Friday, November 30, 2012

நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012                 நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012




பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் என 10 பேர் ஒன்று கூடினோம். ’தமிழக விவசாயிகள் தொழில் நுட்பக் கழகம்’ உருவானது. 2000-ல் இது நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம். எல்லோருமே விவசாயிகள் ஆனதால், அனுபவங்களை எடுத்துச் சொன்னோம். இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் முற்றிலுமாக விலக்கச் சொன்னோம்.பண்ணையில் கிடைப்பதை வைத்துத் தற்சார்புடன் விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் 15,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.

விவசாயிகளைக் கேட்டால், களை, பூச்சி இரண்டையும்தான் பெரிய பிரச்சினைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பூச்சிகளுக்கு முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவங்கள் உண்டு. பூச்சி மருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை.  

அப்புறம் பூச்சி மருந்து தெளித்து என்ன பயன்?

இதையும் தாண்டி எல்லா உயிரினங்களும் தலைமுறைகள்தோறும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான். ஒரு வருடத்தில் பூச்சி 10 தலைமுறைகளையே கடந்திருக்கும் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகும். கடைசியில் பூச்சிக் கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்து விழுவார். பூச்சிகள் பறந்து போகும். இதுதான் இங்கு நடக்கிறது.

மண்ணில் சத்து குறையும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்தக் களைச் செடி முளத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரி செய்யப்படும். களையும் இல்லாமல் போகும்.

“ தமிழக விவசாயிகள் கழகம்” இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங்கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. “தாளாண்மை” என்ற சிற்றிதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, 4 ஏக்கர் நிலத்தில், நமக்காக, நமது நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைத்து, அதை விட அதிகமான வருவாய் ஈட்ட முடியும்.மன உளைச்சல் இல்லை, மருந்துச் செலவும் இல்லை. இளநீர் வெட்டிக் குடிக்கலாம்.இந்த மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் நமது வருமானம் லடச ரூபாயைத் தாண்டும்.

சர்வோதய இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, “இன்றுள்ள சூழலில் விவசாய விளைபொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கி கட்டுபடி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை.                                                                                                                                             

உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் இரவும் பகலும் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறந்தது 4,000/- ரூபாய்க்கு வந்துவிடும். ஒரு கிலோ அரிசி ரூபாய் 100/-ஐத் தாண்டிவிடும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------
தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. அதுதான் இன்றைய உலகமயமாக்கலின் அடிப்படை. அதாவது ஒருபொருள் எங்கு விளைகிறதோ அங்கு பயன்படுத்தப்படக்கூடாது. தஞ்சையில் விளையும் நெல், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலிய ஆப்பிள் சேலத்துக்கும் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், நாங்கள் இதை எதிர்க்கிறோம். விவசாய உற்பத்தி, விளை பொருட்களை உபயோகப்படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருத்தல் வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் 
ஆனந்த விகடன் பத்திரிகையாளர், 
ாரி ம்பி  
தெருவிளக்கு பகுதிக்காக 
பாமயன்
என்ற விவசாயிடம்
திரட்டியற்றில் ஒரு பி..
---------------------------------------------------------------------------------------------------------------
மதுரை அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டியில், 20 விவசாயிகள் ஒருங்கிணைந்து, 40 ஏக்கரில்  பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதிலிருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன்படுத்தி, சட்டைகள் தைத்து விற்கின்றனர். தேங்காய் சிரட்டையில் பட்டன். ”துகில்” என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்கப்படும் காட்டன் சட்டைகளைவிட விலை குறைவுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------
வரகு, குதிரைவாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை விற்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
”எந்த ஒரு விவசாய விளை பொருளையும் மதிப்புக்கூட்டி விற்கவேண்டும்” என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதே கொள்கையைத்தான் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கும் பயன்படுத்துகின்றனர். யார் அணுகினாலும் இதற்கான ஆலோசனை மற்ம் தொழில் நுட்பத்தையும் தருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதைச் சரி செய்ய எளிதான வழி, “ இரண்டு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து தரிசாகக் கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும்” என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள். விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடும் விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்” என்கிறார் பாமயன்.
----------------------------------------------------------------------------------------------------------------
 ஆங்காங்கே பரவலாக உள்ள வலைப்பதிவர்கள்  பாமயன் போன்றோரைத்

தேடிக்கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாமே ?

ஒரு கிலோ அரிசி விலை ரூபாய் 100/-ஐத் தாண்டினால் நகரில் வாழ்வோர் என்ன செய்வர் ?

நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012                 நன்றி :- ஆனந்த விகடன், 05-12-2012




பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் என 10 பேர் ஒன்று கூடினோம். ’தமிழக விவசாயிகள் தொழில் நுட்பக் கழகம்’ உருவானது. 2000-ல் இது நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம். எல்லோருமே விவசாயிகள் ஆனதால், அனுபவங்களை எடுத்துச் சொன்னோம். இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் முற்றிலுமாக விலக்கச் சொன்னோம்.பண்ணையில் கிடைப்பதை வைத்துத் தற்சார்புடன் விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் 15,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.

விவசாயிகளைக் கேட்டால், களை, பூச்சி இரண்டையும்தான் பெரிய பிரச்சினைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. பூச்சிகளுக்கு முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவங்கள் உண்டு. பூச்சி மருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை.  

அப்புறம் பூச்சி மருந்து தெளித்து என்ன பயன்?

இதையும் தாண்டி எல்லா உயிரினங்களும் தலைமுறைகள்தோறும் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கின்றன. பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான். ஒரு வருடத்தில் பூச்சி 10 தலைமுறைகளையே கடந்திருக்கும் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகும். கடைசியில் பூச்சிக் கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்து விழுவார். பூச்சிகள் பறந்து போகும். இதுதான் இங்கு நடக்கிறது.

மண்ணில் சத்து குறையும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்தக் களைச் செடி முளத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரி செய்யப்படும். களையும் இல்லாமல் போகும்.

