப்பு முறை யிலிருந்து மாறி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு துணைத் தலைப்பு தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் புலியூர்க்கேசிகன். இவரைத் தொடர்ந்து ஞா. மாணிக்க வாச கன், வ.த. இளங்குமரன், அ.ப. பாலையன் ஆகியோர் பாடல்களுக்குத் தலைப்பிட்டுள் ளனர். இவர்களிலும் ஞா. மாணிக்கவாசகனின் தலைப்புகளை ஆற்று மணலிலும் அதிக நாள் வாழ்க, புலவர் பாடும் புகழ் இருக்க போர் எதற்கு? யானையைப் போகவிடு சோழனை வாழவிடு போன்று கவித்துவமாக உள்ளன.

பாடியவர்களின் பெயர்கள், எண்ணிக்கை, பாடப் பெற்றோரின் பெயர்கள், திணை, துறை போன்றவற்றிலும் பதிப்புகள் பலவற்றிலும் வேறுபாடுகள் இருப்பதையும் முனைவர் செல்வராசு பட்டியலிட்டுள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்திருப்பினும் முழுமையான அதிகாரபூர்வ பதிப்பு இன்னமும் வெளிவரவில்லை என்பதையும் இறுதியாக எடுத்துரைத்துள்ள அவர்,

இனி செய்ய வேண்டிய பதிப்பு எப்படியிருந்தால் பயன் தரத்தக்கதாக இருக்கும் என்பதற்கும் 6 யோசனைகள் கூறியுள்ளார். இந்த யோசனைகளைக் கவனத்தில் கொண்டு புறநானூற்றுக்குப் புதிய பதிப்பினை செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்ப்போமாக!

 நன்றி :- தீக்கதிர்

பழைய மொழி பெயர்ப்பு நூல்களுக்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கும் அண்மைக் காலத்தில் நேர்ந்து வருகிற விபத்து !

   
நுட்பமான பதிப்பு வரலாறு

புத்தகங்கள் வாங்கும்போது எல்லோரும் பார்ப்பது விலையைத்தான். வாங்குவதற்குக் கட்டுப்படியாகிற விலையா என்பதே பலரின் ஆர்வம். நல்ல புத்தகம் - படிக்க வேண்டிய புத்தகம் என்று மனம் சொன்னாலும் விலை வாசகனின் கையை இறக்கி விடுவதுண்டு. எந்தப் புத்தகமானாலும் பதிப்பிக்கப்பட்ட ஆண்டினையோ எத்தனையாவது பதிப்பு என்பதையோ பொதுவாக வாசக மனம் பொருட்படுத்துவதில்லை. ஆய்வு மனம் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல இப்போது முதற்பதிப்பு என்று குறிப்பிட்டு வெளிவருகிறது. இது ஏற்கெனவே வெளிவந்திருப்பதாகத் தெரிகிறதே என்று கேட்டால் எங்கள் பதிப்பகம் சார்பில் இதுதான் முதல் பதிப்பு என்கிறார்கள். 

ஒரு புத்தகம் முதற்பதிப்பு கண்டது எப்போது? அடுத்தடுத்த பதிப்புகள் எப்போது வந்தன - இதற்கான தேவை என்னவாக இருந்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதுவது வரலாற்றுக்கு உதவி செய்யும்.

சில ஆசிரியர்கள் பதிப்பு வாரியாக முன்னுரை எழுதியிருப்பார்கள். சிலர் நூலுக்குள்ளேயே திருத்தம் செய்திருப்பார்கள். சிலரோ நூலுக்குள் திருத்தாமல் அடுத்தப் பதிப்பின்போது எவை எவை செய்ய வேண்டிய திருத்தங்களாகவோ சேர்க்க வேண்டிய பகுதிகளாகவோ இருந்தன என்பதை முன்னுரையிலேயே எழுதி முடிப்பார்கள். இதையெல்லாம் பார்த்தால் ஏன் இப்படி பக்கங்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.

ஆனால், அண்மைக் காலமாகப் பெருகிவரும் பதிப்பு வரலாற்று முயற்சிகள் இது போன்ற குறிப்புகளும் முன்னுரைகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும்.


முனைவர் அ. செல்வராசு எழுதியுள்ள புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) ஆய்வு நூலினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்தக் கருத்து மேலும் வலுவானது.

புறநானூற்றை தமிழ் தாத்தா உ.வே.சா தொடங்கி (1894) ம.வே. பசுபதி (2010) வரை 31 பேர் பதிப்பித்துள்ளனர். இத்தனைப் பதிப்புகள் எதற்காக? இவற்றின் சிறப்பு அம்சம் என்ன? இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? உண்டாயின் எத்தகைய வேறு பாடு? என நுட்பமாக அலசி ஆராய்வதாக இந்த நூல் அமைந்துள்ளது. உ.வே.சா உரை எழுதவில்லை. பெயர் தெரியாத ஒருவர் எழுதிய உரையை செம்மை செய்து பதிப்பித்தி ருக்கிறார். அந்தப் பெயர் தெரியாதவர் இன்னமும் தெரியாதவராகவே இருப்பதுதான் வரலாற்று விந்தை.

ஒவ்வொருவர் பதிப்பிக்கும்போது முன்னுரையில் காரணங்கள் குறிப்பிட்டிருப்பது அவர்தம் நேர்மையும் உதவியோர் பெயர்களைச் சுட்டி நன்றி தெரிவித்திருப்பது அவர் தம் பண்பையும் காட்டுகிறது. அதே சமயம் இன்று புறநானூற்றுச் செய்யுள்கள் பாட நூலாக இருப்பினும் இவை எந்தப் பதிப்பைஆதாரமாகக் கொண்டது என்ற குறிப்பின் மையை நூலாசிரியர் மறக்காமல் சுட்டிச் செல்கிறார்.

புறநானூற்று எளிய உரை கண்டவர் புலியூர்க்கேசிகன் என்றால், மரபுக் கவிதைகளிலேயே உரை எழுதியவர் ஆர். மதிசேகரன். புதுக்கவிதை பாணியில் உரை எழுதிய வர் சுஜாதா. பொதுவாகப் பாடலைத் தந்துவிட்டு பொருள் கூறுகிற மரபை மீறி முதலில் செய்யுளுக்கான உரை; அதன்பிறகு செய்யுள் என்ற நடையைக் கையாண்டவர் ரா. சீனிவாசன் அவர்கள்.

பாடல்; பாடியவர்; பாடப் பெற்றவர்; திணை; துறை என்ற வழமையாக பதிப்பு முறை யிலிருந்து மாறி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு துணைத் தலைப்பு தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் புலியூர்க்கேசிகன். இவரைத் தொடர்ந்து ஞா. மாணிக்க வாச கன், வ.த. இளங்குமரன், அ.ப. பாலையன் ஆகியோர் பாடல்களுக்குத் தலைப்பிட்டுள் ளனர். இவர்களிலும் ஞா. மாணிக்கவாசகனின் தலைப்புகளை ஆற்று மணலிலும் அதிக நாள் வாழ்க, புலவர் பாடும் புகழ் இருக்க போர் எதற்கு? யானையைப் போகவிடு சோழனை வாழவிடு போன்று கவித்துவமாக உள்ளன.

பாடியவர்களின் பெயர்கள், எண்ணிக்கை, பாடப் பெற்றோரின் பெயர்கள், திணை, துறை போன்றவற்றிலும் பதிப்புகள் பலவற்றிலும் வேறுபாடுகள் இருப்பதையும் முனைவர் செல்வராசு பட்டியலிட்டுள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்திருப்பினும் முழுமையான அதிகாரபூர்வ பதிப்பு இன்னமும் வெளிவரவில்லை என்பதையும் இறுதியாக எடுத்துரைத்துள்ள அவர்,

இனி செய்ய வேண்டிய பதிப்பு எப்படியிருந்தால் பயன் தரத்தக்கதாக இருக்கும் என்பதற்கும் 6 யோசனைகள் கூறியுள்ளார். இந்த யோசனைகளைக் கவனத்தில் கொண்டு புறநானூற்றுக்குப் புதிய பதிப்பினை செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்ப்போமாக!

 நன்றி :- தீக்கதிர்
நூலாசிரியர் .. கண்ணன் விருதுநகர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கப் பொறுப்பாளராக இருந்தபோது, நான் மூட்டா சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தேன். எனவே அப்போதே அவருடன் நெருக்கமான அறிமுகம் இருந்தது.

 பின்னர் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணி யாற்றிய போதும் எங்களுக்கிடையே தோழமை தொடர்ந்தது. இயக்கப் பணியாற்றுவதோடு எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவர் கண்ணன் என்பது அவரது எழுத்துக்களைப் பல்வேறு இதழ்களில் படித்து வருபவர்களுக்குத் தெரியும். தன்னுடைய அனுபவங்களி லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையான வேலையின்மை குறித்து இந்த நூலில் அலசி ஆராய்கிறார் கண்ணன்.

எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் ஆட்கள் பற்றாக்குறை என்ற குரல்
கேட்பதையும், மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு சேவை வழங்குவதற்குத் தேவையான அரசுக் கட்டமைப்பு பற்றிய ஆய்வை அரசு மேற்கொள்ளாததையும் முன்னுரை எழுதியுள்ள வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் நய மாக எடுத்துரைக்கிறார்.

வளர்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கும் ஆசிரியர், வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி, வேலை இழப்பு வளர்ச்சி, ஒழிக்கப் படும் சமூக நீதி, கொடிய முதலாளித்துவம், இடம் பெயர்தலின் வலி என வேலையின்மையின் பல் வேறு அம்சங்களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு முத்தாய்ப்பாக சமூகப் பாதுகாப்புட னான வேலையைப் பெறுவதற்கான பயணம் எத்தகையதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

காங்கிரஸ், பாஜக என எந்த அரசானாலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகி வந்துள்ளது, ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கையில் இந்தியா 138வது இடத் தில் கீழே இருப்பது, 92 சதமானக் குடும்பங்களின் வருமானம் முறைசாராத் தொழில் களைச் சார்ந்தே  இருக்கின்றன 

பன்னாட்டு நிறுவனங்களின் நவீன தொழில்களில் தொழிற் சங்க உரிமைகள் பறிபோவது, வேலையின்மை காரணமாக சாதி, இன, மத வன்முறைகள் அதிகரிப்பது, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுவதால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் சுருங்குவது, மாறாகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் பெருகி வருவது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அரசு செய்யும் ஏமாற்று வேலைகள், நிலக்குவியல்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் கை கோர்த்து உழைப்பாளி மக்களைச் சுரண்டுவது, உலகமயமாக்கலுக்குப் பின் நடக்கும் இடம் பெயர்தல் - அதனால் ஏற்படும் இன்னல்கள்.. என வேலையின்மையின் அனைத்துப் பரிமாணங்களையும் நூலாசிரியர் தெளிவாக நம்முன் எடுத்துவைக்கிறார்.

இளைஞர்கள் ஏதாவதொரு வேலை கிடைத்ததுமே திருப்தியடைந்து விடக்கூடாது. அந்த வேலைக்குக் கொடுக்கப்படும் ஊதியம், ஆண்டு உயர்வூதியம், விடுப்பு வசதிகள், ஓய்வூதியப் பலன்கள் எல்லாம் அடங்கிய சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையாக அது இருக்கி றதா? என்பது முக்கியம் என வலியுறுத்துகிறார் கண்ணன்.

“சமூக மாற்றம் இல்லாமல் அரசு பின்பற்றும் கொள்கை மாறாது. கொள்கை மாறாமல் வேலை வாய்ப்பை அரசு உத்தரவாதம் செய்யாது. எனவே, ஒட்டு மொத்த சமூகப் பிரச்ச னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை மாற வேண்டும்” என்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இலக்கைக் கூறி இந்தப் பரிசீலனையை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் சுமார் 54 கோடிப் பேர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பலம் அறியாது அடிமைகளாகக் காலம் கழித்து வருகின்றனர்.

 வேலையின்மைக்குக் காரணமாக தலைவிதி, ஆண் டவன் அருள், பிறந்த நேரம், ஜாதகம் போன்ற பல்வேறு ஊர்போய்ச் சேராத நம்பிக்கைகளை அவர்கள் உதறித் தள்ளிவிட்டு, வாலிபர் சங்கம் காட்டும் பாதையில் அணிவகுத்தால் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை தங்களுக்கும் இந்தியாவுக்கும் பெற்றுத்தர முடியும்.

அதற்குத் தேவை விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வைப் பெற இந்த நூல் ஒரு கையேடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



நன்றி :- தீக்கதிர்

”விழிப்புணர்வு “ பெற ஒரு கையேடாகும் !

நூலாசிரியர் .. கண்ணன் விருதுநகர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கப் பொறுப்பாளராக இருந்தபோது, நான் மூட்டா சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தேன். எனவே அப்போதே அவருடன் நெருக்கமான அறிமுகம் இருந்தது.

 பின்னர் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணி யாற்றிய போதும் எங்களுக்கிடையே தோழமை தொடர்ந்தது. இயக்கப் பணியாற்றுவதோடு எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவர் கண்ணன் என்பது அவரது எழுத்துக்களைப் பல்வேறு இதழ்களில் படித்து வருபவர்களுக்குத் தெரியும். தன்னுடைய அனுபவங்களி லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையான வேலையின்மை குறித்து இந்த நூலில் அலசி ஆராய்கிறார் கண்ணன்.

எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் ஆட்கள் பற்றாக்குறை என்ற குரல்
கேட்பதையும், மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு சேவை வழங்குவதற்குத் தேவையான அரசுக் கட்டமைப்பு பற்றிய ஆய்வை அரசு மேற்கொள்ளாததையும் முன்னுரை எழுதியுள்ள வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் நய மாக எடுத்துரைக்கிறார்.

வளர்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கும் ஆசிரியர், வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி, வேலை இழப்பு வளர்ச்சி, ஒழிக்கப் படும் சமூக நீதி, கொடிய முதலாளித்துவம், இடம் பெயர்தலின் வலி என வேலையின்மையின் பல் வேறு அம்சங்களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு முத்தாய்ப்பாக சமூகப் பாதுகாப்புட னான வேலையைப் பெறுவதற்கான பயணம் எத்தகையதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

காங்கிரஸ், பாஜக என எந்த அரசானாலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகி வந்துள்ளது, ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கையில் இந்தியா 138வது இடத் தில் கீழே இருப்பது, 92 சதமானக் குடும்பங்களின் வருமானம் முறைசாராத் தொழில் களைச் சார்ந்தே  இருக்கின்றன 

பன்னாட்டு நிறுவனங்களின் நவீன தொழில்களில் தொழிற் சங்க உரிமைகள் பறிபோவது, வேலையின்மை காரணமாக சாதி, இன, மத வன்முறைகள் அதிகரிப்பது, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுவதால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் சுருங்குவது, மாறாகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் பெருகி வருவது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அரசு செய்யும் ஏமாற்று வேலைகள், நிலக்குவியல்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் கை கோர்த்து உழைப்பாளி மக்களைச் சுரண்டுவது, உலகமயமாக்கலுக்குப் பின் நடக்கும் இடம் பெயர்தல் - அதனால் ஏற்படும் இன்னல்கள்.. என வேலையின்மையின் அனைத்துப் பரிமாணங்களையும் நூலாசிரியர் தெளிவாக நம்முன் எடுத்துவைக்கிறார்.

இளைஞர்கள் ஏதாவதொரு வேலை கிடைத்ததுமே திருப்தியடைந்து விடக்கூடாது. அந்த வேலைக்குக் கொடுக்கப்படும் ஊதியம், ஆண்டு உயர்வூதியம், விடுப்பு வசதிகள், ஓய்வூதியப் பலன்கள் எல்லாம் அடங்கிய சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையாக அது இருக்கி றதா? என்பது முக்கியம் என வலியுறுத்துகிறார் கண்ணன்.

“சமூக மாற்றம் இல்லாமல் அரசு பின்பற்றும் கொள்கை மாறாது. கொள்கை மாறாமல் வேலை வாய்ப்பை அரசு உத்தரவாதம் செய்யாது. எனவே, ஒட்டு மொத்த சமூகப் பிரச்ச னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை மாற வேண்டும்” என்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இலக்கைக் கூறி இந்தப் பரிசீலனையை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் சுமார் 54 கோடிப் பேர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பலம் அறியாது அடிமைகளாகக் காலம் கழித்து வருகின்றனர்.

 வேலையின்மைக்குக் காரணமாக தலைவிதி, ஆண் டவன் அருள், பிறந்த நேரம், ஜாதகம் போன்ற பல்வேறு ஊர்போய்ச் சேராத நம்பிக்கைகளை அவர்கள் உதறித் தள்ளிவிட்டு, வாலிபர் சங்கம் காட்டும் பாதையில் அணிவகுத்தால் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை தங்களுக்கும் இந்தியாவுக்கும் பெற்றுத்தர முடியும்.

அதற்குத் தேவை விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வைப் பெற இந்த நூல் ஒரு கையேடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



நன்றி :- தீக்கதிர்

Wednesday, September 26, 2012

Re: FLYING OVER AMERICA
Inbox
x

karthi keyan karthiinfo777@gmail.com
17:46 (18 hours ago)

to tamizhsiragugal
பிரமிப்பை உண்டுபண்ணியது

On 23 August 2012 17:36, Rajinikanth <rajinikanth.v@gmail.com> wrote:


I doubt you have ever seen anything like this one!
Click Your Mouse on this plane:
  http://www.youtube.com/watch_popup?v=KcuDdPo0WZk

விமானத்தைச் சொடுக்குங்கள்! அமெரிக்காவைப் பாருங்கள் !

Re: FLYING OVER AMERICA
Inbox
x

karthi keyan karthiinfo777@gmail.com
17:46 (18 hours ago)

to tamizhsiragugal
பிரமிப்பை உண்டுபண்ணியது

On 23 August 2012 17:36, Rajinikanth <rajinikanth.v@gmail.com> wrote:


I doubt you have ever seen anything like this one!
Click Your Mouse on this plane:
  http://www.youtube.com/watch_popup?v=KcuDdPo0WZk


  
திருக்கோவிலூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டால் தென்பெண்ணையாறு நாளுக்குநாள் பாலைவனமாய் மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கிய நகரமான திருக்கோவிலூர் நகரத்தையொட்டிச் செல்லும் தென்பெண்ணையாறு, சுற்றுப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தின் மூலதனமாகவும் விளங்கிவருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட சாத்தனூர் அணை, அதன்பின் கட்டப்பட்ட திருக்கோவிலூர் அணை ஆகியவற்றின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றிக் கடலூர் மாவட்டமும் விவசாயத்தில் செழிப்படைந்து வந்தது.

