Monday, October 1, 2012

கொடுமணம் -கொடுமணல் ஆன கதை! -அரசு தொல்லியல்துறை ஆய்வு !




இன்றையக் கொடுமணல் சங்ககாலக் கொடுமணம் ஆகும். பதிற்றுப்பத்தில் கொடுமணம் பற்றிய செய்திகள் இரு இடங்களில் வருகின்றன.

1979-ல் ஒரு மாதிரி அகழாய்வ்வுக் குழி ஒன்று தோண்டப்பெற்றது. அந்த அகழாய்வில் உரோமானிய ஓடு ஒன்று கிடைக்கப் பெற்றது. 1985-ல் மூன்று பருவங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இவற்றின் மூலம் கொடுமணம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து நிலை பெற்றிருந்த ஊர் என்று கூறலாம்.

வேளிர் நகரமாக உருவான கொடுமணம், நாளடைவில் வடநாட்டாரும், வெளிநாட்டாரும் வந்து செல்ல்லும் வணிக மையமாக எழுச்சிபெற்றது. கபிலர், “கொடுமணம் பட்டவினை மாண் நன்கலம் “ என்று நான்கு சொற்களால் குறிப்பிடுவார்,.

சங்க காலத்தைக் காலவரையறை செய்திடக் கொடுமணல் அகழ்வாய்வுகள் பல சான்றுகளை அளித்துள்ளன. மேலும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில் துறையில் முன்னேறியிருந்தார்கள் எப்பதையும் இந்த அகழ்வாய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியக்துறை சென்னை-8 2-011-திருவள்ளுவர் ஆண்டு 20-42-ல் வெளியீட்டு வரிசையில், எண் 242 ஆக ஆயிரம் பிரதிகளை வெளியிட்டள்ளது. 

ஆசிரியர்களாகப் பரிணமிப்போர் :- முனைவர்.ர. பூங்குன்றன், முனைவர். தி.சுப்பிரமணியன், முனைவர் சீ.வசந்தி, வெ,இராமமூர்த்தி, இரா. செல்வராஜ்.

அகழாய்வில் தலைமை ஏற்றோர்:-

முனைவர்.இரா.நாகசாமி, நடன.காசிநாதன், அ.அப்துல் மஜீத்  

அகழ்வாய்வில் பங்கேற்றவர்கள் :- 

முனைவர்.ர.பூங்குன்றன். வெ.இராமமூர்த்து. கி.ஸ்ரீதரன், முனைவர். தி.சுப்பிடமணியம், இரா.செல்வராசு, பெ.கெளதமபுத்திரன், வே.மகுடேஸ்வரன், மு.த. ஸ்ரீதரன், நா.பாலகிருஷ்ணன்.

நன்றி :-தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு எண்:-242.

12 புள்ளிகள், 44 பக்கங்கள், 1000 பிரதிகள், விலை ரூபாய் 22.

www.tnarch.gov.in

tnarch@tn.nic/archommissioner@gmail.com
\
HALLS ROAD, EGMORE, CHENNAI-6000 008

28290020  ,  28190023



0 comments:

Post a Comment

Kindly post a comment.