“ தமிழக விவசாயிகள் கழகம்” இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங்கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. “தாளாண்மை” என்ற சிற்றிதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, 4 ஏக்கர் நிலத்தில், நமக்காக, நமது நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைத்து, அதை விட அதிகமான வருவாய் ஈட்ட முடியும்.மன உளைச்சல் இல்லை, மருந்துச் செலவும் இல்லை. இளநீர் வெட்டிக் குடிக்கலாம்.இந்த மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் நமது வருமானம் லடச ரூபாயைத் தாண்டும்.

சர்வோதய இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, “இன்றுள்ள சூழலில் விவசாய விளைபொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கி கட்டுபடி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை.                                                                                                                                             

உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் இரவும் பகலும் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறந்தது 4,000/- ரூபாய்க்கு வந்துவிடும். ஒரு கிலோ அரிசி ரூபாய் 100/-ஐத் தாண்டிவிடும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.
-------------------------------------------------------------------------------------------------------------
தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. அதுதான் இன்றைய உலகமயமாக்கலின் அடிப்படை. அதாவது ஒருபொருள் எங்கு விளைகிறதோ அங்கு பயன்படுத்தப்படக்கூடாது. தஞ்சையில் விளையும் நெல், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலிய ஆப்பிள் சேலத்துக்கும் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால், நாங்கள் இதை எதிர்க்கிறோம். விவசாய உற்பத்தி, விளை பொருட்களை உபயோகப்படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருத்தல் வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் 
ஆனந்த விகடன் பத்திரிகையாளர், 
ாரி ம்பி  
தெருவிளக்கு பகுதிக்காக 
பாமயன்
என்ற விவசாயிடம்
திரட்டியற்றில் ஒரு பி..
---------------------------------------------------------------------------------------------------------------
மதுரை அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டியில், 20 விவசாயிகள் ஒருங்கிணைந்து, 40 ஏக்கரில்  பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதிலிருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன்படுத்தி, சட்டைகள் தைத்து விற்கின்றனர். தேங்காய் சிரட்டையில் பட்டன். ”துகில்” என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்கப்படும் காட்டன் சட்டைகளைவிட விலை குறைவுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------
வரகு, குதிரைவாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை விற்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
”எந்த ஒரு விவசாய விளை பொருளையும் மதிப்புக்கூட்டி விற்கவேண்டும்” என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதே கொள்கையைத்தான் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கும் பயன்படுத்துகின்றனர். யார் அணுகினாலும் இதற்கான ஆலோசனை மற்ம் தொழில் நுட்பத்தையும் தருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதைச் சரி செய்ய எளிதான வழி, “ இரண்டு ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து தரிசாகக் கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும்” என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள். விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடும் விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்” என்கிறார் பாமயன்.
----------------------------------------------------------------------------------------------------------------
 ஆங்காங்கே பரவலாக உள்ள வலைப்பதிவர்கள்  பாமயன் போன்றோரைத்

தேடிக்கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாமே ?





சமீபத்தில் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் குடும்ப வன்முறைகள் அதிக அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 9431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 3983 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிகம் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1661 வழக்குகளும் பதிவாகியிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு கூறுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11 ஆயிரத்து 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2009-ல் 7 ஆயிரத்து 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை மக்களவையில் இன்றையக் கேள்வி நேரத்தின்போது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

இதேபோல் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த கிருஷ்ணா தீரத், ‘பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் 36 வழக்குகளை கையாண்டுள்ளது.

 அதிலும் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 21 புகார்கள் வந்துள்ளன. அடுத்து ஆந்திராவில் இருந்து 4 புகார்கள் வந்துள்ளன’ என்றார்.                                

நன்றி :-மாலைமலர், 30-11-2012

தமிழ்நாட்டில் குடும்ப வன்முறை வழக்குகள் அதிகம்: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் !





சமீபத்தில் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் குடும்ப வன்முறைகள் அதிக அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 9431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 3983 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிகம் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1661 வழக்குகளும் பதிவாகியிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு கூறுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11 ஆயிரத்து 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2009-ல் 7 ஆயிரத்து 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை மக்களவையில் இன்றையக் கேள்வி நேரத்தின்போது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

இதேபோல் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த கிருஷ்ணா தீரத், ‘பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் 36 வழக்குகளை கையாண்டுள்ளது.

 அதிலும் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 21 புகார்கள் வந்துள்ளன. அடுத்து ஆந்திராவில் இருந்து 4 புகார்கள் வந்துள்ளன’ என்றார்.                                

நன்றி :-மாலைமலர், 30-11-2012

வின்மணியார் 09-11-2010-ல் பதிந்ததன் மீள்பதிவு:-

வரலாற்றுத் தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்து
கொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

காலத்தால் என்றும் அழியாத பொக்‌கிஷங்களான வரலாற்றுத்
தகவல்களைப் பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு
தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை ஆன்லைன்
மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின்
நூலகம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wdl.org

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்றுத் தகவல்களைத்
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்றுப்
புத்தகங்களும் வரும்

இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாகத் தேடிப் படிக்கலாம். செல்லறித்துப்போன வரலாற்று செய்திகளைத் தூசுதட்டி மென்நூலகமாக கொடுத்திருக்கும் இந்ததளம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உலக டிஜிட்டல் மின்நூலகம். !

வின்மணியார் 09-11-2010-ல் பதிந்ததன் மீள்பதிவு:-

வரலாற்றுத் தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்து
கொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

காலத்தால் என்றும் அழியாத பொக்‌கிஷங்களான வரலாற்றுத்
தகவல்களைப் பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு
தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை ஆன்லைன்
மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின்
நூலகம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wdl.org

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்றுத் தகவல்களைத்
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்றுப்
புத்தகங்களும் வரும்

இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாகத் தேடிப் படிக்கலாம். செல்லறித்துப்போன வரலாற்று செய்திகளைத் தூசுதட்டி மென்நூலகமாக கொடுத்திருக்கும் இந்ததளம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.


லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு
வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.

பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.


தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.


மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.

நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.


வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.

அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.

பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.

நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்மணியார் சிந்தனைகள் !


விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.


லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு
வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.

பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.


தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.


மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.

நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.


வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.

அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.

பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.

வின்மணியார் 22-10-2010-ல் பதிந்ததன் மீள்பதிவு.

ஆன்லைன் ரேடியோ ஸ்டேசன்கள் உலக அளவில் பல இருக்கின்றது
இதில் சிறந்த ஒலிபரப்பையும் சட்ட விரோதமில்லாத ஒலிபரப்பை
கொடுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்களை
நாம் ஆன்லைன் மூலம் எளிதாக தேடிப்பெறலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

புத்தம் புது நிகழ்ச்சிகள், பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ,
நகைச்சுவை, தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் , மொழி மற்றும்
அறிவியல் நிகழ்ச்சிகள் என இன்னும் ரேடியோக்கு இருக்கும்
முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆன்லைன்
மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய ரேடியோ
நிகழ்சிகளை கேட்கலாம் இதற்காக ஒவ்வொரு ஆன்லைன்
ரேடியோ ஒலிபரப்பு முகவரியையும் தேடவேண்டாம் இருக்கும்
ஒரே இடத்தில் இருந்து அத்தனை ரேடியோ நிலையங்களின்
இணையமுகவரியையும் கொண்டு ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://onellama.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் அதிகமாக மக்கள் கேட்கும் ஆன்லைன்
ரேடியோ முகவரியை முதல் பக்கத்திலே கொடுக்கின்றனர். இதைத்தவிர
Location என்பதை சொடுக்கி எந்த நாட்டின் ரேடியோ நிகழ்சியை
கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். Artist மற்றும்
Popularity மூலம் விரும்பிய நிகழ்சிகளையும் கேட்கலாம். இணைய
வானொலிப் பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

winmani.wordpress.com

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம் !

வின்மணியார் 22-10-2010-ல் பதிந்ததன் மீள்பதிவு.

ஆன்லைன் ரேடியோ ஸ்டேசன்கள் உலக அளவில் பல இருக்கின்றது
இதில் சிறந்த ஒலிபரப்பையும் சட்ட விரோதமில்லாத ஒலிபரப்பை
கொடுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்களை
நாம் ஆன்லைன் மூலம் எளிதாக தேடிப்பெறலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

புத்தம் புது நிகழ்ச்சிகள், பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ,
நகைச்சுவை, தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் , மொழி மற்றும்
அறிவியல் நிகழ்ச்சிகள் என இன்னும் ரேடியோக்கு இருக்கும்
முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆன்லைன்
மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய ரேடியோ
நிகழ்சிகளை கேட்கலாம் இதற்காக ஒவ்வொரு ஆன்லைன்
ரேடியோ ஒலிபரப்பு முகவரியையும் தேடவேண்டாம் இருக்கும்
ஒரே இடத்தில் இருந்து அத்தனை ரேடியோ நிலையங்களின்
இணையமுகவரியையும் கொண்டு ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://onellama.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் அதிகமாக மக்கள் கேட்கும் ஆன்லைன்
ரேடியோ முகவரியை முதல் பக்கத்திலே கொடுக்கின்றனர். இதைத்தவிர
Location என்பதை சொடுக்கி எந்த நாட்டின் ரேடியோ நிகழ்சியை
கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். Artist மற்றும்
Popularity மூலம் விரும்பிய நிகழ்சிகளையும் கேட்கலாம். இணைய
வானொலிப் பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

winmani.wordpress.com

இந்தியத் தயாரிப்பான "ஆகாஷ் -2 டேப்லெட்' கணினி, ஐக்கிய நாடுகள் சபையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தயாரிப்பாளரான டேடாவிண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுநீத் சிங் துலி, ஆகாஷ் டேப்லெட் கணினியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூனிடம் அளித்தார். இக்கணினியின் சிறப்புக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை இப்போது இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி ஆகாஷ் டேப்லெட்டை மற்ற உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் கணினியைப் பெற்றுக் கொண்ட பான் கி-மூன் கூறியதாவது:÷இக்கணினி கையடக்கமாக, கொண்டு செல்வதற்கு எளிதாக உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதைப் போன்று தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதன்மையாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வலிமை மிகுந்த நாடாக இந்தியா உள்ளது.

அதனால்தான், ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் "சைபராபாத்' என அழைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஆகாஷ் என்றால் ஹிந்தி மொழியில் வானம் என்று அர்த்தம். வானத்தை எட்டிப்பிடித்து தங்களது கனவுகளை அடைய துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து அனைத்து நாடுகளும் செயல்படவேண்டும்.

தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் பொருளாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க முடியும்.

அதே சமயம் நவீன தொழில்நுட்ப வசதியை பெற முடியாதவர்களுக்கு, அதை கிடைக்கச் செய்வதற்கு நாம் உதவ வேண்டும்'' என்றார் பான் கி-மூன்.

பின்னர் இது தொடர்பாக "ஆகாஷ் டேப்லெட்' கணினிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டேடா விண்ட் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி சுனீத் சிங் துலி, பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறியதாவது:÷""ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் இக்கணினியில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தக் கணினி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல என்ற சர்ச்சை கடந்த சில நாள்களாகக் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இது ஒரு இந்திய தயாரிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், அதன் பாகங்கள் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. கணினிக்கான "டச் ஸ்கிரீன்' கனடாவிலும், "மதர் போர்டு' சீனாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக கணினியை ஒருங்கிணைத்து, மென்பொருள் உள்ளீடு செய்யும் பணி இந்தியாவில் நடைபெற்றது. இதற்கென இந்தியாவில் 6 இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம்'' என்றார்.