ஆனால் சமீபகாலமாகத் தென்பெண்ணையாற்றின் பல பகுதிகளில் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாலும், அரசுக் குவாரிகள் விதிமுறைகளுக்கு மாறாகவும், முறைகேடாகவும் செயல்படுவதாலும் மணல்வளம் குன்றி தென்பெண்ணையாறு பொட்டல் காடாகக் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக வயல்வெளிப் பரப்புகளுக்கு மத்தியில்தான் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். சில சமயம் ஆற்றில் சிறிதளவு நீர் இருக்கும்போது கால்நடைகள் நீர் பருகுவதற்கும், மேய்ச்சலுக்காகவும் அவற்றை ஓட்டிச்செல்வது வழக்கம். தற்போது அதற்கும் வழியில்லாமல் ஆகிவிட்டது.

ஆற்றில் நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் நீரின் சுவையும் மாறிவிட்டது. இதுமட்டுமின்றி அருகிலுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் நாளுக்குநாள் வேகமாகக் குறைந்து வருகிறது.

இங்கிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொண்டுச் செல்லப்பட்ட குடிநீரும் துவர்ப்பாகி சுவை மாறிப்போனதால், அத்தண்ணீரை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வந்த மக்கள், இன்று காசு கொடுத்துத் தண்ணீர்க் கேன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இயற்கை வளத்தைப் பாதுகாத்திட, மாட்டு வண்டி மணல் திருட்டைத் தடுத்திட, விதிமீறும் அரசு குவாரி மற்றும் திருட்டுத்தனமாக செயல்பட்டுவரும் தனியார் மணல் சேமிப்புக் கிடங்குகள் குறித்து அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி :- தினமணி, 26-09-2012

பாலைவனமாகிவரும் தென்பெண்ணை ஆறு - கே.சத்திய மூர்த்தி



  
திருக்கோவிலூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டால் தென்பெண்ணையாறு நாளுக்குநாள் பாலைவனமாய் மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கிய நகரமான திருக்கோவிலூர் நகரத்தையொட்டிச் செல்லும் தென்பெண்ணையாறு, சுற்றுப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தின் மூலதனமாகவும் விளங்கிவருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட சாத்தனூர் அணை, அதன்பின் கட்டப்பட்ட திருக்கோவிலூர் அணை ஆகியவற்றின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றிக் கடலூர் மாவட்டமும் விவசாயத்தில் செழிப்படைந்து வந்தது.

ஆனால் சமீபகாலமாகத் தென்பெண்ணையாற்றின் பல பகுதிகளில் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாலும், அரசுக் குவாரிகள் விதிமுறைகளுக்கு மாறாகவும், முறைகேடாகவும் செயல்படுவதாலும் மணல்வளம் குன்றி தென்பெண்ணையாறு பொட்டல் காடாகக் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக வயல்வெளிப் பரப்புகளுக்கு மத்தியில்தான் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். சில சமயம் ஆற்றில் சிறிதளவு நீர் இருக்கும்போது கால்நடைகள் நீர் பருகுவதற்கும், மேய்ச்சலுக்காகவும் அவற்றை ஓட்டிச்செல்வது வழக்கம். தற்போது அதற்கும் வழியில்லாமல் ஆகிவிட்டது.

ஆற்றில் நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் நீரின் சுவையும் மாறிவிட்டது. இதுமட்டுமின்றி அருகிலுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் நாளுக்குநாள் வேகமாகக் குறைந்து வருகிறது.

இங்கிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொண்டுச் செல்லப்பட்ட குடிநீரும் துவர்ப்பாகி சுவை மாறிப்போனதால், அத்தண்ணீரை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வந்த மக்கள், இன்று காசு கொடுத்துத் தண்ணீர்க் கேன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இயற்கை வளத்தைப் பாதுகாத்திட, மாட்டு வண்டி மணல் திருட்டைத் தடுத்திட, விதிமீறும் அரசு குவாரி மற்றும் திருட்டுத்தனமாக செயல்பட்டுவரும் தனியார் மணல் சேமிப்புக் கிடங்குகள் குறித்து அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி :- தினமணி, 26-09-2012

Tuesday, September 25, 2012


          டாக்டர் நடேச முதலியார்







”ஜஸ்டிஸ் கட்சிக்குப் பணம் கிடையாது.இன்ன்றைய தினம் நமது கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள் அங்கத்தினர்களால் அல்ல. நமது எதிரிகளுடைய ( காங்கிரசுடுடைய ) குற்ரங் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்லது ஆகும்.

 இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வகிப்பதாகச் சொல்லும் காங்கிரசின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும். தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

பிராமணர் அல்லாதார் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும் நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்ரி அமைக்காவிட்டால் நம்மால் வெற்ரி பெற முடியாது. தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன் வருவதில்லை.கடந்த 20 வருடங்களாக வாழ்விலும் தாழ்விலும் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும் பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

தற்போதுள்ள கவர்னர், காங்கிரசின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிரார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திடுக்கிறது. இம்மாதிரியான படு மோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.


ஐரோப்பியர்கள் மட்டும் நமது ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டுவிடும்.

தமிழகத்தில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிற மாநிலங்களில் இந்த இயக்கத்திற்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது.டாக்டர் அம்பேத்கரும் சில நண்பர்களும் இந்த இய்க்கத்தைப் பற்ரி மூச்சுக்கூட விடாதே என்று சொல்லி விட்டனர். ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான லட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால்  நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை”.

உண்மையில் இந்த உரையை  1940-ஆம் ஆண்டில் ஈ.வே.ரா. நிகழ்த்தியபோது, தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் கே.சி. லட்சுமிநாராயணன் எழுதிய, திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு என்ற நூலிலில் இருந்து.

வெளியீடு ;- எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை-17
2436 1141, 2434 0599

18-02-1940 , நடேச முதலியார் நினைவுக் கூட்டத்தில் ஈவே.ரா. பேசியதில் ஒரு பகுதி:-


          டாக்டர் நடேச முதலியார்







”ஜஸ்டிஸ் கட்சிக்குப் பணம் கிடையாது.இன்ன்றைய தினம் நமது கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள் அங்கத்தினர்களால் அல்ல. நமது எதிரிகளுடைய ( காங்கிரசுடுடைய ) குற்ரங் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்லது ஆகும்.

 இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வகிப்பதாகச் சொல்லும் காங்கிரசின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும். தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

பிராமணர் அல்லாதார் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும் நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்ரி அமைக்காவிட்டால் நம்மால் வெற்ரி பெற முடியாது. தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன் வருவதில்லை.கடந்த 20 வருடங்களாக வாழ்விலும் தாழ்விலும் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும் பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

தற்போதுள்ள கவர்னர், காங்கிரசின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிரார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திடுக்கிறது. இம்மாதிரியான படு மோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டதில்லை.


ஐரோப்பியர்கள் மட்டும் நமது ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டுவிடும்.

தமிழகத்தில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிற மாநிலங்களில் இந்த இயக்கத்திற்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது.டாக்டர் அம்பேத்கரும் சில நண்பர்களும் இந்த இய்க்கத்தைப் பற்ரி மூச்சுக்கூட விடாதே என்று சொல்லி விட்டனர். ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான லட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால்  நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை”.

உண்மையில் இந்த உரையை  1940-ஆம் ஆண்டில் ஈ.வே.ரா. நிகழ்த்தியபோது, தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் கே.சி. லட்சுமிநாராயணன் எழுதிய, திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு என்ற நூலிலில் இருந்து.

வெளியீடு ;- எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை-17
2436 1141, 2434 0599




தனிமனித விழிப்புணர்வும், கொண்ட குறிக்கோளுக்கு மாற்றமில்லாத உறுதிமிக்கச் செயல்பாடும் படிக்காத மேதை காமராஜருக்குத் தமிழக முதலமைச்சர் பதவியைப் பரிசாக அளித்தது. அவரது இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் தமிழகக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றிடப் பலவகைகளிலும் உதவின. அவரையும், அவரது திட்டங்களுக்குத் துணைநின்ற திரு.நெ.து சுந்தரவடிவேலு அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது அவசியமாகின்றது.!

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், டில்லி உயர்நீதிபதிமன்றத் தலமைப் பொறுப்பேற்கின்றார். தேனி மாவட்டம், கம்பம் வட்டம், சி.புதுப்பெட்டி கிராமத்தில் பிறந்தவர், இந்தியத் தலைநகருக்குச் செல்கின்றார்.

வழக்கறிஞர், அரசுப் பிளிடர், சென்னை உய்ர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி, நிரந்தர நீதிபதி என, 32 ஆண்டுகள் அவரது வாழ்க்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே செலவாகின்றது.

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அவரது வழியனுப்புவிழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த  நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கூட்டம் குறித்துப் பத்திரிக்கைகள், அனைத்தும் பாராட்டுகின்றன. இது வெறும்  நடைமுறைச் சடங்கல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.

தன் பணிகளுக்குக் குடும்பத்தினரும், உறவினர்களும் உற்ற துணையாய்த் திகழ்ந்தனர் என்பதே அவரது நன்றியுரைச் செய்தி.

சாலகளில் விளம்பரப்போர்டுகள் வைக்கத் த்டை, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை, பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்திட ஆணை என, அவர் தீர்ப்பளித்த வழக்குகளின் எண்ணிக்கை 1,26,000 என்ற , தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணனின் பாராட்டுரைத் தகவல்கள் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவை.


தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் டி.முருகேசரை எல்லோருடனும் சேர்ந்து பாராட்டி  வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்வோம்.

கல்விக்கண் திறந்த காமராசரை நினைவு கூர்வோம். தில்லி உயர்நீதிமன்றத் தலைமைப் பொறுப்பேற்கும் டி.முருகேசருக்கு வாழ்த்தும் சொல்வோம் !





தனிமனித விழிப்புணர்வும், கொண்ட குறிக்கோளுக்கு மாற்றமில்லாத உறுதிமிக்கச் செயல்பாடும் படிக்காத மேதை காமராஜருக்குத் தமிழக முதலமைச்சர் பதவியைப் பரிசாக அளித்தது. அவரது இலவசக் கல்வித் திட்டமும், மதிய உணவுத் திட்டமும் தமிழகக் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றிடப் பலவகைகளிலும் உதவின. அவரையும், அவரது திட்டங்களுக்குத் துணைநின்ற திரு.நெ.து சுந்தரவடிவேலு அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது அவசியமாகின்றது.!

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், டில்லி உயர்நீதிபதிமன்றத் தலமைப் பொறுப்பேற்கின்றார். தேனி மாவட்டம், கம்பம் வட்டம், சி.புதுப்பெட்டி கிராமத்தில் பிறந்தவர், இந்தியத் தலைநகருக்குச் செல்கின்றார்.

வழக்கறிஞர், அரசுப் பிளிடர், சென்னை உய்ர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி, நிரந்தர நீதிபதி என, 32 ஆண்டுகள் அவரது வாழ்க்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே செலவாகின்றது.

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் அவரது வழியனுப்புவிழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த  நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கூட்டம் குறித்துப் பத்திரிக்கைகள், அனைத்தும் பாராட்டுகின்றன. இது வெறும்  நடைமுறைச் சடங்கல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.

தன் பணிகளுக்குக் குடும்பத்தினரும், உறவினர்களும் உற்ற துணையாய்த் திகழ்ந்தனர் என்பதே அவரது நன்றியுரைச் செய்தி.

சாலகளில் விளம்பரப்போர்டுகள் வைக்கத் த்டை, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை, பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்திட ஆணை என, அவர் தீர்ப்பளித்த வழக்குகளின் எண்ணிக்கை 1,26,000 என்ற , தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணனின் பாராட்டுரைத் தகவல்கள் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவை.


தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் டி.முருகேசரை எல்லோருடனும் சேர்ந்து பாராட்டி  வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்வோம்.
அமெரிக்க விசா புதிய நடைமுறையினைப் பதிவு செய்வதில் இவ்வளவு அக்கறை எதற்காக என்ற வினவுகின்றீர்களா? 

நம் நாட்டில் ரேஷன் அட்டை முதல் ஒவ்வொன்றிற்கும் நடையாய் நடப்பதில் உள்ள சிக்கல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்,


அமெரிக்கத் தூதரகங்களிலும், அவற்றின் 33  விசா மையங்களிலும் தமிழோசை ஒலிக்கப் போகின்றது என்பதற்காகவும்தான் !

புதிய இணைய தளம் துவக்கம். முகவரி ;- www.ustraveldocs.com/in

ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். விண்ணப்பங்களை நிறைவு செய்து , நேர்காணல் முன்பதிவையும் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர், தொலைபேசி, மின்னஞ்சல், ஆன் லைன் சாட்டிங் மூலமும் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி;- support-india@ustraveldocscom மின்னஞ்சலுக்கு இரு நாட்களில் பதில் கிடைக்கும்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பயன்படுத்த வேண்டிய எண்கள் :-
 ( 91-120 ) 660-2222 அல்லது ( 91-22 ) 6720-9400 .

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் , ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மேற்படி எண்களில் தொடர்பு கொண்டு பேச முடியும்.

அமெரிக்காவிலிருந்து அழைத்தால், 1-301-616-5424 என்ற எண்னிலிருந்து பதில் கிடைக்கும்.

தமிழ், தெலுங்கு,  குஜராத்தி,  பஞ்சாபி ,   இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொலைபேசிகளில் பயன்படுத்தலாம்.

இந்த அழைப்பு மைய எண்களைத் தொடர்பு கொள்ளக் கட்டணம் எதுவும் கிடையாது.

அழைப்பு மைய அலுவலக நேரங்களில் இணைய தளம் மூலமாக உரையாடலாம். விசா விண்ணப்பக் கட்டணத்தை  ஆக்ஸிஸ் , மற்றும் சிட்டி பேஙின் 1800-க்கும் மேற்பட்ட கிளைகளில் ரொக்கமாகச் செலுத்தலாம்.  மின்னணுப் பணப் பரிவர்த்தனையையும் - EFT- பயன்படுத்தலாம். அல்லது கைபேசி வழியாகவும் செலுத்தலாம்.

நேர்காணலுக்காக இரண்டு வெவ்வேறு  நேரங்களில் முன்பதிவைச் செய்தல் வேண்டும்.  கைரேகைப் பதிவிற்கு ஒன்று. மற்றொன்று.நேர்காணலுக்கானது. குழுவாகவும் முன்பதிவு செய்யலாம். கைரேகைப் பதிவு செய்ய அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று அவசியம் தேவை.

நேர்காணல் முடிந்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட், விசா, குடியேற்ற விசா உள்ளிட்ட இதர ஆவணங்கள் நாட்டில் உள்ள 33 மையங்கள் மூலமாகத் திருப்பி அளிக்கப்படும். நேர்காணலுக்கான முன்பதிவின்போதே ஆவணங்களைப் பெற்வதற்கான மையத்தையும் விண்னப்பதாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 விசா விண்னப்ப நிலவரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றம் எதுவும் இல்லை.  பல முறை சென்று வரக்கூடிய 10 ஆண்டு விசா வழங்கும் முறையும் தொடரும். அமெரிக்க விசாப் பிரிவுத் தலைமை அதிகாரி ஜூலியா ஸ்டான்லி தரும் தகவல்கள் இவை.நாளை முதல் நடைமுறையில்!

நன்றி:-
தினமணி 25, செப்டம்பர், 2012, நாளிதழ். 

இந்தியாவில் உள்ள அமெரிக்கா விசா மையங்களில் தமிழோசை, நாளை முதல்!

அமெரிக்க விசா புதிய நடைமுறையினைப் பதிவு செய்வதில் இவ்வளவு அக்கறை எதற்காக என்ற வினவுகின்றீர்களா? 

நம் நாட்டில் ரேஷன் அட்டை முதல் ஒவ்வொன்றிற்கும் நடையாய் நடப்பதில் உள்ள சிக்கல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்,


அமெரிக்கத் தூதரகங்களிலும், அவற்றின் 33  விசா மையங்களிலும் தமிழோசை ஒலிக்கப் போகின்றது என்பதற்காகவும்தான் !

புதிய இணைய தளம் துவக்கம். முகவரி ;- www.ustraveldocs.com/in

ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். விண்ணப்பங்களை நிறைவு செய்து , நேர்காணல் முன்பதிவையும் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர், தொலைபேசி, மின்னஞ்சல், ஆன் லைன் சாட்டிங் மூலமும் தொடர்பு கொள்ளலாம். ஆங்கிலம் அல்லது இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி;- support-india@ustraveldocscom மின்னஞ்சலுக்கு இரு நாட்களில் பதில் கிடைக்கும்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பயன்படுத்த வேண்டிய எண்கள் :-
 ( 91-120 ) 660-2222 அல்லது ( 91-22 ) 6720-9400 .

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் , ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மேற்படி எண்களில் தொடர்பு கொண்டு பேச முடியும்.

அமெரிக்காவிலிருந்து அழைத்தால், 1-301-616-5424 என்ற எண்னிலிருந்து பதில் கிடைக்கும்.

தமிழ், தெலுங்கு,  குஜராத்தி,  பஞ்சாபி ,   இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தொலைபேசிகளில் பயன்படுத்தலாம்.

இந்த அழைப்பு மைய எண்களைத் தொடர்பு கொள்ளக் கட்டணம் எதுவும் கிடையாது.

அழைப்பு மைய அலுவலக நேரங்களில் இணைய தளம் மூலமாக உரையாடலாம். விசா விண்ணப்பக் கட்டணத்தை  ஆக்ஸிஸ் , மற்றும் சிட்டி பேஙின் 1800-க்கும் மேற்பட்ட கிளைகளில் ரொக்கமாகச் செலுத்தலாம்.  மின்னணுப் பணப் பரிவர்த்தனையையும் - EFT- பயன்படுத்தலாம். அல்லது கைபேசி வழியாகவும் செலுத்தலாம்.

நேர்காணலுக்காக இரண்டு வெவ்வேறு  நேரங்களில் முன்பதிவைச் செய்தல் வேண்டும்.  கைரேகைப் பதிவிற்கு ஒன்று. மற்றொன்று.நேர்காணலுக்கானது. குழுவாகவும் முன்பதிவு செய்யலாம். கைரேகைப் பதிவு செய்ய அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று அவசியம் தேவை.

நேர்காணல் முடிந்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட், விசா, குடியேற்ற விசா உள்ளிட்ட இதர ஆவணங்கள் நாட்டில் உள்ள 33 மையங்கள் மூலமாகத் திருப்பி அளிக்கப்படும். நேர்காணலுக்கான முன்பதிவின்போதே ஆவணங்களைப் பெற்வதற்கான மையத்தையும் விண்னப்பதாரர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 விசா விண்னப்ப நிலவரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றம் எதுவும் இல்லை.  பல முறை சென்று வரக்கூடிய 10 ஆண்டு விசா வழங்கும் முறையும் தொடரும். அமெரிக்க விசாப் பிரிவுத் தலைமை அதிகாரி ஜூலியா ஸ்டான்லி தரும் தகவல்கள் இவை.நாளை முதல் நடைமுறையில்!

நன்றி:-
தினமணி 25, செப்டம்பர், 2012, நாளிதழ். 


    பரிசைப் பெற்றுக் கொள்பவர்,   தியாகி  ஐ. மாயாண்டி பாரதி
             
இந்திய விடுதலைப் போராட்டம் வெறும் அகிம்சைப் போராட்டமல்ல; இந்திய விடுதலை அதனால் மட்டும் கிடைத்ததல்ல; எண்ணற்ற வீரர்களும் வீராங்கனைகளும் மக்கள் திரளும் செய்த தியாகத்தினாலும் நடத்திய வீர தீரப் போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் ஆயுதமேந்தியப் புரட்சிகளாலும்தான்.

இதைச் சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்ட, இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தியாகி ஐ.மாயாண்டிபாரதி தம்முடைய பாணியில் இன்றைய இளம் தலைமுறைக்கு மட்டுமல்லாது

50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் நினைவூட்டும் வகையிலே உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறார்.

"50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கட்டாயம் தெரிந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை எல்லாம் தெரிந்திருக்கிறார்களா?" என்று கேட்கிறார்.

அவரே பதில் கூறுகிறார். "ஆம்... அறிந்திருக்கிறார்கள்... மேம்போக்காக... அங்கொன்றும் இங்கொன்றுமாக. காரணம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கவில்லை."

அப்படிச் சொல்லிக் கொடுக்காத நிகழ்வுகளை எல்லாம் ஐ.மா.பா, தனது "விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்" நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.

1757 பிளாசிப் போர்இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்த உதவியது. சரியாக நூறாண்டு கழித்து 1857ல் முதல் சுதந்திரப் போர் நிகழ்ந்தது. தோற்றது. எனினும் பற்பல எழுச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் சரஞ்சரமாய் ஒன்றன்பின் ஒன்றாய் நாடு முழுவதும் நடந்தன.

வழக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களால் எழுதப்பட்ட ஒரு சார்பு வரலாறாக இல்லாமல் சாதாரண மக்கள் முதல் பாளையக்காரர்கள் வரை, பகத்சிங் முதல் பல்வேறு புரட்சிக்காரர்கள் வரை பங்கேற்ற போராட்டங்கள் பற்றி எளிமையாக, ஆனால் வலிமையாக சுருக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கத் தொடுத்த சதி வழக்குகள் என 36 வழக்குகளைப் பட்டியல் இட்டிருக்கிறார்.

கலை -இலக்கிய உலகில் நடந்த எதிர்ப்புகளை குறிப்பாக விஸ்வநாததாஸ் பற்றிய நிகழ்வு மூலம் விளக்குகிறார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் முருகனாக நடித்துக்கொண்டு பாடும் ‘கொக்கு பறக்குதடி பாப்பா' பாடலை முழுமையாகத் தந்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களை குறிப்பிட்டிருக்கிறார். சென்னை சதி வழக்கு பற்றி விவரித்திருக்கிறார். சிங்காரவேலர், ஜீவா, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவில் புரட்சி நடத்திய மாமேதை லெனின் , இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலகையே ஹிட்லரிடமிருந்து காப்பாற்றிய சோவியத் நாட்டை ஆண்ட ஜோசப் ஸ்டாலின், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அந்த ஆட்சி உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு வித்திட்டதுபற்றி எல்லாம் எடுத்துரைக்கிறார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், அதன் பெண்கள் பிரிவுத் தலைவி கேப்டன் லட்சுமி, அவர்களது போராட்டம், அதன் தோல்விக்குப்பிறகு போடப்பட்ட வழக்கை எதிர்த்த போராட்டம், 1946 - கப்பற்படை எழுச்சி, அதன் பிறகு பிரிட்டனில் ஏற்பட்ட ஆட்சியாளர்களின் தற்காப்பு மனோநிலை, இதன் விளைவாகவே 1948ல் வழங்கப்படுவதாக இருந்த சுதந்திரம் 1947ல் இந்தியாவுக்குக் கிடைத்தது. ஒரு வருடத்துக்கு முன்பே பழம் பழுக்கக் காரணம் என்ன? என்று அவரது அர்த்தப்பூர்வமான எளிமையான கேள்வி நமக்கு ஆயிரமாயிரமாய் உணர்த்துகிறது.

பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்தின் நோக்கம் என்ன? அதன் நிலைமை எப்படி உள்ளது? எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அழகாகச் சுருக்கமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் உரைத்திருக்கிறார்.

எண்பது பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் பொருத்தமான படங்களுடன் இளைய தலைமுறைக்கு மனதில் பசுமரத்தாணி போல் பதிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

விடுதலைப்போரில் வெடிகுண்டுகளும் வீரத்தியாகங்களும்

ஆசிரியர் : ஐ.மாயாண்டிபாரதி

வெளியீடு: பாரதி பதிப்பகம்,

பாரத மாதா இல்லம், காக்காதோப்புத்தெரு,

மதுரை - 625 001

கைபேசி - 99449 91949

பக்கம் - 80, விலை - ரூ.50/-

நன்றி;- தீக்கதிர் நாளிதழ்

பள்ளிக்கூடத்தில் சொல்லப்படாத வரலாறுகள்...தியாகி ஐ.மாயாண்டி பாரதி


    பரிசைப் பெற்றுக் கொள்பவர்,   தியாகி  ஐ. மாயாண்டி பாரதி
             
இந்திய விடுதலைப் போராட்டம் வெறும் அகிம்சைப் போராட்டமல்ல; இந்திய விடுதலை அதனால் மட்டும் கிடைத்ததல்ல; எண்ணற்ற வீரர்களும் வீராங்கனைகளும் மக்கள் திரளும் செய்த தியாகத்தினாலும் நடத்திய வீர தீரப் போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் ஆயுதமேந்தியப் புரட்சிகளாலும்தான்.

இதைச் சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்ட, இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தியாகி ஐ.மாயாண்டிபாரதி தம்முடைய பாணியில் இன்றைய இளம் தலைமுறைக்கு மட்டுமல்லாது

50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் நினைவூட்டும் வகையிலே உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறார்.

"50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கட்டாயம் தெரிந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை எல்லாம் தெரிந்திருக்கிறார்களா?" என்று கேட்கிறார்.

அவரே பதில் கூறுகிறார். "ஆம்... அறிந்திருக்கிறார்கள்... மேம்போக்காக... அங்கொன்றும் இங்கொன்றுமாக. காரணம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கவில்லை."

அப்படிச் சொல்லிக் கொடுக்காத நிகழ்வுகளை எல்லாம் ஐ.மா.பா, தனது "விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்" நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.

1757 பிளாசிப் போர்இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்த உதவியது. சரியாக நூறாண்டு கழித்து 1857ல் முதல் சுதந்திரப் போர் நிகழ்ந்தது. தோற்றது. எனினும் பற்பல எழுச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் சரஞ்சரமாய் ஒன்றன்பின் ஒன்றாய் நாடு முழுவதும் நடந்தன.

வழக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களால் எழுதப்பட்ட ஒரு சார்பு வரலாறாக இல்லாமல் சாதாரண மக்கள் முதல் பாளையக்காரர்கள் வரை, பகத்சிங் முதல் பல்வேறு புரட்சிக்காரர்கள் வரை பங்கேற்ற போராட்டங்கள் பற்றி எளிமையாக, ஆனால் வலிமையாக சுருக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கத் தொடுத்த சதி வழக்குகள் என 36 வழக்குகளைப் பட்டியல் இட்டிருக்கிறார்.

கலை -இலக்கிய உலகில் நடந்த எதிர்ப்புகளை குறிப்பாக விஸ்வநாததாஸ் பற்றிய நிகழ்வு மூலம் விளக்குகிறார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் முருகனாக நடித்துக்கொண்டு பாடும் ‘கொக்கு பறக்குதடி பாப்பா' பாடலை முழுமையாகத் தந்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களை குறிப்பிட்டிருக்கிறார். சென்னை சதி வழக்கு பற்றி விவரித்திருக்கிறார். சிங்காரவேலர், ஜீவா, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவில் புரட்சி நடத்திய மாமேதை லெனின் , இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலகையே ஹிட்லரிடமிருந்து காப்பாற்றிய சோவியத் நாட்டை ஆண்ட ஜோசப் ஸ்டாலின், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அந்த ஆட்சி உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு வித்திட்டதுபற்றி எல்லாம் எடுத்துரைக்கிறார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், அதன் பெண்கள் பிரிவுத் தலைவி கேப்டன் லட்சுமி, அவர்களது போராட்டம், அதன் தோல்விக்குப்பிறகு போடப்பட்ட வழக்கை எதிர்த்த போராட்டம், 1946 - கப்பற்படை எழுச்சி, அதன் பிறகு பிரிட்டனில் ஏற்பட்ட ஆட்சியாளர்களின் தற்காப்பு மனோநிலை, இதன் விளைவாகவே 1948ல் வழங்கப்படுவதாக இருந்த சுதந்திரம் 1947ல் இந்தியாவுக்குக் கிடைத்தது. ஒரு வருடத்துக்கு முன்பே பழம் பழுக்கக் காரணம் என்ன? என்று அவரது அர்த்தப்பூர்வமான எளிமையான கேள்வி நமக்கு ஆயிரமாயிரமாய் உணர்த்துகிறது.

பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்தின் நோக்கம் என்ன? அதன் நிலைமை எப்படி உள்ளது? எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அழகாகச் சுருக்கமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் உரைத்திருக்கிறார்.

எண்பது பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் பொருத்தமான படங்களுடன் இளைய தலைமுறைக்கு மனதில் பசுமரத்தாணி போல் பதிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

விடுதலைப்போரில் வெடிகுண்டுகளும் வீரத்தியாகங்களும்

ஆசிரியர் : ஐ.மாயாண்டிபாரதி

வெளியீடு: பாரதி பதிப்பகம்,

பாரத மாதா இல்லம், காக்காதோப்புத்தெரு,

மதுரை - 625 001

கைபேசி - 99449 91949

பக்கம் - 80, விலை - ரூ.50/-

நன்றி;- தீக்கதிர் நாளிதழ்
 
 இந்தியாவில் தமிழகம் மட்டும்தான் 170 இடங்களில் தொல் பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தெரிவித்தார்.

ஆலம்பரைக் கோட்டை பற்றிய "தொல்பொருட்களின் கண்காட்சி' எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின், தொல்லியல் துறையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தொடங்கிவைத்து பேசியது:

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே, 170 இடங்களில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வுகள் மூலமாக அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, நாகரிகம், வழிபாடுகள் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்காகத்தான் இந்திய தொல்லியல் துறை 1863-ம் ஆண்டிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1963-ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது. நாணயங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் அரசர்களின் வரலாறு பற்றியும், கல்வெட்டுகள் மூலம் கட்டடக்கலை, ஓவியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அகழ்வாய்வுகளால்தான், தொல் தமிழர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும், அவர்கள் வாணிபம் செய்தது குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும், வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப்பட வேண்டியவை. ஆனால், தற்போது அவ்வாறு செய்வதில்லை என்றார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் வசந்தி கூறியது: ஆலம்பரைக் கோட்டை புதுச்சேரி செல்லும் வழியில், கடப்பாக்கம் அருகில் உள்ளது. கி.பி.17-18ம் நூற்றாண்டுகளில் முகம்மதியர்களால் கட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ஆலம்பரை சிறந்த வாணிகத் துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆலம்பரை ஊரைச் சுற்றி களஆய்வு மேற்கொண்டபோது, அரிய தொல் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அதைத்தான் தற்போது கண்காட்சிக்காக வைத்துள்ளோம்.

செப்.24 (திங்கள்கிழமை) தொடங்கி செப். 28 வரை இந்தக் கண்காட்சி நடத்தப்படும். அழகன்குளம், ஆதங்கப்பள்ளி உட்பட ஐந்து இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

இந்தக் கண்காட்சியில், பானைஓடுகள், பீங்கான் ஓடுகள், பீரங்கி கல் குண்டுகள், கண்ணாடித்துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை மீனாட்சி கல்லூரி தொல்லியல் துறை மாணவிகள் பார்வையிட்டனர்.

நன்றி ;- தினமணி, 25 Sep 2012 02:23:45 AM IST

தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழகம் முதலிடம்: தமிழகத்தில் 170 இடங்களில் ஆய்வு !

 
 இந்தியாவில் தமிழகம் மட்டும்தான் 170 இடங்களில் தொல் பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தெரிவித்தார்.

ஆலம்பரைக் கோட்டை பற்றிய "தொல்பொருட்களின் கண்காட்சி' எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின், தொல்லியல் துறையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தொடங்கிவைத்து பேசியது:

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே, 170 இடங்களில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வுகள் மூலமாக அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, நாகரிகம், வழிபாடுகள் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்காகத்தான் இந்திய தொல்லியல் துறை 1863-ம் ஆண்டிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1963-ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது. நாணயங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் அரசர்களின் வரலாறு பற்றியும், கல்வெட்டுகள் மூலம் கட்டடக்கலை, ஓவியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அகழ்வாய்வுகளால்தான், தொல் தமிழர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும், அவர்கள் வாணிபம் செய்தது குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும், வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப்பட வேண்டியவை. ஆனால், தற்போது அவ்வாறு செய்வதில்லை என்றார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் வசந்தி கூறியது: ஆலம்பரைக் கோட்டை புதுச்சேரி செல்லும் வழியில், கடப்பாக்கம் அருகில் உள்ளது. கி.பி.17-18ம் நூற்றாண்டுகளில் முகம்மதியர்களால் கட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ஆலம்பரை சிறந்த வாணிகத் துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆலம்பரை ஊரைச் சுற்றி களஆய்வு மேற்கொண்டபோது, அரிய தொல் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அதைத்தான் தற்போது கண்காட்சிக்காக வைத்துள்ளோம்.

செப்.24 (திங்கள்கிழமை) தொடங்கி செப். 28 வரை இந்தக் கண்காட்சி நடத்தப்படும். அழகன்குளம், ஆதங்கப்பள்ளி உட்பட ஐந்து இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

இந்தக் கண்காட்சியில், பானைஓடுகள், பீங்கான் ஓடுகள், பீரங்கி கல் குண்டுகள், கண்ணாடித்துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை மீனாட்சி கல்லூரி தொல்லியல் துறை மாணவிகள் பார்வையிட்டனர்.

நன்றி ;- தினமணி, 25 Sep 2012 02:23:45 AM IST

தாய்மொழியில் கல்வி பயின்றால் தான் அடிப்படை அறிவியலைப் புரிந்து படிக்கவும், சாதிக்கவும் முடியும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

அண்மையில் ரிசாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குநரான அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிக்கு மக்கள் மன்றம் சார்பில் பாராட்டு விழா அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விழாக்குழுத் தலைவரும், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவருமான   
சீ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை அருட்சகோதரி வி. பாத்திமா முன்னிலை வகித்தார்.
"அச்சமில்லை' மாத இதழின் ஆசிரியரும், விழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான ந. இறைவன் அறிமுகவுரையாற்றினார். 
விழாவில், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய சிறப்புரை: தமிழ்மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தவர் வளர்மதி என  முனைவர் இராமசாமி குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, அவரும் தமிழ் வழியில் படித்தவர்தான் என்பதைத் தெரிவித்தார். 
 1975-ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் படித்த பெரும்பாலானோர் பள்ளி இறுதிப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள்தான். 
பட்டணத்தில் படித்தால்தான் சாதனைகள் படைக்க முடியும் என்ற ஒரு மாயை எல்லோரிடமும் உள்ளது. உலக அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைத்தவர்கள் யாரும் பட்டணத்தில் படித்தவர்கள் அல்லர் என்பதுதான் வேடிக்கை. 
உதாரணமாக, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று தேடிப் பிடித்துப் பதிப்பித்த உ.வே.சா. உத்தமதானபுரத்தைச் சேர்ந்தவர். பாரதி எட்டயபுரத்துக்காரர். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, அண்ணா உட்பட யாரும் பட்டணத்தில் பிறந்தவர்கள் அல்லர். 
அரியலூரில் படித்தவராலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளார் இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி.
படிப்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒருவர் சாதனை படைக்கப் படிப்பவர். மற்றொருவர் பணம் சம்பாதிக்க படிப்பவர். சென்னையில் படித்தால் பணம்தான் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிக்க நூறாயிரம் வழிகள் உள்ளன.  
நாம் வாழும் இந்தச் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணினால்தான் இங்கு ஏராளமான வளர்மதிகள் உருவாக முடியும். எனவே, பட்டணத்தில் படிக்கவில்லையே என இங்கே குழுமியிருக்கும் மாணவ, மாணவியர் கவலைப்படத் தேவையில்லை. 
கடந்த 15,16 தேதிகளில் தில்லியில் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டைத் தில்லித் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தினமணி சார்பில் நடத்தினோம். அதில் அனைவரும் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். 
தமிழ்நாட்டு மக்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக மாநாடு கூட்டித் தீர்மானம் போட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதற்கு நாம் எல்லோரும் வருந்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழுக்கு ஆபத்து.  