"ஆகாஷ்' கணினியை ஐ.நா.வில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ""இக்கணினியை தயாரிக்க சர்வதேச ஒப்பந்தத்தைக் கோரியபோது, முழுக்க முழுக்க இந்தியாவில்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று எந்தவிதமான நிபந்தனையையும் மத்திய அரசு விதிக்கவில்லை. இந்நிலையில், அதன் சில பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது'' என்றார்.                                                                                                           

நன்றி :- தினமணி, 30-11-2012                                                                                                   





ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் "சைபராபாத்' ஆகியுள்ளது.- பான்கி-மூன்- ஐ.நா. பொதுச் செயலர்

இந்தியத் தயாரிப்பான "ஆகாஷ் -2 டேப்லெட்' கணினி, ஐக்கிய நாடுகள் சபையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தயாரிப்பாளரான டேடாவிண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுநீத் சிங் துலி, ஆகாஷ் டேப்லெட் கணினியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூனிடம் அளித்தார். இக்கணினியின் சிறப்புக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை இப்போது இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி ஆகாஷ் டேப்லெட்டை மற்ற உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் கணினியைப் பெற்றுக் கொண்ட பான் கி-மூன் கூறியதாவது:÷இக்கணினி கையடக்கமாக, கொண்டு செல்வதற்கு எளிதாக உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதைப் போன்று தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதன்மையாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வலிமை மிகுந்த நாடாக இந்தியா உள்ளது.

அதனால்தான், ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் "சைபராபாத்' என அழைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஆகாஷ் என்றால் ஹிந்தி மொழியில் வானம் என்று அர்த்தம். வானத்தை எட்டிப்பிடித்து தங்களது கனவுகளை அடைய துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து அனைத்து நாடுகளும் செயல்படவேண்டும்.

தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் பொருளாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க முடியும்.

அதே சமயம் நவீன தொழில்நுட்ப வசதியை பெற முடியாதவர்களுக்கு, அதை கிடைக்கச் செய்வதற்கு நாம் உதவ வேண்டும்'' என்றார் பான் கி-மூன்.

பின்னர் இது தொடர்பாக "ஆகாஷ் டேப்லெட்' கணினிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டேடா விண்ட் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி சுனீத் சிங் துலி, பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறியதாவது:÷""ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் இக்கணினியில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தக் கணினி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல என்ற சர்ச்சை கடந்த சில நாள்களாகக் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இது ஒரு இந்திய தயாரிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், அதன் பாகங்கள் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. கணினிக்கான "டச் ஸ்கிரீன்' கனடாவிலும், "மதர் போர்டு' சீனாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக கணினியை ஒருங்கிணைத்து, மென்பொருள் உள்ளீடு செய்யும் பணி இந்தியாவில் நடைபெற்றது. இதற்கென இந்தியாவில் 6 இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம்'' என்றார்.

"ஆகாஷ்' கணினியை ஐ.நா.வில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ""இக்கணினியை தயாரிக்க சர்வதேச ஒப்பந்தத்தைக் கோரியபோது, முழுக்க முழுக்க இந்தியாவில்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று எந்தவிதமான நிபந்தனையையும் மத்திய அரசு விதிக்கவில்லை. இந்நிலையில், அதன் சில பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது'' என்றார்.                                                                                                           

நன்றி :- தினமணி, 30-11-2012                                                                                                   







நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், சிறப்புத் தபால் தலையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வெளியிட்டார்.

நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதில் அரசு மேற்கொண்டு வரும் சாதனைகளை சித்திரிக்கும் வகையில் அந்த தபால் தலை ரூ.5 மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார வாசகம் இடம்பெற்றுள்ளது. நுகர்வோர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இவ்வகைச் சிறப்பு தபால் தலைகள் மொத்தம் 4 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன.

தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியது:

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் மட்டும் போதாது. இந்தச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதன்படி, "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற பெயரில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ரயில் டிக்கெட், பயன்பாட்டு ரசீது மற்றும் அஞ்சல் அட்டை ஆகியவற்றில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான பிரசாரம் செய்யப்படுகிறது.

மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏஜென்டுகளின் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தாமஸ்.

 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நுகர்வோரின் குறைகளுக்கு விரைவாகவும், செலவின்றியும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம்.

நுகர்வோர் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய இழப்பீடு பெறவும் இது வகை செய்கிறது.                                                                                                                              

நன்றி :- தினமணி, 30-11-2012

"ஜகோ கிரஹக் ஜகோ'- நுகர்வோர் நலனுக்கான சிறப்புத் தபால் தலை !



நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், சிறப்புத் தபால் தலையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வெளியிட்டார்.

நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதில் அரசு மேற்கொண்டு வரும் சாதனைகளை சித்திரிக்கும் வகையில் அந்த தபால் தலை ரூ.5 மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார வாசகம் இடம்பெற்றுள்ளது. நுகர்வோர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இவ்வகைச் சிறப்பு தபால் தலைகள் மொத்தம் 4 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன.

தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியது:

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் மட்டும் போதாது. இந்தச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதன்படி, "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற பெயரில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ரயில் டிக்கெட், பயன்பாட்டு ரசீது மற்றும் அஞ்சல் அட்டை ஆகியவற்றில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான பிரசாரம் செய்யப்படுகிறது.

மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏஜென்டுகளின் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தாமஸ்.

 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நுகர்வோரின் குறைகளுக்கு விரைவாகவும், செலவின்றியும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம்.

நுகர்வோர் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய இழப்பீடு பெறவும் இது வகை செய்கிறது.                                                                                                                              

நன்றி :- தினமணி, 30-11-2012

Thursday, November 29, 2012

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலி 3.3அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இன்று அதிகாலை 3.50 மணியவில் சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளிலும் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென வெடிவெடிப்பது போல, பேரிரைச்சலுடன் கேட்ட இந்த நடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

வீடுகளை விட்டு வெளியே வந்த அனைவரும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில இடங்களில் சாலைகளிலும் கூட விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கால்நடைகளும் கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடின.

மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதி கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

வழக்கமான நிலநடுக்கம் போல இல்லாமல் சூறாவளிக் காற்று வீசும்போது ஏற்படக் கூடிய இரைச்சலுடன் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதால் பெரும் பீதியில் ஆழ்ந்து போயுள்ளனர் அப்பகுதி மக்கள்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.                                 

நன்றி :-ஒன் இந்தியா, 29-11-2012

சேலம், தர்மபுரி மாவட்டங்களை உலுக்கிய 'சூறாவளி' இரைச்சலுடனான நிலநடுக்கம் !