தமிழில் படித்த ஒருவர் விண்ணில் விந்தைகள் செய்து சாதனை படைத்துள்ளார். தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது; சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்பது நான் அரியலூருக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்டுள்ள பல்வேறு செயற்கைக்கோள்கள் விவசாயிகளுக்குத் தேவையான புதிய தகவல்களை அளிக்கிறது. பருவநிலை மாற்றம், வேளாண் குறிப்புகள் என விவசாயிகளுக்குத் தேவையான அரிய, பெரிய தகவல்களை அளித்து வருகிறது இஸ்ரோ. 
இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து விட்டு இங்கு வந்து அமர்ந்துள்ளார் வளர்மதி. பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு வளர்மதி மூலமாக அரியலூர் பதில் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று ஒரு சாதனைப் பெண் இருந்துவிட்டால் பெண் அடிமைத்தனம் தானாகவே ஒழிந்து விடும்.
 
முனைவர் இராமசாமி குறிப்பிட்டது போல் அடிப்படைக் கல்வி சரியாக அமைந்து விட்டால், புரிந்துணர்வுடன் கூடிய கல்வியைப் பெற்று விட்டால், எத்தகைய அறிவியல் சாதனையையும் படைக்க முடியும். அதற்கு அடிப்படையில் தாய்மொழியில் கல்வி அவசியம். பள்ளிக் கல்வி தாய்மொழியில்தான் அமைய வேண்டும். 
விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் விண்ணும், மண்ணும் போற்றும் வகையில் வளர்மதி சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார், தினமணி ஆசிரியர், கே.வைத்தியநாதன்.. 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் 
க. இராமசாமி பேசியது: 

உலகிலேயே ஆதி மண் என்ற பெருமை அரியலூரையே சேரும். இங்கு பெருமளவு கிடைக்கும் டைனோசர் முட்டைகள் இதற்குச் சாட்சிகளாக உள்ளன. உலகத் தொல்லுயிர்களின் கோட்டை என்று உலக வரலாற்றில் அரியலூர் மெச்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட தொல்லுயிர்களின் எச்சம் இங்கு கிடைத்துள்ளன. இங்கு இன்னும் நிறையத் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழன் தொடங்கி, இன்று வரை அரியலூருக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு, பெருமைமிகு மனிதர்களைத் தந்த பூமி. தமிழ்த்தாத்தா உ.வே.சா., நீண்ட காலம் வாழ்ந்த பகுதி இது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி. ரங்கராஜன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ உள்பட அறிஞர்கள் பலரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. 
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் சேர்த்ததுபோல் இந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந. வளர்மதி விளங்குகிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க பல வீடுகளில் அனுமதி கிடையாது. இந்த பின்னணியில் பின்தங்கிய இந்தப் பகுதியிலிருந்து உலக அளவில் கொண்டாடும் அறிவியல் விஞ்ஞானியாக வளர்மதி உருவெடுத்துள்ளார். இவருக்கு நோபல் பரிசு கிடைக்கும். 
தினமணிக்குப் பாராட்டு: ஒரு பல்கலைக்கழகம் அல்லது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தினமணி செய்து முடித்துள்ளது. தில்லியில் அண்மையில் 105 தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவிலான மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தப் பெருமை அதன் ஆசிரியரையே சாரும். 
தொடக்க நிலையிலேயே குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி பயில்வது இரண்டும்கெட்டான் நிலையை உருவாக்குகிறது. தொடக்கக் கல்வியை தமிழில் பயின்று, 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக கற்றால் அது நன்மை தரும் என்றார்.  
நினைவுப் பரிசுகளை அரியலூர் மகளிர் மன்றத் தலைவர் அனுராதா பார்த்தசாரதி வழங்கினார். 
விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிவிழாக் குழுச்  செயலரும்,   மொழியியல் ஆய்வாளருமான  முனைவர்    ம.சோ. விக்டர் வரவேற்றார். அரியலூர் வணிகர் சங்கத் தலைவர் பெ. தங்கவேல் விழாவைத் தொகுத்து வழங்கினார். அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் இல. தியாகராஜன் நன்றி கூறினார்.


பெண் படித்தால் குடும்பமே முன்னேறும்

 இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி. விழாவில்  வழங்கிய ஏற்புரை:
1975-ல் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, இதே மேடையில் ஏராளமான பரிசுகளை வாங்கி இருக்கிறேன். இப்போது, அந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறேன். 
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே நன்றாக முன்னேறும். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நான் அப்படித்தான் படித்தேன். என்னுடைய இளநிலைப் பொறியியல் பட்டத்தைக் கோவையிலும், முதுநிலைப் பொறியியல் பட்டத்தைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றேன். 
அரியலூரில் இருந்து கல்லூரியில் படிப்பதற்காகவே வெளியூருக்குச் சென்ற எனக்கு அங்கு கண்ட அனைத்துமே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பல மொழிகள் பேசும் மாணவர்களைப் பார்த்து எனக்கு அச்சமாக இருந்தது. ஆனாலும், தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு படித்தேன். 
நான் படிக்கும் போது எனது தாய், தந்தையரும், பணிக்குச் சென்ற பிறகு எனது கணவர் மற்றும் குழந்தைகளும் எனது பணியைப் புரிந்து கொண்டு ஒத்துழைத்தனர். 
1992-ம் ஆண்டில் இன்சாட் - 2ஏ திட்டத்தில் நான் பணியாற்றினேன். பிரெஞ்சு கயனாவில் 40 நாள்கள் தங்கியிருந்து பணிபுரிந்தேன். அதேபோன்று 1995-ல் ஐஆர்எஸ் 1சி செயற்கைக்கோள் வடிவமைப்புக்காக ரஷியாவில் 40 நாட்கள் தங்கியிருந்தேன். 1997-ல் பிஎஸ்எல்வி - சி1 மூலம் ஐஆர்எஸ் -1டி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. 
ஓய்வில்லாமல் உழைத்தேன்; அதற்காக வருத்தப்படவில்லை. எதையும் மனம் ஒன்றிச் செய்தால் அதில் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்: நிறைய மதிப்பெண்கள் பெற நன்கு படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும். பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். 
 போட்டிகள் நிறைந்த உலகில் ஜெயிக்க வேண்டுமானால் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் சாதனைகள் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்றார் இஸ்ரோ விஞானி முனைவர் வளர்மதி.


நன்றி ;- தினமணி 24 Sep 2012 01:07:47 AM IST 

தாய்மொழிக் கல்விதான் சாதனைகளுக்கு அடிப்படை விஞ்ஞானி ந.வளர்மதி பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் . கே.வைத்தியநாதன் !


தாய்மொழியில் கல்வி பயின்றால் தான் அடிப்படை அறிவியலைப் புரிந்து படிக்கவும், சாதிக்கவும் முடியும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

அண்மையில் ரிசாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குநரான அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிக்கு மக்கள் மன்றம் சார்பில் பாராட்டு விழா அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விழாக்குழுத் தலைவரும், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவருமான   
சீ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை அருட்சகோதரி வி. பாத்திமா முன்னிலை வகித்தார்.
"அச்சமில்லை' மாத இதழின் ஆசிரியரும், விழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான ந. இறைவன் அறிமுகவுரையாற்றினார். 
விழாவில், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய சிறப்புரை: தமிழ்மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தவர் வளர்மதி என  முனைவர் இராமசாமி குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, அவரும் தமிழ் வழியில் படித்தவர்தான் என்பதைத் தெரிவித்தார். 
 1975-ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் படித்த பெரும்பாலானோர் பள்ளி இறுதிப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள்தான். 
பட்டணத்தில் படித்தால்தான் சாதனைகள் படைக்க முடியும் என்ற ஒரு மாயை எல்லோரிடமும் உள்ளது. உலக அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைத்தவர்கள் யாரும் பட்டணத்தில் படித்தவர்கள் அல்லர் என்பதுதான் வேடிக்கை. 
உதாரணமாக, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று தேடிப் பிடித்துப் பதிப்பித்த உ.வே.சா. உத்தமதானபுரத்தைச் சேர்ந்தவர். பாரதி எட்டயபுரத்துக்காரர். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, அண்ணா உட்பட யாரும் பட்டணத்தில் பிறந்தவர்கள் அல்லர். 
அரியலூரில் படித்தவராலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளார் இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி.
படிப்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒருவர் சாதனை படைக்கப் படிப்பவர். மற்றொருவர் பணம் சம்பாதிக்க படிப்பவர். சென்னையில் படித்தால் பணம்தான் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிக்க நூறாயிரம் வழிகள் உள்ளன.  
நாம் வாழும் இந்தச் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணினால்தான் இங்கு ஏராளமான வளர்மதிகள் உருவாக முடியும். எனவே, பட்டணத்தில் படிக்கவில்லையே என இங்கே குழுமியிருக்கும் மாணவ, மாணவியர் கவலைப்படத் தேவையில்லை. 
கடந்த 15,16 தேதிகளில் தில்லியில் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டைத் தில்லித் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தினமணி சார்பில் நடத்தினோம். அதில் அனைவரும் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். 
தமிழ்நாட்டு மக்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக மாநாடு கூட்டித் தீர்மானம் போட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதற்கு நாம் எல்லோரும் வருந்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழுக்கு ஆபத்து.  

தமிழில் படித்த ஒருவர் விண்ணில் விந்தைகள் செய்து சாதனை படைத்துள்ளார். தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது; சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்பது நான் அரியலூருக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்டுள்ள பல்வேறு செயற்கைக்கோள்கள் விவசாயிகளுக்குத் தேவையான புதிய தகவல்களை அளிக்கிறது. பருவநிலை மாற்றம், வேளாண் குறிப்புகள் என விவசாயிகளுக்குத் தேவையான அரிய, பெரிய தகவல்களை அளித்து வருகிறது இஸ்ரோ. 
இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து விட்டு இங்கு வந்து அமர்ந்துள்ளார் வளர்மதி. பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு வளர்மதி மூலமாக அரியலூர் பதில் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று ஒரு சாதனைப் பெண் இருந்துவிட்டால் பெண் அடிமைத்தனம் தானாகவே ஒழிந்து விடும்.
 
முனைவர் இராமசாமி குறிப்பிட்டது போல் அடிப்படைக் கல்வி சரியாக அமைந்து விட்டால், புரிந்துணர்வுடன் கூடிய கல்வியைப் பெற்று விட்டால், எத்தகைய அறிவியல் சாதனையையும் படைக்க முடியும். அதற்கு அடிப்படையில் தாய்மொழியில் கல்வி அவசியம். பள்ளிக் கல்வி தாய்மொழியில்தான் அமைய வேண்டும். 
விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் விண்ணும், மண்ணும் போற்றும் வகையில் வளர்மதி சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார், தினமணி ஆசிரியர், கே.வைத்தியநாதன்.. 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் 
க. இராமசாமி பேசியது: 

உலகிலேயே ஆதி மண் என்ற பெருமை அரியலூரையே சேரும். இங்கு பெருமளவு கிடைக்கும் டைனோசர் முட்டைகள் இதற்குச் சாட்சிகளாக உள்ளன. உலகத் தொல்லுயிர்களின் கோட்டை என்று உலக வரலாற்றில் அரியலூர் மெச்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட தொல்லுயிர்களின் எச்சம் இங்கு கிடைத்துள்ளன. இங்கு இன்னும் நிறையத் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழன் தொடங்கி, இன்று வரை அரியலூருக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு, பெருமைமிகு மனிதர்களைத் தந்த பூமி. தமிழ்த்தாத்தா உ.வே.சா., நீண்ட காலம் வாழ்ந்த பகுதி இது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி. ரங்கராஜன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ உள்பட அறிஞர்கள் பலரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. 
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் சேர்த்ததுபோல் இந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந. வளர்மதி விளங்குகிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க பல வீடுகளில் அனுமதி கிடையாது. இந்த பின்னணியில் பின்தங்கிய இந்தப் பகுதியிலிருந்து உலக அளவில் கொண்டாடும் அறிவியல் விஞ்ஞானியாக வளர்மதி உருவெடுத்துள்ளார். இவருக்கு நோபல் பரிசு கிடைக்கும். 
தினமணிக்குப் பாராட்டு: ஒரு பல்கலைக்கழகம் அல்லது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தினமணி செய்து முடித்துள்ளது. தில்லியில் அண்மையில் 105 தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவிலான மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தப் பெருமை அதன் ஆசிரியரையே சாரும். 
தொடக்க நிலையிலேயே குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி பயில்வது இரண்டும்கெட்டான் நிலையை உருவாக்குகிறது. தொடக்கக் கல்வியை தமிழில் பயின்று, 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக கற்றால் அது நன்மை தரும் என்றார்.  
நினைவுப் பரிசுகளை அரியலூர் மகளிர் மன்றத் தலைவர் அனுராதா பார்த்தசாரதி வழங்கினார். 
விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிவிழாக் குழுச்  செயலரும்,   மொழியியல் ஆய்வாளருமான  முனைவர்    ம.சோ. விக்டர் வரவேற்றார். அரியலூர் வணிகர் சங்கத் தலைவர் பெ. தங்கவேல் விழாவைத் தொகுத்து வழங்கினார். அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் இல. தியாகராஜன் நன்றி கூறினார்.


பெண் படித்தால் குடும்பமே முன்னேறும்

 இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி. விழாவில்  வழங்கிய ஏற்புரை:
1975-ல் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, இதே மேடையில் ஏராளமான பரிசுகளை வாங்கி இருக்கிறேன். இப்போது, அந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறேன். 
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே நன்றாக முன்னேறும். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நான் அப்படித்தான் படித்தேன். என்னுடைய இளநிலைப் பொறியியல் பட்டத்தைக் கோவையிலும், முதுநிலைப் பொறியியல் பட்டத்தைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றேன். 
அரியலூரில் இருந்து கல்லூரியில் படிப்பதற்காகவே வெளியூருக்குச் சென்ற எனக்கு அங்கு கண்ட அனைத்துமே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பல மொழிகள் பேசும் மாணவர்களைப் பார்த்து எனக்கு அச்சமாக இருந்தது. ஆனாலும், தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு படித்தேன். 
நான் படிக்கும் போது எனது தாய், தந்தையரும், பணிக்குச் சென்ற பிறகு எனது கணவர் மற்றும் குழந்தைகளும் எனது பணியைப் புரிந்து கொண்டு ஒத்துழைத்தனர். 
1992-ம் ஆண்டில் இன்சாட் - 2ஏ திட்டத்தில் நான் பணியாற்றினேன். பிரெஞ்சு கயனாவில் 40 நாள்கள் தங்கியிருந்து பணிபுரிந்தேன். அதேபோன்று 1995-ல் ஐஆர்எஸ் 1சி செயற்கைக்கோள் வடிவமைப்புக்காக ரஷியாவில் 40 நாட்கள் தங்கியிருந்தேன். 1997-ல் பிஎஸ்எல்வி - சி1 மூலம் ஐஆர்எஸ் -1டி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. 
ஓய்வில்லாமல் உழைத்தேன்; அதற்காக வருத்தப்படவில்லை. எதையும் மனம் ஒன்றிச் செய்தால் அதில் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்: நிறைய மதிப்பெண்கள் பெற நன்கு படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும். பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். 
 போட்டிகள் நிறைந்த உலகில் ஜெயிக்க வேண்டுமானால் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் சாதனைகள் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்றார் இஸ்ரோ விஞானி முனைவர் வளர்மதி.


நன்றி ;- தினமணி 24 Sep 2012 01:07:47 AM IST 



பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் - ""இன்று எது உன்னுடையதாக நினைக்கிறாயோ நாளை அது வேறொருவருடையதாகிறது...''

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பகவான் கூறியது இன்று அவ்வப்போது நினைவுபடுத்தப்பட்டு வருகிறது - நம்மை ஆளும் அரசாங்கங்களால்.

கேஸ் சிலிண்டருக்கு அரசு வழங்கிய மானியத் தொகை நேற்றுவரை நம்முடையது -  இன்று அது எரிவாயு கம்பெனிகளுக்கு.

பெட்ரோல், டீசல் வரிச்சலுகைகளும் மானியமும் நேற்றுவரை மக்களுக்கு - இன்றோ அது எண்ணெய் நிறுவனங்களுக்கு.

மின் கட்டணச் சலுகை நேற்றுவரை நமக்கு. இன்றோ அத்தொகை மின்வாரியத்துக்கு.

பால் விலை, பஸ் கட்டணம், உரம், சிமென்ட் என்று இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வோட்டுப்போட்டு அரியணை ஏற்றும் மக்களுக்கு அவ்வப்போது அளித்துவரும் சலுகைகளை - மானியங்களைத் திரும்பப் பெறுவது எமது தனியுரிமை என்கிறார்கள் நம்மை ஆள்பவர்கள்.

வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. "தானம் தாத்ரு வசேத்'! தானமும் தருமமும் அதைக் கொடுக்கிற புண்ணியவானின் கையில் அல்லது மனத்தில்தான் இருக்கிறது என்பது அதன் பொருள்.

தானம் தருபவர் கொடுத்தாலும் கொடுக்கலாம்; கொடுக்காமலும் போகலாம். அந்தப் பழமொழிக்கு வேறொரு பரிமாணமும் சேர்ந்துவிட்டது. கொடுத்ததை மீண்டும் வாங்கியும் கொள்ளலாம். ஆம். சமீபத்திய விலையேற்றங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

"கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டி'' - என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?  சலுகைகளிலும் மானியங்களிலும் மனம் மயங்கி நின்ற வாக்காளப் பெருமக்களுக்கு இன்னொரு திரைப்படப் பாடலையும் அர்ப்பணிக்கலாம்.

 "சட்டி சுட்டதடா! கை விட்டதடா!' என்ற பாடலே அது. நமது கரங்களில் இதுவரை தரப்பட்ட சலுகைகள் யாவும் சூடேறிக் கொண்டிருந்த பாத்திரங்களே. இதோ அவற்றை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைத் தருமமாகக் கருதிய நமது தேசத்தில், எப்போது குடிதண்ணீர் விலைக்கு விற்கப்படத் தொடங்கியதோ அப்போதே நமக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இனி எதுவும் இலவசம் இல்லை! இலவசம் எனப்படுவது நிரந்தரமும் இல்லை என்று.

நமக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. என்றாவது ஒருநாள் இன்னின்ன பொருள்களின் விலையை ஏற்றித்தான் ஆக வேண்டும் என்பது தெரிந்த விஷயம்தான்.

பின் எதற்காக நம் நாட்டு அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகளாய் இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்க வேண்டும்?

 நாளையே இந்த எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினரானால் இதைத்தானே செய்யப் போகிறார்கள்?

இன்னும் சில கட்சியினர் தமது ஆட்சிக்காலம் முழுவதுமோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரங்களிலோ எந்த விலையும் ஏறாமல் பார்த்துக்கொள்வதும், அதற்கு அடுத்துவரும் ஆட்சியினர் ஒன்றுக்குப் பத்தாக விலைகளை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று கைவிரிப்பதும் ஒவ்வோர் ஐந்தாவது ஆண்டிலும் நடக்கத்தானே செய்கிறது?

ஒன்றுமட்டும் நிச்சயம் புரிந்துவிட்டது நமக்கு. எந்தச் சலுகையும் இலவசமும் நிஜமும் இல்லை. நிரந்தரமும் இல்லை.

பேசாமல் ஒன்று செய்து விடலாம்.

நமது மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளில் மட்டுமன்றி, நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும்கூட ""இலவசம் - மானியம்''  என்ற வாக்குறுதிகளைத் தடைசெய்துவிட வேண்டும்.

செய்யுமா நமது தேர்தல் கமிஷன்?  

நன்றி;- தினமணி, கருத்துக் களம். 24 Sep 2012 02:37:55 AM IST



வேண்டாம் இனி சலுகைகளும் மானியமும் -எஸ்.ஸ்ரீதுரை, வேலூர்



பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் - ""இன்று எது உன்னுடையதாக நினைக்கிறாயோ நாளை அது வேறொருவருடையதாகிறது...''

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பகவான் கூறியது இன்று அவ்வப்போது நினைவுபடுத்தப்பட்டு வருகிறது - நம்மை ஆளும் அரசாங்கங்களால்.

கேஸ் சிலிண்டருக்கு அரசு வழங்கிய மானியத் தொகை நேற்றுவரை நம்முடையது -  இன்று அது எரிவாயு கம்பெனிகளுக்கு.

பெட்ரோல், டீசல் வரிச்சலுகைகளும் மானியமும் நேற்றுவரை மக்களுக்கு - இன்றோ அது எண்ணெய் நிறுவனங்களுக்கு.

மின் கட்டணச் சலுகை நேற்றுவரை நமக்கு. இன்றோ அத்தொகை மின்வாரியத்துக்கு.

பால் விலை, பஸ் கட்டணம், உரம், சிமென்ட் என்று இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வோட்டுப்போட்டு அரியணை ஏற்றும் மக்களுக்கு அவ்வப்போது அளித்துவரும் சலுகைகளை - மானியங்களைத் திரும்பப் பெறுவது எமது தனியுரிமை என்கிறார்கள் நம்மை ஆள்பவர்கள்.

வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. "தானம் தாத்ரு வசேத்'! தானமும் தருமமும் அதைக் கொடுக்கிற புண்ணியவானின் கையில் அல்லது மனத்தில்தான் இருக்கிறது என்பது அதன் பொருள்.

தானம் தருபவர் கொடுத்தாலும் கொடுக்கலாம்; கொடுக்காமலும் போகலாம். அந்தப் பழமொழிக்கு வேறொரு பரிமாணமும் சேர்ந்துவிட்டது. கொடுத்ததை மீண்டும் வாங்கியும் கொள்ளலாம். ஆம். சமீபத்திய விலையேற்றங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

"கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டி'' - என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?  சலுகைகளிலும் மானியங்களிலும் மனம் மயங்கி நின்ற வாக்காளப் பெருமக்களுக்கு இன்னொரு திரைப்படப் பாடலையும் அர்ப்பணிக்கலாம்.

 "சட்டி சுட்டதடா! கை விட்டதடா!' என்ற பாடலே அது. நமது கரங்களில் இதுவரை தரப்பட்ட சலுகைகள் யாவும் சூடேறிக் கொண்டிருந்த பாத்திரங்களே. இதோ அவற்றை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைத் தருமமாகக் கருதிய நமது தேசத்தில், எப்போது குடிதண்ணீர் விலைக்கு விற்கப்படத் தொடங்கியதோ அப்போதே நமக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இனி எதுவும் இலவசம் இல்லை! இலவசம் எனப்படுவது நிரந்தரமும் இல்லை என்று.

நமக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. என்றாவது ஒருநாள் இன்னின்ன பொருள்களின் விலையை ஏற்றித்தான் ஆக வேண்டும் என்பது தெரிந்த விஷயம்தான்.

பின் எதற்காக நம் நாட்டு அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகளாய் இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்க வேண்டும்?

 நாளையே இந்த எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினரானால் இதைத்தானே செய்யப் போகிறார்கள்?

இன்னும் சில கட்சியினர் தமது ஆட்சிக்காலம் முழுவதுமோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரங்களிலோ எந்த விலையும் ஏறாமல் பார்த்துக்கொள்வதும், அதற்கு அடுத்துவரும் ஆட்சியினர் ஒன்றுக்குப் பத்தாக விலைகளை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று கைவிரிப்பதும் ஒவ்வோர் ஐந்தாவது ஆண்டிலும் நடக்கத்தானே செய்கிறது?

ஒன்றுமட்டும் நிச்சயம் புரிந்துவிட்டது நமக்கு. எந்தச் சலுகையும் இலவசமும் நிஜமும் இல்லை. நிரந்தரமும் இல்லை.

பேசாமல் ஒன்று செய்து விடலாம்.

நமது மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளில் மட்டுமன்றி, நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும்கூட ""இலவசம் - மானியம்''  என்ற வாக்குறுதிகளைத் தடைசெய்துவிட வேண்டும்.

செய்யுமா நமது தேர்தல் கமிஷன்?  

நன்றி;- தினமணி, கருத்துக் களம். 24 Sep 2012 02:37:55 AM IST



 

சென்னை, செப். 24: நாளுக்கு நாள் அரிசி உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்வு காரணமாக மாதாந்திர செலவைக் கணக்கிட்டுச் செலவிடும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரேஷனில் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதையே தவிர்த்த மக்கள், தற்போது இலவச அரிசியை வாங்கி அதில் தினமும் காலை, இரவு வேளைகளில் சிற்றுண்டி செய்யப் பயன்படுத்தும் மனப்பக்குவத்துக்கு வந்துள்ளனர்.

அரிசி விலை உயர முக்கிய காரணங்கள்: வீட்டு மனைகளாக மாறிப் போன விளை நிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயக் கூலித் தொழிலை மறந்த கிராம மக்கள், சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை, உரங்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள் எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெல் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அரிசி விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அடிக்கடி டீசல் விலை உயர்வு ஏற்படுவதால் வாகன வாடகைச் செலவு அதிகரிப்பதாலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குடும்பத்தின் மாதச் செலவுகள்:

கணவன் மனைவி, 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு மாதச் செலவாக அரிசி ரூ.1,000, மளிகைப் பொருள்கள் ரூ.1,500, காய்கறி, பழ வகைகள் என ரூ.1,000, ரேஷன் ரூ.400, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.400, பால் செலவு ரூ.1,000, படிப்புச் செலவு ரூ.2,000, மருத்துவச் செலவு, பயணச் செலவு ரூ.1,000, வீட்டு வாடகை குறைந்த பட்சம் ரூ.4,000 முதல் அதிகபட்சமாக ரூ.8000, மின்சார கட்டணம் ரூ.500 முதல் 1,000 வரையிலும் எதிர்பாராத செலவாக ரூ.600 எனச் செலவாகிறது. 

இவைகளை மொத்தமாகக் கணக்கிட்டால் குறைந்தபட்சமாக ரூ. 15 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரையிலும் ஒரு குடும்பத்துக்கு செலவாகி வந்தது.

இதே செலவுகள் நடப்பாண்டில் 30 சதவீதம் வரை கூடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் செலவுகள் கூடிய அளவில் வருமானம் கூடவில்லை என்று குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மத்திய அரசின் டீசல் விலையேற்றம், மாநில அரசின் மின் கட்டண உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, குடியிருப்புகளில் வீட்டு வாடகை உயர்வு எனப் பல செலவுகள் வாட்டி வருவதால் மிகவும் திண்டாட வேண்டியுள்ளது என குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.

                                               அரிசி விலை நிலவரம்

கடந்த 2011-ம் ஆண்டில்                                     2012-ம் ஆண்டில்
 (75 கிலோ)   
ஏடிடி 39 ரகம்     ரூ.1100-1300  -                               ரூ.2100-2200      
ஏடிடி 43 ரகம்     ரூ.1350-1400  -                               ரூ.2250-2300          
ஏடிடி 37 குண்டு ரகம்    ரூ.1900-2000  -                ரூ.2100-2200
பாபட்லா பொன்னி     ரூ.1450-1550    -                ரூ.2400-2500     
வெள்ளை பொன்னி     ரூ.2400-2500  -                ரூ.3150-3200

25 கிலோ எடை கொண்ட சிப்பங்கள் நாகராஜா, தாமரை, ஒளிவிளக்கு, ஜாஸ்மின், மகாராஜா, தங்கமயில் உள்ளிட்ட ரகங்கள் கடந்த ஆண்டு ரூ.700 முதல் ரூ. 850 வரை விற்கப்பட்டு வந்தன. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மேற்கண்ட சிப்பங்கள் அனைத்தும் ரூ. 900 முதல் ரூ. 1100 வரை விற்கப்படுகின்றன.

நன்றி : தினமணி,  25 Sep 2012 02:18:44 AM IST

நாளுக்கு நாள் உயரும் அரிசி விலை: விழி பிதுங்கும் குடும்பத் தலைவர்கள் !

 

சென்னை, செப். 24: நாளுக்கு நாள் அரிசி உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்வு காரணமாக மாதாந்திர செலவைக் கணக்கிட்டுச் செலவிடும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரேஷனில் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதையே தவிர்த்த மக்கள், தற்போது இலவச அரிசியை வாங்கி அதில் தினமும் காலை, இரவு வேளைகளில் சிற்றுண்டி செய்யப் பயன்படுத்தும் மனப்பக்குவத்துக்கு வந்துள்ளனர்.

அரிசி விலை உயர முக்கிய காரணங்கள்: வீட்டு மனைகளாக மாறிப் போன விளை நிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயக் கூலித் தொழிலை மறந்த கிராம மக்கள், சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை, உரங்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள் எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெல் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அரிசி விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அடிக்கடி டீசல் விலை உயர்வு ஏற்படுவதால் வாகன வாடகைச் செலவு அதிகரிப்பதாலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குடும்பத்தின் மாதச் செலவுகள்:

கணவன் மனைவி, 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு மாதச் செலவாக அரிசி ரூ.1,000, மளிகைப் பொருள்கள் ரூ.1,500, காய்கறி, பழ வகைகள் என ரூ.1,000, ரேஷன் ரூ.400, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.400, பால் செலவு ரூ.1,000, படிப்புச் செலவு ரூ.2,000, மருத்துவச் செலவு, பயணச் செலவு ரூ.1,000, வீட்டு வாடகை குறைந்த பட்சம் ரூ.4,000 முதல் அதிகபட்சமாக ரூ.8000, மின்சார கட்டணம் ரூ.500 முதல் 1,000 வரையிலும் எதிர்பாராத செலவாக ரூ.600 எனச் செலவாகிறது. 

இவைகளை மொத்தமாகக் கணக்கிட்டால் குறைந்தபட்சமாக ரூ. 15 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரையிலும் ஒரு குடும்பத்துக்கு செலவாகி வந்தது.

இதே செலவுகள் நடப்பாண்டில் 30 சதவீதம் வரை கூடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் செலவுகள் கூடிய அளவில் வருமானம் கூடவில்லை என்று குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.

மேலும் மத்திய அரசின் டீசல் விலையேற்றம், மாநில அரசின் மின் கட்டண உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, குடியிருப்புகளில் வீட்டு வாடகை உயர்வு எனப் பல செலவுகள் வாட்டி வருவதால் மிகவும் திண்டாட வேண்டியுள்ளது என குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.

                                               அரிசி விலை நிலவரம்

கடந்த 2011-ம் ஆண்டில்                                     2012-ம் ஆண்டில்
 (75 கிலோ)   
ஏடிடி 39 ரகம்     ரூ.1100-1300  -                               ரூ.2100-2200      
ஏடிடி 43 ரகம்     ரூ.1350-1400  -                               ரூ.2250-2300          
ஏடிடி 37 குண்டு ரகம்    ரூ.1900-2000  -                ரூ.2100-2200
பாபட்லா பொன்னி     ரூ.1450-1550    -                ரூ.2400-2500     
வெள்ளை பொன்னி     ரூ.2400-2500  -                ரூ.3150-3200

25 கிலோ எடை கொண்ட சிப்பங்கள் நாகராஜா, தாமரை, ஒளிவிளக்கு, ஜாஸ்மின், மகாராஜா, தங்கமயில் உள்ளிட்ட ரகங்கள் கடந்த ஆண்டு ரூ.700 முதல் ரூ. 850 வரை விற்கப்பட்டு வந்தன. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மேற்கண்ட சிப்பங்கள் அனைத்தும் ரூ. 900 முதல் ரூ. 1100 வரை விற்கப்படுகின்றன.

நன்றி : தினமணி,  25 Sep 2012 02:18:44 AM IST



பெய்ஜிங், செப். 24: சீனாவில் அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் துணை மேயருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிரிட்டன் வர்த்தகர் நீல் ஹேவுட் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவரும், டோலியன் நகரின் மேயராக இருந்தவருமான
போ சிலாயின் மனைவி கூ கைலாய்க்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸாருக்குச்  சந்தேகம் எழுந்தது.

இவ்வழக்கில் கூ கைலாயின் தொடர்பு குறித்து தசாங்கிங் நகர முன்னாள் துணை மேயரும் காவல்துறைத் தலைவருமான வாங் லிஜுன் (52) விசாரணை நடத்தினார்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய மேயர் போ சிலாய், வாங்கை அழைத்துக் கண்டித்தார். தன் மனைவி குறித்து எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்று கூறிக் கன்னத்தில் அறைந்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தினால் நடப்பதே வேறு என்று அவ்வப்போது மிரட்டலும் விடுத்தார். மேலும், காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து வாங்கை அவர் பதவிநீக்கம் செய்தார்.

மேயர் போ சிலாயின் மிரட்டலால் பயந்து போன வாங் கடந்த பிப்ரவரி மாதம், செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புக முயன்றார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது போ சிலாய் மீது குற்றம் சாட்டி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, மேயர் பதவியில் இருந்து போ சிலாயை சீன அரசு நீக்கியது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் மீது விரைவில் விசாரணை துவங்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தது, அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வாங் மீது சீன போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த செங்டு நகர நீதிமன்றம், வாங்கிற்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

நன்றி :-தினமணி  25 Sep 2012 12:27:50 AM IST





சீனாவில் முன்னாள் துணைமேயருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை !



பெய்ஜிங், செப். 24: சீனாவில் அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் துணை மேயருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிரிட்டன் வர்த்தகர் நீல் ஹேவுட் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவரும், டோலியன் நகரின் மேயராக இருந்தவருமான
போ சிலாயின் மனைவி கூ கைலாய்க்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸாருக்குச்  சந்தேகம் எழுந்தது.

இவ்வழக்கில் கூ கைலாயின் தொடர்பு குறித்து தசாங்கிங் நகர முன்னாள் துணை மேயரும் காவல்துறைத் தலைவருமான வாங் லிஜுன் (52) விசாரணை நடத்தினார்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய மேயர் போ சிலாய், வாங்கை அழைத்துக் கண்டித்தார். தன் மனைவி குறித்து எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்று கூறிக் கன்னத்தில் அறைந்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தினால் நடப்பதே வேறு என்று அவ்வப்போது மிரட்டலும் விடுத்தார். மேலும், காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து வாங்கை அவர் பதவிநீக்கம் செய்தார்.

மேயர் போ சிலாயின் மிரட்டலால் பயந்து போன வாங் கடந்த பிப்ரவரி மாதம், செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புக முயன்றார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது போ சிலாய் மீது குற்றம் சாட்டி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, மேயர் பதவியில் இருந்து போ சிலாயை சீன அரசு நீக்கியது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் மீது விரைவில் விசாரணை துவங்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தது, அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வாங் மீது சீன போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த செங்டு நகர நீதிமன்றம், வாங்கிற்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

நன்றி :-தினமணி  25 Sep 2012 12:27:50 AM IST





Monday, September 24, 2012




 
டாக்டர் கிறிஸ் நாஷ் ஓர் உளவியல் நிபுணர். அவர் இங்கிலாந்தில் வசிக்கும்பொழுது ஓர் உண்மை நிகழ்வைப் புத்தகமாக்கினார். அதில் 1682-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட மூன்று பெண்மணிகளைப் பற்றியது.  அம்மூவரும் சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதே அத்தண்டனைக்குக் காரணம். அவர்களின் பெயர்கள் முறையே, டெம்பரன்ஸ் லாயிட், சூசன்னா எட்வர்ட்ஸ், மேரி ட்ரம்பிள்ஸ்.

 17-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட இம்மூவரின் மரணதண்டனை அப்போதைய படைப்பாளிகள் பலருக்கும் கருப்பொருளாய் இருந்திருக்கின்றது . அம்மூவரின் பெயரும் பொறிக்கப்பட்ட நினைவிடம் இன்றும் உள்ளது. 

அவர்கள் தண்டனை ஒரு எக்ஸிடெர் வெளியே Heavitree-ல் ஆகஸ்ட், 25, 1682 -ல் நிறைவேற்றப்பட்டது.The Book of Bideford என்ற நூலில் இந்த உண்மை நிகழ்வை,  ஜான் வாட்கின்ஸ் என்ற வரலாற்று ஆசிரியர் 1792-ல் ஆவணப்படுத்தியுள்ளார்.