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலி 3.3அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இன்று அதிகாலை 3.50 மணியவில் சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளிலும் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென வெடிவெடிப்பது போல, பேரிரைச்சலுடன் கேட்ட இந்த நடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

வீடுகளை விட்டு வெளியே வந்த அனைவரும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில இடங்களில் சாலைகளிலும் கூட விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கால்நடைகளும் கயிறுகளை அறுத்துக் கொண்டு ஓடின.

மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதி கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

வழக்கமான நிலநடுக்கம் போல இல்லாமல் சூறாவளிக் காற்று வீசும்போது ஏற்படக் கூடிய இரைச்சலுடன் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதால் பெரும் பீதியில் ஆழ்ந்து போயுள்ளனர் அப்பகுதி மக்கள்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.                                 

நன்றி :-ஒன் இந்தியா, 29-11-2012

 கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்குகையில் கடைக்காரர் கார்டை எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வேறு எங்காவது பராக் பார்க்கக் கூடாது. மாறாகக் கார்டை கடைக்காரர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். டெல்லியில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் எவ்வாறு போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தற்போது சிக்கியுள்ள 4 பேரும் பெரிய பெரிய கடைகளில் உள்ள காசாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு அவர்களுக்கு ஸ்கிம்மர் என்ற கருவியைக் கொடுத்துள்ளனர். காசாளர்களும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அதை கிரெடிட் கார்டுக் கருவியில் ஒரு முறை தேய்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக ஸ்கிம்மரிலும் ஒரு தேய் தேய்த்துள்ளனர். அந்த ஸ்கிம்மர் கருவி அந்த கிரெடிட் கார்டுகளின் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் அதில் உள்ள விவரங்களை வைத்துப் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளனர்.

அதனால் எப்பொழுது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினாலும் அதை காசாளர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.

நன்றி :- ஒன் இந்தியா, 29-11-2012

போலி கிரெடிட் கார்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ”ஸ்கிம்மர்” கருவி !


 கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்குகையில் கடைக்காரர் கார்டை எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வேறு எங்காவது பராக் பார்க்கக் கூடாது. மாறாகக் கார்டை கடைக்காரர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். டெல்லியில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் எவ்வாறு போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தற்போது சிக்கியுள்ள 4 பேரும் பெரிய பெரிய கடைகளில் உள்ள காசாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு அவர்களுக்கு ஸ்கிம்மர் என்ற கருவியைக் கொடுத்துள்ளனர். காசாளர்களும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அதை கிரெடிட் கார்டுக் கருவியில் ஒரு முறை தேய்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக ஸ்கிம்மரிலும் ஒரு தேய் தேய்த்துள்ளனர். அந்த ஸ்கிம்மர் கருவி அந்த கிரெடிட் கார்டுகளின் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் அதில் உள்ள விவரங்களை வைத்துப் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளனர்.

அதனால் எப்பொழுது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினாலும் அதை காசாளர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.

நன்றி :- ஒன் இந்தியா, 29-11-2012

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. சமீபத்தில் வந்த நீலம் புயல் காரணமாக ஓரளவு மழை பெய்தது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை.

கடந்த வாரம் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் போதிய மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்தமான் அருகே புதிய  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று கூறியதாவது:-

வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிசம்பர் 3-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.                                                                                                                             

நன்றி :-மாலைமலர், 29-11-2012                                                                                                     



 

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: டிச.3-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு !


இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. சமீபத்தில் வந்த நீலம் புயல் காரணமாக ஓரளவு மழை பெய்தது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை.

கடந்த வாரம் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் போதிய மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்தமான் அருகே புதிய  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று கூறியதாவது:-

வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிசம்பர் 3-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.                                                                                                                             

நன்றி :-மாலைமலர், 29-11-2012                                                                                                     



 
கெய்ரோ: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்திப் படம் தயாரித்த நகோலா, புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கப் பாதிரியார் மற்றும் அதனை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த 6 எகிப்தியர்கள் ஆகியோருக்கும் எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 இதையடுத்து சர்ச்சைக்குரிய படத்தை இயக்கிய எகிப்து அமெரிக்கரான நகோலாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஓராண்டுச் சிறை தண்டனை விதித்தது. அதன்படி நகோலா தற்போது சிறையில் உள்ளார்.

இதற்கிடையே அந்தப் படத்தை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த  6 எகிப்தியர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் நகோலா, புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கப் பாதிரியார் மற்றும் 6 எகிப்தியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே நடந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய படத்தை

இயக்கிய நகோலா,

அமெரிக்கப் பாதிரியார் மற்றும்

படத்தை இன்டர்நெட்டில் போட்ட 6 எகிப்தியர்களுக்கும்

மரண தண்டனை விதித்து

நீதிபதி சய்ப் அல்-நஸ்ர் 

தீர்ப்பளித்தார்.                                                                                                                                



நன்றி :- ஒன் இந்தியா, 29-11-2012

நபிகளை இழிவுபடுத்திப் படம் எடு்த்தவர், யு.எஸ். பாதிரியார் உள்பட 8 பேருக்கு எகிப்து கோர்ட் மரண தண்டனை !

கெய்ரோ: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்திப் படம் தயாரித்த நகோலா, புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கப் பாதிரியார் மற்றும் அதனை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த 6 எகிப்தியர்கள் ஆகியோருக்கும் எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 இதையடுத்து சர்ச்சைக்குரிய படத்தை இயக்கிய எகிப்து அமெரிக்கரான நகோலாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஓராண்டுச் சிறை தண்டனை விதித்தது. அதன்படி நகோலா தற்போது சிறையில் உள்ளார்.

இதற்கிடையே அந்தப் படத்தை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த  6 எகிப்தியர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் நகோலா, புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்கப் பாதிரியார் மற்றும் 6 எகிப்தியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே நடந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய படத்தை

இயக்கிய நகோலா,

அமெரிக்கப் பாதிரியார் மற்றும்

படத்தை இன்டர்நெட்டில் போட்ட 6 எகிப்தியர்களுக்கும்

மரண தண்டனை விதித்து

நீதிபதி சய்ப் அல்-நஸ்ர் 

தீர்ப்பளித்தார்.                                                                                                                                



நன்றி :- ஒன் இந்தியா, 29-11-2012


நமது பழந்தமிழ் கணித  நூலான கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று  நமக்கு விடை கூறும் .
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணிவருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை 
பலாப்பழத்தின்  உள்ள சிறு முட்களை எண்ணி அதை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும்  ஈவே (quotient) பலாப்பழத்தினுள் உள்ள சுளையாகும் .

பலாப்பழத்தில் உள்ள  சிறு முட்களின் எண்ணிக்கை 1000 எனக்கொண்டால் 1000  6 ஆல் பெருக்க வேண்டும் கிடைக்கும் விடை 6000 ஆகும் .இந்த விடையை  5  ஆல் வகுக்க கிடைப்பது  1200 ஆகும் எனவே  பலாப்பழத்தினுள் உள்ள சுளைகள்  1200  ஆகும்.
 
டிஸ்கி -1 

ஒரு நிமிஷம் கணவன்மார்கள் கவனிங்க பாஸ் . இதை உங்க மனைவி கூட பலாப்பழம் வாங்கும் போது யூஸ் பண்ணுங்க 

உங்க  ரேஞ்சே வேறதான்  . இதை ஏற்கனவே  முயற்சித்த  நண்பர்  “ இது மாதிரி  வேற ஐட்டம்  இருக்காப்பா  மனைவியை இம்ப்ரெஸ் பண்ண 

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டார்  எனவே  நீங்க தாராளமா முயற்சிக்கலாம். 


மேலே உள்ள பாடலுக்குச் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், தோழியர் சுபா அல்லது ராஜம் சரியான பொருளைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடனேதான் இந்தப் பதிவு.

பலாப்பழத்தை அறுக்காமல் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று கூறமுடியுமா ?



நமது பழந்தமிழ் கணித  நூலான கணக்கதிகாரத்தில் பாடல் ஒன்று  நமக்கு விடை கூறும் .
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணிவருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை 
பலாப்பழத்தின்  உள்ள சிறு முட்களை எண்ணி அதை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும்  ஈவே (quotient) பலாப்பழத்தினுள் உள்ள சுளையாகும் .

பலாப்பழத்தில் உள்ள  சிறு முட்களின் எண்ணிக்கை 1000 எனக்கொண்டால் 1000  6 ஆல் பெருக்க வேண்டும் கிடைக்கும் விடை 6000 ஆகும் .இந்த விடையை  5  ஆல் வகுக்க கிடைப்பது  1200 ஆகும் எனவே  பலாப்பழத்தினுள் உள்ள சுளைகள்  1200  ஆகும்.
 
டிஸ்கி -1 

ஒரு நிமிஷம் கணவன்மார்கள் கவனிங்க பாஸ் . இதை உங்க மனைவி கூட பலாப்பழம் வாங்கும் போது யூஸ் பண்ணுங்க 

உங்க  ரேஞ்சே வேறதான்  . இதை ஏற்கனவே  முயற்சித்த  நண்பர்  “ இது மாதிரி  வேற ஐட்டம்  இருக்காப்பா  மனைவியை இம்ப்ரெஸ் பண்ண 

அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டார்  எனவே  நீங்க தாராளமா முயற்சிக்கலாம். 


மேலே உள்ள பாடலுக்குச் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், தோழியர் சுபா அல்லது ராஜம் சரியான பொருளைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடனேதான் இந்தப் பதிவு.
அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது.

 தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன... ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள்.





சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில்
 (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film)

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:

குழந்தைகள் கடத்தல், கட்டாயக் குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான் "The Dark side of Chocolate".
ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையைப் பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.

இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"

 பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."

 இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"

 பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."                              

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை.

2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.    

 குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :

மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகச் செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) : "குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
"உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினைத் தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.

குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
கடத்தலில் ஈடுபடுபவர் : "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். 
 
சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
 
இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டுப் பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்துப் பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும் 

இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு"ச் செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரி குழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.
ஆதாரங்கள்:

ஆதாரம் ஒன்று:

கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஆதாரம் இரண்டு:

வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரைச் சந்தித்து (மறைமுகக் கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகக் கேள்வி கேட்கப்படுகிறது.
கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:

கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:

சர்வதேசக் காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேசக் காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) :
 "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:


எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகக் கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
"பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
 
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. 
 
ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. 
 
அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாகக் கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்ககி குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன?  

 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.
                                                              


நன்றி :-http://www.maattru.com/2012/07/ivory-coast-film.html

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film) !

அழுது கொண்டிருக்கிற குழந்தையின் கையில் ஒரு சாக்லேட்டினைக் கொடுத்தாலே போதும், தன்னுடைய அழுகையினை உடனே நிறுத்திவிட்டு முகமலர்ச்சியோடு சிரிக்கத்துவங்கிவிடும். அந்த அளவிற்கு சாக்லேட் என்பது அனைவருக்கும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிடித்தமான ஒரு உணவுப்பொருளாகிவிட்டது.

 தெருமுனைப்பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை, சாக்லேட் விற்பனை நடைபெறாத கடைகளே இல்லை எனலாம். ஓராண்டிற்கு உலகம் முழுவதிலும் முப்பது லட்சம் டன் அளவிற்கான சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன... ஐரோப்பாவில் மட்டுமே அதில் பாதியளவிற்கு உண்டு தீர்க்கிறார்கள்.





சாக்லேட்டின் இந்த இமாலய வெற்றிக்குப்பின் பெரும் சோகம் மறைந்திருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் தினந்தோறும் விதவிதமான சாக்லேட்டுகளை உண்கிற அதேவேளையில், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் நிலையோ வேறுமாதிரி இருக்கிறது. சாக்லேட் தயாரிப்பிற்குத் தேவையான "கோகோ" உற்பத்தி செய்யும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு வேலைக்கு அமர்த்தபடுவதனை ஒட்டுமொத்த சாக்லேட் தொழில்துறையே செய்துவருகிறது என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் உழைக்கிறார்கள். நாம் மகிழ்ந்துண்ணும் இனிப்பான சாக்லேட்டுகளின் தயாரிப்பின் பின்னே, கசப்பான ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவை உலகிலேயே அதிகளவில்
 (42 %) உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவின் "ஐவரி கோஸ்ட்" என்கிற நாடுதான். ஆனால் உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஐவரி கோஸ்டும் ஒன்று என்பதுதான் முரண்.

சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம் (Ivory Coast Film)

சாக்லேட் நிறுவனங்களின் வருடாந்திர கண்காட்சி:

குழந்தைகள் கடத்தல், கட்டாயக் குழந்தைத்தொழிலாளர் முறை போன்றவை உண்மையானதுதானா எனக்கண்டறிய டென்மார்க்கைச் சேர்ந்த "மிக்கி மிஸ்திராதி" என்கிற பத்திரிக்கையாளர் முடிவெடுக்கிறார். அதனை ஒரு ஆவணப்படமாகவும் தயாரித்தார். உண்மை எப்போதும் அபாயகரமானது என்பதால், தன்னுடைய அடையாளங்களை மறைத்தும் சட்டைக்குள் ஓட்டை போட்டு கேமராவினை மறைத்தும் அவர் உருவாக்கிய படத்தின் பெயர்தான் "The Dark side of Chocolate".
ஒவ்வொரு ஆண்டும் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜெர்மனியிலிருக்கும் கொலோன் என்கிற நகரில் சந்தித்துக்கொள்வார்கள். அச்சந்திப்பில், சாக்லேட் தொழிலை வளர்த்தெடுப்பது மற்றும் விற்பனையைப் பெருக்குவது குறித்து விவாதிப்பார்கள். மிக்கி தன்னுடைய பயணத்தினை இச்சாக்லேட் கண்காட்சியிலிருந்து துவங்குகிறார்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான சுவிசர்லாந்தைச்சேர்ந்த "பேரி கேலபாட்" என்கிற நிறுவனம்தான் பெரும்பாலான மற்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு கோகோ பௌடரை விற்று விநியோகம் செய்கிறது.

பேரி கேலபாட்டின் துணைத்தலைவர் பேட்ரிக் ஹாட்பென்னேவை கண்காட்சியில் சந்திக்கிறார் மிக்கி.

இயக்குனர் மிக்கி : "ஐவரி கோஸ்டில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்?"

 பேட்ரிக் ஹாட்பென்னே (பேரி கேலபாட்டின் துணைத்தலைவர்) : "எங்களுடைய நிறுவனத்தில், உலகம் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக 7400 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் தோராயமாக 1000 பேருக்குமேல் ஐவரி கோஸ்டில் மட்டும் பணிபுரிகிறார்கள்."

 இயக்குனர் மிக்கி : "குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் கோகோ தோட்டங்களில் பணிபுரிவதாக வதந்திகள் இருக்கின்றனவே. அது குறித்து?"

 பேட்ரிக் ஹாட்பென்னே : "உண்மையாகவே இது குறித்து எங்களுக்குத் தெரியாது. எங்காவது ஒன்றிரண்டு அபூர்வமாக நடக்கலாம். அப்படியொன்று நடந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்..."                              

அக்கண்காட்சியில் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் குழந்தைத்தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து வாய்திறக்கவில்லை.

2001 லேயே குழந்தைத்தொழிலாளர்களை சாக்லேட் தயாரிப்புத் தொழிலின் எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது என்று சாக்லேட் தொழில்துறை நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றின. இவற்றையெல்லாம் உலகுக்கு அறிவித்தவர்களே, இதனைச் செய்வார்களா? என்ற கேள்வியுடன் இயக்குனர் மிக்கி ஆப்பிரிக்காவிற்கே சென்று ஆய்வினை நடத்த முடிவெடுக்கிறார்.    

 குழந்தைக்கடத்தலில் உலகின் முதன்மை நாடு - மாலி :

மாலி என்கிற மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஏராளமான குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகச் செய்தி நிலவுகிறது. எனவே தன்னுடைய பயணத்தை உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியிலிருந்து துவங்குகிறார் இயக்குனர்.

ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு மேற்கே இருக்கிற நாடுதான் மாலி. மாலி மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திக்கொண்டு வரப்படும் குழந்தைகளை "சிகாசோ" என்கிற பகுதியிலிருக்கும் பேருந்து நிலையத்திற்குதான் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து புறப்படுகிற பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு "செகுவா" என்கிற இடம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாலி-ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கிடையிலான எல்லையினை குறுக்குப்பாதைகளில் கடந்து குழந்தைகளை ஐவரி கோஸ்டிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்கிற உண்மையினை மாலி நாட்டிலிருக்கும் ஒரு சமூகநல ஊழியர் மூலம் அறிந்துகொள்கிறார் இயக்குனர் மிக்கி.
இட்ரிகாசா கண்டே (சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர்) : "குழந்தைகளைக் கடத்துவதென்பது எப்போதுமே இருந்து வருகிறது. எல்லாப் பேருந்துகளிலும் குழந்தைகள் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஐவரி கோஸ்டிற்கு செல்லும் குழந்தைகளின் வயது பொதுவாக 12 இலிருந்து 14 வரை இருக்கும். இதிலே பெண்குழந்தைகளும் உண்டு."
அவரால் இயன்ற அளவிற்கு, பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்படுகிற குழந்தைகளை மீட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தான் மீட்கிற குழந்தைகளின் பெயர், முகவரி போன்றவற்றை ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதியும் வருகிறார். 2006 இல் மட்டும் அவர் மீட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132 (35 பெண் குழந்தைகள் உட்பட). 2007 இல் அவ்வெண்ணிக்கை 140 (41 பெண் குழந்தைகள்). புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்கள்தான் அக்குழந்தைகள்.
ஒரு பேருந்து முதலாளி : "கிராமப்புறக் குழந்தைகள்தான் அதிகமாக கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 குழந்தைகளை பேருந்தில் கடத்துவார்கள். பேருந்தில் மாலி நாட்டின் எல்லை வரை குழந்தைகளைக் கொண்டுசெல்வார்கள். பின்னர் அங்கிருந்து குறுக்குப்பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் நாட்டு எல்லையினைக்கடந்து ஐவரி கோஸ்ட் நாட்டிலிருக்கும் கொரோகோ என்கிற இடத்திற்குச்சென்று அங்கிருக்கும் கோகோ தோட்ட முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள்."