அந்த மூன்று பெண்களும்சூனியக்காரிகள் அல்ல என்பது டாக்டர் கிறிஸ் எழுதிய நூலின் முடிவு. அவர்களை அரசு மன்னித்து சூனியக்காரிகள் பட்டியலிலிருந்து அந்த மூவரின் பெயரையும் நீக்கிவிடவேண்டும்  என்பதே அவரது கோரிக்கை.

தற்பொழுது  கிறிஸ்  கனடாவில் வசிக்கின்றார். அவர் எழுதிய நூலின் கோரிக்கையை நிறைவேற்றிடப் 10000 பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தைத் துவக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாகக் கையெழுத்திட விரும்புவோர் http://epetitions.direct.gov.uk/petitions/37616 என்ற இணைய தளத்திற்குச் செல்லலாம்.

http://swns.com/news/campaign-to-clear-names-of-three-women-hanged-for-witchcraft-three-centuries-ago/ என்ற இணையத்தில்  முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

SOUTH WEST NEWS என்பதன் சுருக்கமே SWN . திகைப்பும் வியப்பும் தரக்கூடிய தகவல்களையும், படங்களையும் வைத்திருப்போர் SWS-ஐத் தாரளமாக அணுகலாம். தக்க விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயாராக உள்ளனர். இதழியல் திறம் படைத்தோரையும் தொடர்பு கொள்ளச் சொல்கின்றது, SWS நிறுவனம்.






330 வருடங்களுக்கு முன் வரலாற்றில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைத் திருத்த ஆன்லைன்-ல் போராட்டம். !




 
டாக்டர் கிறிஸ் நாஷ் ஓர் உளவியல் நிபுணர். அவர் இங்கிலாந்தில் வசிக்கும்பொழுது ஓர் உண்மை நிகழ்வைப் புத்தகமாக்கினார். அதில் 1682-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட மூன்று பெண்மணிகளைப் பற்றியது.  அம்மூவரும் சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டதே அத்தண்டனைக்குக் காரணம். அவர்களின் பெயர்கள் முறையே, டெம்பரன்ஸ் லாயிட், சூசன்னா எட்வர்ட்ஸ், மேரி ட்ரம்பிள்ஸ்.

 17-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட இம்மூவரின் மரணதண்டனை அப்போதைய படைப்பாளிகள் பலருக்கும் கருப்பொருளாய் இருந்திருக்கின்றது . அம்மூவரின் பெயரும் பொறிக்கப்பட்ட நினைவிடம் இன்றும் உள்ளது. 

அவர்கள் தண்டனை ஒரு எக்ஸிடெர் வெளியே Heavitree-ல் ஆகஸ்ட், 25, 1682 -ல் நிறைவேற்றப்பட்டது.The Book of Bideford என்ற நூலில் இந்த உண்மை நிகழ்வை,  ஜான் வாட்கின்ஸ் என்ற வரலாற்று ஆசிரியர் 1792-ல் ஆவணப்படுத்தியுள்ளார்.

அந்த மூன்று பெண்களும்சூனியக்காரிகள் அல்ல என்பது டாக்டர் கிறிஸ் எழுதிய நூலின் முடிவு. அவர்களை அரசு மன்னித்து சூனியக்காரிகள் பட்டியலிலிருந்து அந்த மூவரின் பெயரையும் நீக்கிவிடவேண்டும்  என்பதே அவரது கோரிக்கை.

தற்பொழுது  கிறிஸ்  கனடாவில் வசிக்கின்றார். அவர் எழுதிய நூலின் கோரிக்கையை நிறைவேற்றிடப் 10000 பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தைத் துவக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாகக் கையெழுத்திட விரும்புவோர் http://epetitions.direct.gov.uk/petitions/37616 என்ற இணைய தளத்திற்குச் செல்லலாம்.

http://swns.com/news/campaign-to-clear-names-of-three-women-hanged-for-witchcraft-three-centuries-ago/ என்ற இணையத்தில்  முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

SOUTH WEST NEWS என்பதன் சுருக்கமே SWN . திகைப்பும் வியப்பும் தரக்கூடிய தகவல்களையும், படங்களையும் வைத்திருப்போர் SWS-ஐத் தாரளமாக அணுகலாம். தக்க விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயாராக உள்ளனர். இதழியல் திறம் படைத்தோரையும் தொடர்பு கொள்ளச் சொல்கின்றது, SWS நிறுவனம்.






Sunday, September 23, 2012

http://assorted4u.wordpress.com/2010/10/16/

 Nothing great was ever achieved without enthusiasm

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கோவை பிறந்த ஊர் படித்ததும் அங்குதான்.
 14 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் துறையில் பணி.
மெய்யான மானுட விசுவாசி.இவரது பெயர் ஞானப் பிரகாசம்.

இவரது பொழுதுபோக்குகளின் எண்ணிக்கை  வியப்பை ஏற்படுத்தும். ஏப்ரல் 2009 முதல் வலைப்பதிவராக உள்ளார்.

இன்றாவது  பார்வையில் பட்டதே என்பதே நமக்குக் கிடைத்த  நல்வாய்ப்பு. அவரைப்பற்றிய முழுத்தகவலும் அறிய அவரது பக்கத்திற்குச் செல்வதே சிறப்பு.

2010-ஐச் சார்ந்த அவரது பதிவை மீள்பதிவாக்குவதன் மூலம் மேலும் சிலரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

தெரிந்தவை எல்லாம் பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு. இதுவே எம் தடம்..

சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தைக் கண்டு பிடித்த, நோபல் பரிசுக்குத்  தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்தச் சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.

இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், “கரன்ட் சயின்ஸ்’ இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,”உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், “அவர் போன்றவர்கள் நிறையச் சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்’ என்றார்.

இதுபோன்ற தவறுகளுக்கு இனிமேலாவது இடங்கொடுக்காமலிருப்பதே புத்திசாலித்தனம்.






நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? 16-10-2010 தெரிந்தவை எல்லாம் பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு. இதுவே எம் தடம்..

http://assorted4u.wordpress.com/2010/10/16/

 Nothing great was ever achieved without enthusiasm

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கோவை பிறந்த ஊர் படித்ததும் அங்குதான்.
 14 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் துறையில் பணி.
மெய்யான மானுட விசுவாசி.இவரது பெயர் ஞானப் பிரகாசம்.

இவரது பொழுதுபோக்குகளின் எண்ணிக்கை  வியப்பை ஏற்படுத்தும். ஏப்ரல் 2009 முதல் வலைப்பதிவராக உள்ளார்.

இன்றாவது  பார்வையில் பட்டதே என்பதே நமக்குக் கிடைத்த  நல்வாய்ப்பு. அவரைப்பற்றிய முழுத்தகவலும் அறிய அவரது பக்கத்திற்குச் செல்வதே சிறப்பு.

2010-ஐச் சார்ந்த அவரது பதிவை மீள்பதிவாக்குவதன் மூலம் மேலும் சிலரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

தெரிந்தவை எல்லாம் பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு. இதுவே எம் தடம்..

சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தைக் கண்டு பிடித்த, நோபல் பரிசுக்குத்  தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்தச் சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.

இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், “கரன்ட் சயின்ஸ்’ இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,”உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், “அவர் போன்றவர்கள் நிறையச் சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்’ என்றார்.

இதுபோன்ற தவறுகளுக்கு இனிமேலாவது இடங்கொடுக்காமலிருப்பதே புத்திசாலித்தனம்.









 ”அதிசயங்கள் அவ்வப்பொழுது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன “ என்ற வாக்கிற்குச் சொந்தக்காரர், தமிழுலகம் மறக்க முடியாத, பன்முகத் திறனாளி, வல்லிக்கண்ணன்.



ஆம் ! சென்ற 15, 16 தேதிகளில் புது தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய, அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டில் நாம் பங்கு பெற்ற நிகழ்வும் அப்படித்தான் அமைந்தது. பார்வையாளராகச் சென்றதோடு மட்டுமன்றிப் பேசுவதற்கு வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது அதிசயம்தானே! 

  "புதுதில்லித் தமிழ்ச் சங்கத் திறன்மிகு மேலாண்மைத் தமிழன்பர்களைப் போன்றோரும், மூதறிஞர் தமிழண்ணல் போன்றோரும்,, கணினித் தமிழ் வளர்க்கும் துணைவேந்தர் பொன்னவைக்கோ போன்றோரும் ஊர்தோறும் இருந்திட்டால் தமிழ் வளர்ந்தோங்குவது திண்ணம்.

புதுதில்லித் தமிழ்ச்சங்கம் கூகிள் குழுமம் ஒன்றைத் துவக்க வேண்டும். அதில் இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அவர்களது மாத இதழ், சஙகச் சுடர் இணைய இதழாக்கப்படல் வேண்டும்.. .தற்போதைய இணையத்தில் படமும், செய்திகளும் படங்களாகவே ( ஸ்கேன் செய்து ) உள்ளன. செய்திகள் தட்டச்சு செய்து இடம்பெறவேண்டும். அப்பொழுதுதான், கூகிள் தேடுபொறி மூலமாகவும் புதுதில்லித் தமிழ்ச் சங்கச் செயல்பாடுகள் உலகமெங்கும் பரவிட வழி கிடைக்கும்.

இம்முயற்சிக்குத் துணைநிற்க வின்மணியுடன் துணை நிற்போம் " என உரைநிகழ்த்தி விடைபெற்றோம்.

இத்தனைக்கும் காரணமாயிருந்த எல்லாம்வல்ல இறைவன் கருணைத் திறத்திற்குத் தலைவணங்குகிறோம்.



தில்லித் தமிழ்ச்சங்கம் - அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு 2012 - ஒரு பார்வை




 ”அதிசயங்கள் அவ்வப்பொழுது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன “ என்ற வாக்கிற்குச் சொந்தக்காரர், தமிழுலகம் மறக்க முடியாத, பன்முகத் திறனாளி, வல்லிக்கண்ணன்.



ஆம் ! சென்ற 15, 16 தேதிகளில் புது தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய, அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டில் நாம் பங்கு பெற்ற நிகழ்வும் அப்படித்தான் அமைந்தது. பார்வையாளராகச் சென்றதோடு மட்டுமன்றிப் பேசுவதற்கு வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது அதிசயம்தானே! 

  "புதுதில்லித் தமிழ்ச் சங்கத் திறன்மிகு மேலாண்மைத் தமிழன்பர்களைப் போன்றோரும், மூதறிஞர் தமிழண்ணல் போன்றோரும்,, கணினித் தமிழ் வளர்க்கும் துணைவேந்தர் பொன்னவைக்கோ போன்றோரும் ஊர்தோறும் இருந்திட்டால் தமிழ் வளர்ந்தோங்குவது திண்ணம்.

புதுதில்லித் தமிழ்ச்சங்கம் கூகிள் குழுமம் ஒன்றைத் துவக்க வேண்டும். அதில் இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அவர்களது மாத இதழ், சஙகச் சுடர் இணைய இதழாக்கப்படல் வேண்டும்.. .தற்போதைய இணையத்தில் படமும், செய்திகளும் படங்களாகவே ( ஸ்கேன் செய்து ) உள்ளன. செய்திகள் தட்டச்சு செய்து இடம்பெறவேண்டும். அப்பொழுதுதான், கூகிள் தேடுபொறி மூலமாகவும் புதுதில்லித் தமிழ்ச் சங்கச் செயல்பாடுகள் உலகமெங்கும் பரவிட வழி கிடைக்கும்.

இம்முயற்சிக்குத் துணைநிற்க வின்மணியுடன் துணை நிற்போம் " என உரைநிகழ்த்தி விடைபெற்றோம்.

இத்தனைக்கும் காரணமாயிருந்த எல்லாம்வல்ல இறைவன் கருணைத் திறத்திற்குத் தலைவணங்குகிறோம்.



மகா.தமிழ்ப் பிரபாகரன்: வழக்குப் போடு... அல்லது விடுதலை செய்! - ஜூனியர் வி...: வழக்குப் போடு... அல்லது விடுதலை செய்! - ஜூனியர் விகடன் - 2012-05-27 ஆயுத பூமியில் அமைதிப் போர்! ஆ யுதம் தாங்கிப் போராடிய புலிக...

மகா.தமிழ்ப் பிரபாகரன்: வழக்குப் போடு... அல்லது விடுதலை செய்! - ஜூனியர் வி...

மகா.தமிழ்ப் பிரபாகரன்: வழக்குப் போடு... அல்லது விடுதலை செய்! - ஜூனியர் வி...: வழக்குப் போடு... அல்லது விடுதலை செய்! - ஜூனியர் விகடன் - 2012-05-27 ஆயுத பூமியில் அமைதிப் போர்! ஆ யுதம் தாங்கிப் போராடிய புலிக...


‘பாயிரம்’ என்பது நூன்முகம். நூற்கு முகம் போன்று விளங்குதலால், அது நூன்முகம் எனப்பட்டது.

இக்காலத்து வழங்கும் திருவள்ளுவர் திருக்குறட் சுவடிகளிலெல்லாம் ‘கடவுள் வாழ்த்து’,‘வான்சிறப்பு’,‘ நீத்தார் பெருமை’,‘ அறன் வலி யுறுத்தல்’ என்னும் நான்கு அதிகாரங்களும் பாயிரமாகக் காணப்படுகின் றன.

ஆனால் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் ‘உரைகேளாளன்’ முதலியோர்களால் கூறப்பெற்ற சிறப்புப்பாயிரம். அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரம் ஒன்றே வள்ளுவரால் கூறப் பெற்ற பொதுப்பாயிரம்.

சென்னை அரசாங்கக் கீழ்நாட்டுப் புத்தக சாலையிலுள்ள மிகமிகப் பழையதான திருக்குறள் கையெழுத்துப் பிரதியொன்றில் இப்பொழுது பாயிரத்தின் முதல் அதிகாரமாக நிற்பதும் , பலரால் ஒப்புயர்வற்ற பாக்களையுடையதெனப் போற்றப்படுவதுமான ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத்தின் முடிவில் ‘சிறப்புப்பாயிரம் முற்றிற்று’ என்பது எழுதப் பட்டுள்ளது. அச்சொற்கள் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரம் வள்ளுவர் கூறிய பாயிரத்தில் சேர்ந்தது அன்று என்பதைக் காட்டுகின்றன.

இக்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், முற்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், நமக்குக் கிடைத்துள்ள திருக்குறளுரைகளின் ஆசிரியர்களிற் பலரும்,“கடவுள் வாழ்த்து” முதலிய மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரத்தின் உறுப்புகளாகக் கொண்டிருக்க, நாம் அம்மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் இயற்றப்பட்டனவல்ல என்று கொள்வதும் சொல்வதும் அப்புலவர்களையும், உரையாசிரியர்களையும அவமதித்தலாம் என்னும் நினைப்புக் குப்பை தமது உள்ளத்தின்கண் கிடக்குமாயின் அவர்களெல்லாரிலும் மிகப் பெரியாரான நம் வள்ளுவர் வெறும் வெள்ளைப் பாக்களையே கொண்டுள்ள அம்மூன்று அதிகாரங்களையும் இயற்றினாரென்று கூறுதல் நம் வள்ளுவரை அவமதித்தலாம் என்னும் கோட்பாடாகிய மண்வெட்டியால் வெட்டி அக்குப்பையினைத் தமது உள்ளத்தினின்று வெளிப்படுத்திவிடல் வேண்டும்.

ஏனெனில், குப்பை நிறைந்துள்ள அரங்கு ஒன்று அதனைக் கொண்டுள்ள வரையில் நல்ல பொருள் ஒன்றைக்கொள்ள இயலாதாகலான் என்க.

சில புலவர்களும் உரையாசிரியர்கள் பலரும் கடவுள் வாழ்த்து முதலிய மூன்று அதிகாரங்களும் திருக்குறளின் பாயிரத்தைச் சேர்ந்தவை யென்று கொண்டதற்கு ஆதாரம் திருக்குறளை வள்ளுவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய காலத்துக் கேட்டவர்களென்று சொல்லப்படுகிற புலவர்களில் நத்தத்தனார், சிறுமேதாவியார், எறிச்சலூர் மலாடனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மதுரைப் பெருமருதனார் இவ்வைவர் பாடியனவென்று ‘திருவள்ளுவமாலை’ யில் குறிக்கப்பட் டுள்ளன பாக்களேயாம்.

இவ்வைவரும் திருவள்ளுவமாலைப் பாக்களில் வேறு சிலவற்றைப் பாடிய புலவர்களும் வள்ளுவர் காலத்தினரல்லர் , பிற்காலத்தவர். இவ்வுண்மையைக் காலஞ் சென்று போன மெய்ப்புலவர் திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராயிருந்த கனம் சேஷகிரி அய்யர் அவர்கள் தலை மையின் கீழ் வாசித்த வியாசத்தில் தக்க ஆதாரங்களுடன் நிலை நாட்டியுள்ளார்கள்.

அவ்வியாசத்தைத் தேடியெடுத்து அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கு புலவர் பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன வல்ல வென்பதும் தமிழ் நூல்களுக்கு அழிவு நேரிட்ட பிற்காலத்தில் திருக்குற ளின் அதிகாரங்கள் முதலியவற்றின் தொகைகளை வரையறுத்துக் கூறக் கருதிப் பாடப்பட்டவையென்பதும் அவற்றைப் படிப்போர்க்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

அப்பிற்காலத்துப் பாக்களைத் திருக்குறள் அரங்கேறிய காலத்துப் பாக்களென்று பிழைபட வெண்ணியே மேற் கூறிய உரையாசிரியர்களும் புலவர்களும் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் பாயிரத்துட்பட்டவையென்று கூறி னார்.

அவர்களுள் அக்கூற்று ‘திருவள்ளுவ மாலை’யின் அப்பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்திற்குப் பிற்காலத்தினவென்று கண்ட மாத்திரத்திலே பிழையெனத் தள்ளற் பாலதாம்.

(“திருக்குறள் பன்முக வாசிப்பு நூலிலிருந்து)

நன்றி :- தீக்கதிர் http://www.theekkathir.in/

திருக்குறள் கடவுள் வாழ்த்தும் வ.உ.சி. கருத்தும்



‘பாயிரம்’ என்பது நூன்முகம். நூற்கு முகம் போன்று விளங்குதலால், அது நூன்முகம் எனப்பட்டது.

இக்காலத்து வழங்கும் திருவள்ளுவர் திருக்குறட் சுவடிகளிலெல்லாம் ‘கடவுள் வாழ்த்து’,‘வான்சிறப்பு’,‘ நீத்தார் பெருமை’,‘ அறன் வலி யுறுத்தல்’ என்னும் நான்கு அதிகாரங்களும் பாயிரமாகக் காணப்படுகின் றன.

ஆனால் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் ‘உரைகேளாளன்’ முதலியோர்களால் கூறப்பெற்ற சிறப்புப்பாயிரம். அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரம் ஒன்றே வள்ளுவரால் கூறப் பெற்ற பொதுப்பாயிரம்.

சென்னை அரசாங்கக் கீழ்நாட்டுப் புத்தக சாலையிலுள்ள மிகமிகப் பழையதான திருக்குறள் கையெழுத்துப் பிரதியொன்றில் இப்பொழுது பாயிரத்தின் முதல் அதிகாரமாக நிற்பதும் , பலரால் ஒப்புயர்வற்ற பாக்களையுடையதெனப் போற்றப்படுவதுமான ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத்தின் முடிவில் ‘சிறப்புப்பாயிரம் முற்றிற்று’ என்பது எழுதப் பட்டுள்ளது. அச்சொற்கள் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரம் வள்ளுவர் கூறிய பாயிரத்தில் சேர்ந்தது அன்று என்பதைக் காட்டுகின்றன.

இக்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், முற்காலத்துத் தமிழ்ப் புலவர் பலரும், நமக்குக் கிடைத்துள்ள திருக்குறளுரைகளின் ஆசிரியர்களிற் பலரும்,“கடவுள் வாழ்த்து” முதலிய மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரத்தின் உறுப்புகளாகக் கொண்டிருக்க, நாம் அம்மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் இயற்றப்பட்டனவல்ல என்று கொள்வதும் சொல்வதும் அப்புலவர்களையும், உரையாசிரியர்களையும அவமதித்தலாம் என்னும் நினைப்புக் குப்பை தமது உள்ளத்தின்கண் கிடக்குமாயின் அவர்களெல்லாரிலும் மிகப் பெரியாரான நம் வள்ளுவர் வெறும் வெள்ளைப் பாக்களையே கொண்டுள்ள அம்மூன்று அதிகாரங்களையும் இயற்றினாரென்று கூறுதல் நம் வள்ளுவரை அவமதித்தலாம் என்னும் கோட்பாடாகிய மண்வெட்டியால் வெட்டி அக்குப்பையினைத் தமது உள்ளத்தினின்று வெளிப்படுத்திவிடல் வேண்டும்.

ஏனெனில், குப்பை நிறைந்துள்ள அரங்கு ஒன்று அதனைக் கொண்டுள்ள வரையில் நல்ல பொருள் ஒன்றைக்கொள்ள இயலாதாகலான் என்க.

சில புலவர்களும் உரையாசிரியர்கள் பலரும் கடவுள் வாழ்த்து முதலிய மூன்று அதிகாரங்களும் திருக்குறளின் பாயிரத்தைச் சேர்ந்தவை யென்று கொண்டதற்கு ஆதாரம் திருக்குறளை வள்ளுவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய காலத்துக் கேட்டவர்களென்று சொல்லப்படுகிற புலவர்களில் நத்தத்தனார், சிறுமேதாவியார், எறிச்சலூர் மலாடனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மதுரைப் பெருமருதனார் இவ்வைவர் பாடியனவென்று ‘திருவள்ளுவமாலை’ யில் குறிக்கப்பட் டுள்ளன பாக்களேயாம்.

இவ்வைவரும் திருவள்ளுவமாலைப் பாக்களில் வேறு சிலவற்றைப் பாடிய புலவர்களும் வள்ளுவர் காலத்தினரல்லர் , பிற்காலத்தவர். இவ்வுண்மையைக் காலஞ் சென்று போன மெய்ப்புலவர் திரு. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராயிருந்த கனம் சேஷகிரி அய்யர் அவர்கள் தலை மையின் கீழ் வாசித்த வியாசத்தில் தக்க ஆதாரங்களுடன் நிலை நாட்டியுள்ளார்கள்.

அவ்வியாசத்தைத் தேடியெடுத்து அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கு புலவர் பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன வல்ல வென்பதும் தமிழ் நூல்களுக்கு அழிவு நேரிட்ட பிற்காலத்தில் திருக்குற ளின் அதிகாரங்கள் முதலியவற்றின் தொகைகளை வரையறுத்துக் கூறக் கருதிப் பாடப்பட்டவையென்பதும் அவற்றைப் படிப்போர்க்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.

அப்பிற்காலத்துப் பாக்களைத் திருக்குறள் அரங்கேறிய காலத்துப் பாக்களென்று பிழைபட வெண்ணியே மேற் கூறிய உரையாசிரியர்களும் புலவர்களும் ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் பாயிரத்துட்பட்டவையென்று கூறி னார்.

அவர்களுள் அக்கூற்று ‘திருவள்ளுவ மாலை’யின் அப்பாக்கள் திருக்குறள் அரங்கேறிய காலத்திற்குப் பிற்காலத்தினவென்று கண்ட மாத்திரத்திலே பிழையெனத் தள்ளற் பாலதாம்.

(“திருக்குறள் பன்முக வாசிப்பு நூலிலிருந்து)

நன்றி :- தீக்கதிர் http://www.theekkathir.in/


ஒரு ஊர்ல, ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு... எனத் தொடங்கி,கேட்பவர் மனதுக்குள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடும் கதை சொல்லிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.

 கதை என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, துள்ளலை அதை அனுபவித்தோர் மட்டுமே உணர முடியும்.

 அதிலும் கிராமத்துக் கதைகள் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. குழந்தைகளுக்குச் கதை சொல்லித் தருவது சிறப்பு வடிவம்.
 சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன் வரை ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் நிகழ்ந்து வந்த கதை சொல்லும் பழக்கம் மெல்ல, மெல்ல நலிந்து, இப்போது அதன் தடம் மறைந்து வருகிறது.

 புதிய சிந்தனைக்கான கருவாகக் கருதப்படும் கதைகள் நீதி போதனைகளை  உணர்த்தவும், வெற்றிக்கான கனவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, திறமைகளை மேம்படுத்தவும் வகை செய்யும் வலிமையுடையது.
அந்த வகையில் நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய  தலைமுறையினருக்கு சொல்வது அரிதாகி வருகிறது.

 மாறாக, கல்வி பெறுவதில் ஆங்கில மோகமும், எப்படியாவது கூடுதல் மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்ற வேகமும் மேலோங்கி வருகிறதே தவிர, பிற திறன் வெளிப்பாட்டுக்கான முயற்சிகள் குறைவே.

 சுருங்கச் சொன்னால்,மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர்.

 இதனால் மன அழுத்தம், உளைச்சலுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதோடு, சில நேரங்களில் தவறிழைக்கவும் நேரிடுகிறது.

 வகுப்பு ஆசிரியரையே கொன்ற மாணவன், வகுப்புத் தோழியை பலாத்காரம் செய்த மாணவர்கள் என, அவர்களைத் தொடர்புபடுத்தி ஒழுக்க நெறி மீறல் செய்திகள் தொடர்வது கவலையளிக்கிறது.  இதுபோன்ற சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நூல்களைப் படிப்பது, விளையாடுவது, பயிற்சிபெறுவது என பல நிகழ்வுகளோடு, நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித் தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் விளைவும் பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

 பல ஆண்டுகளுக்கு முன் வரை பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு தனி வகுப்புகள் நடத்தப்பட்டன.

 அங்கு சொல்லப்பட்ட மரம் வெட்டியின் கதை, வடை சுட்ட பாட்டி, அப்பம் பிரித்த குரங்கு, ஆமையும் முயலும் என பல கதைகள்... நேர்மை, பேராசை, தியாகம், ஒற்றுமை, உழைப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என பல வாழ்வியியல் போதனைகளை உணர்த்துவதாக இருந்தது.

 இன்றைக்கோ, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என கேட்கும் நிலை உள்ளது. பள்ளிகளில்தான் இந்நிலை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் கதைகளுக்குத் தட்டுப்பாடாகத்தான் உள்ளது.
 இந்த நிலைக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவும் முக்கிய காரணம்.

 இன்றைக்கு கதை என்ற பெயரில் டி.வி. மாயாஜாலங்களைக் காண்பதின் விளைவு தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.  

 பொதுவாக, மொழி, கலாசாரம், பண்பாடு என சமூதத்தில் நேரிடும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் சினிமா, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில காரணிகளைக் கூறி தப்பித்து விடுகிறோம், கடமையை மறந்து விடுகிறோம்.

 சமுதாயத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்களுக்கு கதைகளைக் கூறி, நீதி போதனைகளைக் கற்பிப்பது அவசியம்.

கல்விக்காகப் பல திட்டங்களை உருவாக்கும் அரசுகள், நீதி போதனைகளைக் கற்பிக்கத் தனி வகுப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.

 குழந்தைகளுக்குக் கதை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதை அவர்களுக்குச் சொல்லித்தரும் பழக்கம் நம்மிடையே இப்போது குறைந்து போகலாம்.

ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது வாரிசுகளுக்குச் சொல்வதற்கு ஒரு கதை இப்போதே தயாராகி வருகிறது. அதை இப்படித் தொடங்குவார்கள்.

 "ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு இரண்டொரு கதை சொல்லிகள் இருப்பார்களாம்; அவர்கள் நிறைய கதைகளைச் சொல்லித் தருவார்களாம்; அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் இல்லையாம், நமது தாத்தா, பாட்டிகளாம்.
 ஏதோ காரணங்களால் அவர்கள் படிப்படியாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களாம்' 

என்று அந்தக் கதை தொடரும் அல்லது மேற்கொண்டு சொல்ல கற்பனை வளம் இல்லாமல் முடியும்.

நன்றி :- தினமணி, 21-09-2012 , வெள்ளிக்கிழமை

காணாமல்போகும் கதை சொல்லிகள்... கே.பி. அம்பிகாபதி



ஒரு ஊர்ல, ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜாவுக்கு... எனத் தொடங்கி,கேட்பவர் மனதுக்குள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடும் கதை சொல்லிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.

 கதை என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, துள்ளலை அதை அனுபவித்தோர் மட்டுமே உணர முடியும்.

 அதிலும் கிராமத்துக் கதைகள் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. குழந்தைகளுக்குச் கதை சொல்லித் தருவது சிறப்பு வடிவம்.
 சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன் வரை ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் நிகழ்ந்து வந்த கதை சொல்லும் பழக்கம் மெல்ல, மெல்ல நலிந்து, இப்போது அதன் தடம் மறைந்து வருகிறது.

 புதிய சிந்தனைக்கான கருவாகக் கருதப்படும் கதைகள் நீதி போதனைகளை  உணர்த்தவும், வெற்றிக்கான கனவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, திறமைகளை மேம்படுத்தவும் வகை செய்யும் வலிமையுடையது.
அந்த வகையில் நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய  தலைமுறையினருக்கு சொல்வது அரிதாகி வருகிறது.

 மாறாக, கல்வி பெறுவதில் ஆங்கில மோகமும், எப்படியாவது கூடுதல் மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்ற வேகமும் மேலோங்கி வருகிறதே தவிர, பிற திறன் வெளிப்பாட்டுக்கான முயற்சிகள் குறைவே.

 சுருங்கச் சொன்னால்,மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர்.

 இதனால் மன அழுத்தம், உளைச்சலுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதோடு, சில நேரங்களில் தவறிழைக்கவும் நேரிடுகிறது.

 வகுப்பு ஆசிரியரையே கொன்ற மாணவன், வகுப்புத் தோழியை பலாத்காரம் செய்த மாணவர்கள் என, அவர்களைத் தொடர்புபடுத்தி ஒழுக்க நெறி மீறல் செய்திகள் தொடர்வது கவலையளிக்கிறது.  இதுபோன்ற சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நூல்களைப் படிப்பது, விளையாடுவது, பயிற்சிபெறுவது என பல நிகழ்வுகளோடு, நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித் தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் விளைவும் பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

 பல ஆண்டுகளுக்கு முன் வரை பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு தனி வகுப்புகள் நடத்தப்பட்டன.

 அங்கு சொல்லப்பட்ட மரம் வெட்டியின் கதை, வடை சுட்ட பாட்டி, அப்பம் பிரித்த குரங்கு, ஆமையும் முயலும் என பல கதைகள்... நேர்மை, பேராசை, தியாகம், ஒற்றுமை, உழைப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என பல வாழ்வியியல் போதனைகளை உணர்த்துவதாக இருந்தது.

 இன்றைக்கோ, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என கேட்கும் நிலை உள்ளது. பள்ளிகளில்தான் இந்நிலை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் கதைகளுக்குத் தட்டுப்பாடாகத்தான் உள்ளது.
 இந்த நிலைக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவும் முக்கிய காரணம்.

 இன்றைக்கு கதை என்ற பெயரில் டி.வி. மாயாஜாலங்களைக் காண்பதின் விளைவு தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.  

 பொதுவாக, மொழி, கலாசாரம், பண்பாடு என சமூதத்தில் நேரிடும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் சினிமா, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில காரணிகளைக் கூறி தப்பித்து விடுகிறோம், கடமையை மறந்து விடுகிறோம்.

 சமுதாயத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்களுக்கு கதைகளைக் கூறி, நீதி போதனைகளைக் கற்பிப்பது அவசியம்.

கல்விக்காகப் பல திட்டங்களை உருவாக்கும் அரசுகள், நீதி போதனைகளைக் கற்பிக்கத் தனி வகுப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.

 குழந்தைகளுக்குக் கதை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதை அவர்களுக்குச் சொல்லித்தரும் பழக்கம் நம்மிடையே இப்போது குறைந்து போகலாம்.

ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது வாரிசுகளுக்குச் சொல்வதற்கு ஒரு கதை இப்போதே தயாராகி வருகிறது. அதை இப்படித் தொடங்குவார்கள்.

 "ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு இரண்டொரு கதை சொல்லிகள் இருப்பார்களாம்; அவர்கள் நிறைய கதைகளைச் சொல்லித் தருவார்களாம்; அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள் இல்லையாம், நமது தாத்தா, பாட்டிகளாம்.
 ஏதோ காரணங்களால் அவர்கள் படிப்படியாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களாம்' 

என்று அந்தக் கதை தொடரும் அல்லது மேற்கொண்டு சொல்ல கற்பனை வளம் இல்லாமல் முடியும்.

நன்றி :- தினமணி, 21-09-2012 , வெள்ளிக்கிழமை


இன்டர்நெட் மூலம் நடக்கும் "சைபர்' குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களால் தனிநபர்கள் பாதிக்கப்பட்டனர், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்ற நிலை மாறி நாட்டையே உலுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றனர் இன்டர்நெட் குற்றவாளிகள்.

சமீபத்தில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக இன்டர்நெட் மூலம் பரவிய வதந்தியால் நாடே கொந்தளிப்பான சூழ்நிலைக்கு உள்ளானது. இதன் பாதிப்பை அனைவருமே உணர்ந்தோம்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை மகிழ்வுடன் அனுபவிக்கும் அதே தருணத்தில் இதுபோன்ற இணையதள சதிகாரர்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம்.

இ-மெயில்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள், புகைப்படங்கள், டுவிட்டர் தகவல்கள் உள்ளிட்டவை எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? அதன் பின்னணி என்ன? அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்காமல், நண்பர்களுடன் அதனைப் பகிர்ந்து, வதந்திகளை பரவச் செய்யும் ஒவ்வொருவரும் அவரை அறியாமலேயே சைபர் குற்றவாளி ஆகிறார்கள், சமூக விரோதிகளுக்குத் துணை போகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது சைபர் கிரைம். சர்வதேச அளவில் "சைபர் போர்' ஏற்படுவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளதை வைத்தே பிரச்னை எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்து தாக்கியது "ஷமூன்' வைரஸ். இன்டர்நெட் மூலம் பரவிய இந்த வைரஸ் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை செயல் இழக்கவைத்து அதிர்ச்சி அளித்தது. 
எண்ணெய் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வைரஸ்களை ஏவிவிட்டது யார் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
 இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அந்நிறுவனங்களுக்கு ஒருவார காலம் பிடித்தது. 

இக்காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பு பல ஆயிரம் கோடி.
இதற்கு முன் ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்கா ஏவிவிட்ட "ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளை உளவு பார்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவிட்டதாக தெரியவந்துள்ள "ஃபிளேம்' வைரஸ் ஆகியவை இன்டர்நெட்டில் பரவியதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த வைரஸ்கள் குறித்த தகவல் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. ஃபிளேம் வைரûஸ முற்றிலுமாக ஒழிக்க இப்போது வரை வழியில்லாமல் திண்டாடும் நிலைதான் உள்ளது.
இன்டர்நெட் மூலம் தொடுக்கப்படும் இத்தகைய சைபர் போரால் பொருளாதார இழப்புகளை மட்டுமின்றி பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

எதிர்காலத்தில், தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து படகில் ஏற்றி அனுப்பியோ, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்தோ தாக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை வழக்கொழிந்த ஆயுதங்கள் ஆகிவிடும்.

வேண்டாத நாடுகளைத் தாக்க வல்லரசு நாடுகளுக்குப் போர் விமானங்களோ, அணுகுண்டுகளோ தேவைப்படாது.

நமது அருகில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் மூலமே நம் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். இதற்கு, இன்டர்நெட் முக்கிய ஆயுதம் தாங்கும் கருவியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பிறநாடுகளின் பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட ரகசிய தகவல்களைத் திருடுவதும், வெப்சைட்டுகளை முடக்குவதும் பழங்கதையாகிவிடும்.

மின்சாரம், எரிசக்தி, அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை பங்குச் சந்தைகள், ரயில், விமானப் போக்குவரத்து, அணுசக்தித் துறை, எரிபொருள், குடிநீர் சப்ளை என அனைத்துமே இப்போது மேலைநாடுகளில் முற்றிலுமாக கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் மிகவேகமாக அனைத்துத் துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன.

இதனால் இன்டர்நெட் மூலம் புகுந்துவிடும் பயங்கரவாதிகளால், தகவல் தொழில் நுட்பத்திலும், கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குவதில் கைதேர்ந்த ஒரு சிலரது உதவியுடன் நாட்டின் மின் இணைப்பை ஒரே நேரத்தில் முற்றிலுமாகத் துண்டிக்க முடியும்.

அரசு நிர்வாகம், பங்குச்சந்தை போன்றவற்றில் சில நொடிகளில் சீரழிவை ஏற்படுத்த முடியும். மின்சார ரயில்கள் அனைத்தையும் தடம்புரளச் செய்ய முடியும். வானில் பறந்து செல்லும் விமானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்தில் மோதச் செய்யவும் முடியும். எரிபொருள் பைப் லைன்களில் கூடுதல் வெப்பத்தை உருவாக்கி அவற்றை வெடித்துச் சிதறடிக்க முடியும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அணுமின் நிலைய கம்ப்யூட்டர்களுக்குள் இவர்கள் புகுந்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட முடியும். இவற்றில் எதுவுமே மிகையான கற்பனையல்ல. இவை அனைத்துமே, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், புஷ் ஆகியோருக்கு சைபர் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ரிச்சர்ட் ஏ.கிளார்க் "எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ளவை' என்று உறுதியிட்டுக் கூறியிருப்பவை.

வளர்ந்த நாடுகளிலேயே சூழ்நிலை இவ்வாறு இருக்க, இந்தியா போன்ற நாடுகளில் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைக்கும் பயங்கரவாதிகளையே பிடிக்க முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர்களுக்கு புகுந்து தாக்கும் சைபர் பயங்கரவாதிகளை கண்டறிந்து தடுப்பது என்பது எளிதில் சாத்தியமாகாத விஷயம்.

அந்த அளவுக்கு சைபர் பயங்கரவாதிகளை அழிக்கும் தொழில்நுட்பமும் நம்மிடமில்லை. இப்போதும் கூட பல்வேறு முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில்கூட சாதாரணமான வைரஸ் பாதுகாப்பு முறைகளே உள்ளன. சைபர் குற்றங்களில் கைதேர்ந்தவர்களுக்கு இதனை உடைப்பது என்பது மிகச்சாதாரணமான விஷயம்.

ஆபத்துகள் உள்ளன என்பதற்காக இன்டர்நெட் இணைப்பைப் பிடுங்கிவிட்டு, கம்ப்யூட்டர்களைப் பரணில் போடுங்கள் என்று கூறமுடியாது.

சைபர் பயங்கரவாதிகளால் எந்தவகையான தாக்குதல்களையும் நடத்த முடியும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நினைவூட்ட வேண்டும்.

நன்றி :- தினமணி  படைப்பு :- க.வெங்கடேஸ்வரன்

"இன்டர்நெட்' மூலம்தான் மூன்றாம் உலகப் போர்!



இன்டர்நெட் மூலம் நடக்கும் "சைபர்' குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களால் தனிநபர்கள் பாதிக்கப்பட்டனர், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்ற நிலை மாறி நாட்டையே உலுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றனர் இன்டர்நெட் குற்றவாளிகள்.

சமீபத்தில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக இன்டர்நெட் மூலம் பரவிய வதந்தியால் நாடே கொந்தளிப்பான சூழ்நிலைக்கு உள்ளானது. இதன் பாதிப்பை அனைவருமே உணர்ந்தோம்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை மகிழ்வுடன் அனுபவிக்கும் அதே தருணத்தில் இதுபோன்ற இணையதள சதிகாரர்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம்.

இ-மெயில்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள், புகைப்படங்கள், டுவிட்டர் தகவல்கள் உள்ளிட்டவை எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? அதன் பின்னணி என்ன? அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்காமல், நண்பர்களுடன் அதனைப் பகிர்ந்து, வதந்திகளை பரவச் செய்யும் ஒவ்வொருவரும் அவரை அறியாமலேயே சைபர் குற்றவாளி ஆகிறார்கள், சமூக விரோதிகளுக்குத் துணை போகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது சைபர் கிரைம். சர்வதேச அளவில் "சைபர் போர்' ஏற்படுவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளதை வைத்தே பிரச்னை எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்து தாக்கியது "ஷமூன்' வைரஸ். இன்டர்நெட் மூலம் பரவிய இந்த வைரஸ் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை செயல் இழக்கவைத்து அதிர்ச்சி அளித்தது. 
எண்ணெய் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வைரஸ்களை ஏவிவிட்டது யார் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
 இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அந்நிறுவனங்களுக்கு ஒருவார காலம் பிடித்தது. 

இக்காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பு பல ஆயிரம் கோடி.
இதற்கு முன் ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்கா ஏவிவிட்ட "ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளை உளவு பார்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவிட்டதாக தெரியவந்துள்ள "ஃபிளேம்' வைரஸ் ஆகியவை இன்டர்நெட்டில் பரவியதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த வைரஸ்கள் குறித்த தகவல் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. ஃபிளேம் வைரûஸ முற்றிலுமாக ஒழிக்க இப்போது வரை வழியில்லாமல் திண்டாடும் நிலைதான் உள்ளது.
இன்டர்நெட் மூலம் தொடுக்கப்படும் இத்தகைய சைபர் போரால் பொருளாதார இழப்புகளை மட்டுமின்றி பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

எதிர்காலத்தில், தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து படகில் ஏற்றி அனுப்பியோ, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்தோ தாக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை வழக்கொழிந்த ஆயுதங்கள் ஆகிவிடும்.

வேண்டாத நாடுகளைத் தாக்க வல்லரசு நாடுகளுக்குப் போர் விமானங்களோ, அணுகுண்டுகளோ தேவைப்படாது.

நமது அருகில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் மூலமே நம் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். இதற்கு, இன்டர்நெட் முக்கிய ஆயுதம் தாங்கும் கருவியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பிறநாடுகளின் பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட ரகசிய தகவல்களைத் திருடுவதும், வெப்சைட்டுகளை முடக்குவதும் பழங்கதையாகிவிடும்.

மின்சாரம், எரிசக்தி, அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை பங்குச் சந்தைகள், ரயில், விமானப் போக்குவரத்து, அணுசக்தித் துறை, எரிபொருள், குடிநீர் சப்ளை என அனைத்துமே இப்போது மேலைநாடுகளில் முற்றிலுமாக கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் மிகவேகமாக அனைத்துத் துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன.

இதனால் இன்டர்நெட் மூலம் புகுந்துவிடும் பயங்கரவாதிகளால், தகவல் தொழில் நுட்பத்திலும், கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குவதில் கைதேர்ந்த ஒரு சிலரது உதவியுடன் நாட்டின் மின் இணைப்பை ஒரே நேரத்தில் முற்றிலுமாகத் துண்டிக்க முடியும்.

அரசு நிர்வாகம், பங்குச்சந்தை போன்றவற்றில் சில நொடிகளில் சீரழிவை ஏற்படுத்த முடியும். மின்சார ரயில்கள் அனைத்தையும் தடம்புரளச் செய்ய முடியும். வானில் பறந்து செல்லும் விமானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்தில் மோதச் செய்யவும் முடியும். எரிபொருள் பைப் லைன்களில் கூடுதல் வெப்பத்தை உருவாக்கி அவற்றை வெடித்துச் சிதறடிக்க முடியும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அணுமின் நிலைய கம்ப்யூட்டர்களுக்குள் இவர்கள் புகுந்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட முடியும். இவற்றில் எதுவுமே மிகையான கற்பனையல்ல. இவை அனைத்துமே, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், புஷ் ஆகியோருக்கு சைபர் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ரிச்சர்ட் ஏ.கிளார்க் "எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ளவை' என்று உறுதியிட்டுக் கூறியிருப்பவை.

வளர்ந்த நாடுகளிலேயே சூழ்நிலை இவ்வாறு இருக்க, இந்தியா போன்ற நாடுகளில் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைக்கும் பயங்கரவாதிகளையே பிடிக்க முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர்களுக்கு புகுந்து தாக்கும் சைபர் பயங்கரவாதிகளை கண்டறிந்து தடுப்பது என்பது எளிதில் சாத்தியமாகாத விஷயம்.

அந்த அளவுக்கு சைபர் பயங்கரவாதிகளை அழிக்கும் தொழில்நுட்பமும் நம்மிடமில்லை. இப்போதும் கூட பல்வேறு முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில்கூட சாதாரணமான வைரஸ் பாதுகாப்பு முறைகளே உள்ளன. சைபர் குற்றங்களில் கைதேர்ந்தவர்களுக்கு இதனை உடைப்பது என்பது மிகச்சாதாரணமான விஷயம்.

ஆபத்துகள் உள்ளன என்பதற்காக இன்டர்நெட் இணைப்பைப் பிடுங்கிவிட்டு, கம்ப்யூட்டர்களைப் பரணில் போடுங்கள் என்று கூறமுடியாது.

சைபர் பயங்கரவாதிகளால் எந்தவகையான தாக்குதல்களையும் நடத்த முடியும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நினைவூட்ட வேண்டும்.

நன்றி :- தினமணி  படைப்பு :- க.வெங்கடேஸ்வரன்






ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இந்த உயிர்க்கோளத்தின் கடைசி வாழ்விடமாக அவை நீலகிரி உயிர்க்கோளத்தில் இருக்கும்.''

 இந்த வார்த்தைகள் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விலங்கியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

 அந்த அளவுக்கு உலகிலுள்ள உயிர்க்கோளங்களில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் அல்லது உயிர்க்கோள காப்பகம் (என்.பி.ஆர்) என அழைக்கப்படும் பகுதி சிறப்பு மண்டலமாக அமைந்துள்ளது.

நாம் வாழும் பூமிக்கு உயிர்க்கோளம் (பயோஸ்பியர்) என்றொரு பெயரும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் பூமியைத்தவிர வேறு எந்தப் பகுதியிலும் உயிரினங்கள் இருப்பது தொடர்பாக இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படாததாலேயே பூமிக்கு மட்டும் இத்தகைய பெயர் உள்ளது.

 நாம் வாழும் புவியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 800 கோடி மனித இனமும்  ஒன்றாகும்.

 உயிர்க்கோளத்தில் உயிர் வாழத் தேவையான சூழலை உருவாக்கித் தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். அந்த இடங்களே உயிர்க்கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோளக் காப்பகங்கள் என யுனெஸ்கோ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோளக் காப்பகம் நீலகிரி. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோவின் அங்கீகாரம் இந்த மலைக்கு கிடைத்து தற்போது 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளது.

 தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அரவணைத்து நிற்கும் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். சுமார் 5,560 ச.கி.மீ பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதிகளில் 1,527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 1,455 ச.கி.மீ. பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள மண்டலம்.

 இப்பகுதியைக் குறித்து முழுமையாக ஆய்வை நடத்தி வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் துணைத் தலைவர் ம.கணேஷ் கூறுகையில், ""இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகளும், 50 வகையிலான பறவைகளும், 80 வகையான ஊர்வனவும், 39 வகையான மீன்களும், 316 வகையிலான பட்டாம்பூச்சிகளும் உள்ளன. அதேபோல, 3,300 வகையிலான பூக்கும் தாவரங்களும் இங்குள்ளன. இவற்றில் 1,232 வகையான தாவரங்கள் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டுமே காணக் கிடைப்பவை'' என்றார்.

 இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலுமே குறைந்து வரும் சூழலில் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதே இப்பகுதியின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே என்றால் மிகையல்ல.

 அதனால்தான் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழவிடமாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மைதான். இப்போது 25 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மேலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இதே பெருமையுடன் திகழ வேண்டுமென்பதே இயற்கை ஆர்வலர்களின் பேராசையாகும்.

-ஏ.பேட்ரிக்

நன்றி :- 16-09-2012 தினமணி  ஞாயிறு கொண்டாட்டம்

என்.பி.ஆர்: நாட்டின் முதல் உயிர்க்கோளக் காப்பகத்திற்கு வயது 25!







ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இந்த உயிர்க்கோளத்தின் கடைசி வாழ்விடமாக அவை நீலகிரி உயிர்க்கோளத்தில் இருக்கும்.''

 இந்த வார்த்தைகள் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விலங்கியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

 அந்த அளவுக்கு உலகிலுள்ள உயிர்க்கோளங்களில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் அல்லது உயிர்க்கோள காப்பகம் (என்.பி.ஆர்) என அழைக்கப்படும் பகுதி சிறப்பு மண்டலமாக அமைந்துள்ளது.

நாம் வாழும் பூமிக்கு உயிர்க்கோளம் (பயோஸ்பியர்) என்றொரு பெயரும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் பூமியைத்தவிர வேறு எந்தப் பகுதியிலும் உயிரினங்கள் இருப்பது தொடர்பாக இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படாததாலேயே பூமிக்கு மட்டும் இத்தகைய பெயர் உள்ளது.

 நாம் வாழும் புவியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 800 கோடி மனித இனமும்  ஒன்றாகும்.

 உயிர்க்கோளத்தில் உயிர் வாழத் தேவையான சூழலை உருவாக்கித் தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். அந்த இடங்களே உயிர்க்கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோளக் காப்பகங்கள் என யுனெஸ்கோ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோளக் காப்பகம் நீலகிரி. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோவின் அங்கீகாரம் இந்த மலைக்கு கிடைத்து தற்போது 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளது.

 தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அரவணைத்து நிற்கும் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். சுமார் 5,560 ச.கி.மீ பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதிகளில் 1,527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 1,455 ச.கி.மீ. பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள மண்டலம்.

 இப்பகுதியைக் குறித்து முழுமையாக ஆய்வை நடத்தி வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் துணைத் தலைவர் ம.கணேஷ் கூறுகையில், ""இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகளும், 50 வகையிலான பறவைகளும், 80 வகையான ஊர்வனவும், 39 வகையான மீன்களும், 316 வகையிலான பட்டாம்பூச்சிகளும் உள்ளன. அதேபோல, 3,300 வகையிலான பூக்கும் தாவரங்களும் இங்குள்ளன. இவற்றில் 1,232 வகையான தாவரங்கள் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டுமே காணக் கிடைப்பவை'' என்றார்.

 இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலுமே குறைந்து வரும் சூழலில் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதே இப்பகுதியின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே என்றால் மிகையல்ல.

 அதனால்தான் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழவிடமாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மைதான். இப்போது 25 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மேலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இதே பெருமையுடன் திகழ வேண்டுமென்பதே இயற்கை ஆர்வலர்களின் பேராசையாகும்.

-ஏ.பேட்ரிக்

நன்றி :- 16-09-2012 தினமணி  ஞாயிறு கொண்டாட்டம்






 நடப்பு ஆண்டிற்கான 400 அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கப் பணக்காரர்கள் வரிசையில் இவர் 239-வது இடத்தில்  உள்ளவர்,     59-வயதுடைய. தேசாய் . இவரது சொத்து மதிப்பு 200 கோடி  டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் முதல் பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 250-வது இடத்தில் உள்ளவர், 65 வயதுடைய ரமேஷ் வத்வானி. இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் இரண்டாவது பணக்காரர். 

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 298-வது இடத்தில் உள்ளவர்,  55 வயதுடைய ஸ்ரீராம். இவரது சொத்து மதிப்பு 160 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் மூன்றாவது பணக்காரர்.   

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 311-வது இடத்தில் உள்ளவர்,, 59 வயதுடைய  மனோஷ் பார்காவா. இவரது சொத்தின் மதிப்பு 150 கோடி டாலர்..அமெரிக்காவாழ் இந்தியரில் நான்காவது பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 328-வது இடத்தில் உள்ளவர், 57 வயதுடைய கோஷ்லா. இவரது சொத்தின் மதிப்பு 140 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் ஐந்தாவது பணக்காரர்..  

அமெரிக்க மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனி அதிபர் பில்கேட்ஸ், 7300 கோடி டாலர் சொத்துக்குரியவராகி இந்த ஆண்டும் முதலிடம் வகிக்கின்றார்.19 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.   

இரண்டாவது இடத்தில் வருபவர், பெர்க்சர் ஹதாவ் கம்பெனி அதிபர், பப்பெட். இவரது சொத்தின் மதிப்பு 4600 கோடி டாலர்.    

ஆரக்கள் கம்யூட்டர் கம்பெனி அதிபர் லேரி எலிசன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 4000 கோடி டாலர்.

 Forbes magazine's annual list












அமெரிக்காவாழ் முதல் ஐந்து இந்தியப் பணக்காரர் பட்டியல் !







 நடப்பு ஆண்டிற்கான 400 அமெரிக்கக் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கப் பணக்காரர்கள் வரிசையில் இவர் 239-வது இடத்தில்  உள்ளவர்,     59-வயதுடைய. தேசாய் . இவரது சொத்து மதிப்பு 200 கோடி  டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் முதல் பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 250-வது இடத்தில் உள்ளவர், 65 வயதுடைய ரமேஷ் வத்வானி. இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் இரண்டாவது பணக்காரர். 

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 298-வது இடத்தில் உள்ளவர்,  55 வயதுடைய ஸ்ரீராம். இவரது சொத்து மதிப்பு 160 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் மூன்றாவது பணக்காரர்.   

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 311-வது இடத்தில் உள்ளவர்,, 59 வயதுடைய  மனோஷ் பார்காவா. இவரது சொத்தின் மதிப்பு 150 கோடி டாலர்..அமெரிக்காவாழ் இந்தியரில் நான்காவது பணக்காரர்.

அமெரிக்கப் பணக்காரர் வரிசையில் இவர் 328-வது இடத்தில் உள்ளவர், 57 வயதுடைய கோஷ்லா. இவரது சொத்தின் மதிப்பு 140 கோடி டாலர். அமெரிக்காவாழ் இந்தியரில் ஐந்தாவது பணக்காரர்..  

அமெரிக்க மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனி அதிபர் பில்கேட்ஸ், 7300 கோடி டாலர் சொத்துக்குரியவராகி இந்த ஆண்டும் முதலிடம் வகிக்கின்றார்.19 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.   

இரண்டாவது இடத்தில் வருபவர், பெர்க்சர் ஹதாவ் கம்பெனி அதிபர், பப்பெட். இவரது சொத்தின் மதிப்பு 4600 கோடி டாலர்.    

ஆரக்கள் கம்யூட்டர் கம்பெனி அதிபர் லேரி எலிசன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 4000 கோடி டாலர்.

 Forbes magazine's annual list