பேருந்து முதலாளியிடம் பேசிவிட்டு வெளியே வருகிறபோது, அருகினில் நிற்கும் பேருந்தொன்றினில் ஒரு சிறுமி அங்குமிங்கும் முழித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். இயக்குனர் அவளருகினில் சென்றதும், அச்சிறுமியைக் கடத்திவந்த கடத்தல்காரப்பெண் தப்பித்து ஓடிவிடுகிறாள். அச்சிறுமியை விசாரித்துப்பார்த்தால், அவள் கொண்டுவரப்பட்டிருக்கிற பேருந்து நிலையத்திலிருந்து 450 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செகு என்கிற கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றும் தெரிகிறது.

அச்சிறுமியிடம், சிகாசொவின் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளரான இட்ரிகாசா கண்டே,
"உன்னை நான் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறேன். மீண்டும் இதுபோல் வந்துவிடாதே... நீ அங்கே சென்று காசெல்லாம் எதுவும் சம்பாதிக்க முடியாது. அங்கே போனால் வீணாகத்தான் போவாய்"
என அச்சிறுமியை எச்சரித்துவிட்டு அவளது வீட்டிற்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். வாழ்க்கை முழுவதும் இதே போன்ற நிலைமையினைத் தினந்தோறும் எதிகொள்ள வேண்டியிருக்கிறதே என்று புலம்பிக்கொண்டே அழுகிறார் இட்ரிகாசா கண்டே.

குழந்தைக்கடத்தல் நடைபெறுகிற பாதையில் செகுவாவை நோக்கி இயக்குனர் தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். வழியில் ஒரு கிராமத்தில் நின்று, அங்கிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
பக்கரி (கிராமத்தலைவர்) : "500 வீடுகள் இருக்கிற எங்கள் கிராமத்திலிருந்து, இதுவரை 12 -15 வயதுள்ள 130 குழந்தைகள் காணவில்லை. கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுடைய கிராம சந்தைக்கு வருவார்கள். அங்கே அவர்கள் பார்க்கிற குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் (தெரிவிக்காமல்) கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள்."

மேலும் பயணித்து, செகுவாவை வந்தடைந்து அங்கிருக்கும் உணவகமொன்றின் உரிமையாளர் மூலமாக குழந்தைகளைக் கடத்த உதவுகிற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது.
கடத்தலில் ஈடுபடுபவர் : "குழந்தைகளை எல்லைதாண்டி கடத்தும் வேலையினை ஒருவரே செய்வதில்லை. ஒருவர் மாலி நாட்டின் எல்லைவரை குழந்தையைக் கொண்டு செல்வார். இரண்டாமவர், யாருக்கும் தெரியாமல், நாட்டு எல்லையினைத்தாண்டிக் கொண்டுசெல்வார். மூன்றாமவர் ஐவரி கோஸ்ட் நாட்டினில் குழந்தையினைப் பெற்றுக்கொண்டு கோகோ தோட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பார். ஆக ஒரு கடத்தலை தனிப்பட்ட ஒருவர் மட்டும் செய்வதில்லை. அதே போன்று எல்லையோரம் வாழ்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் குழந்தைகளின் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதனை யாரேனும் மறுத்தால், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகளை எல்லை தாண்டி கொண்டு விடுவதற்கு, கோகோ தோட்ட முதலாளிகள் எங்களுக்கு பணம் தருகிறார்கள். நானே பல பேரை கொண்டு சென்றிருக்கிறேன்."
செகுவாவிலிருந்து ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைய, புறவழியொன்றின் வழியாகக் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறிந்துகொண்ட இயக்குனர் மிக்கியும் அதே புறவழி மண்சாலைவழியே சென்று பார்க்கிறார். 
 
சிகாசோவிலிருந்து வருகிற பேருந்துகளிலிருந்து குழந்தைகள் இறக்கப்படுவதும், உடனே அங்கே தயார் நிலையில் இருக்கும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறவழிச்சாலை வழியாக நேராக ஐவரி கோஸ்ட் நாட்டினை அடைவதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. 
 
இயக்குனரும் அதே வழியில் சற்று அதிக இடைவெளிவிட்டுப் பின்தொடர்கிறார். போகிற வழியில் சாலையோரத்தில் ஒரு பத்து வயதிற்குட்பட்ட சிறுவன் தனியாக அழுதுகொண்டிருக்கிறான். கடத்தல்காரர்கள் யாரையாவது பார்த்துப் பயந்து, அச்சிறுவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். அச்சிறுவன் அவ்விடத்திற்கு எப்படி வந்தான் என்று சொல்லக்கூட முடியாதநிலையிலிருந்தான்.

குழந்தைத்தொழிலாளர்களே இல்லையாம் - முதலாளிகளும் ஆட்சியாளர்களும் 

இயக்குனரும் சில ஆப்பிரிக்க சமூக ஆர்வலர்களும் இணைந்து ஐவரி கோஸ்டின் பொருளாதாரத்தலைநகரான "அபிட்ஜானுக்கு"ச் செல்கிறார்கள். நெஸ்லே, கார்கில், ஏ.டி.எம்., பேரி கேலபாட், சாப் கோகோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அபிட்ஜானில் இருக்கின்றன. உலகின் 42 % கோகோ, ஐவரி கோஸ்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்நிறுவனங்கள்தான் ஐவரி கோஸ்டிலிருந்து ஒட்டுமொத்த கோகோ ஏற்றுமதியையும் செய்கின்றன.

கோகோ ஏற்றுமதி நிறுவனமான சாப் கோகோவின் (SAF Cocoa )
 முதலாளி அலி லகிசை சந்தித்து, குழந்தைகள் கடத்தல் குறித்தும், குழந்தைத்தொழிலாளர் குறித்தும் கேட்கிறார் இயக்குனர் மிக்கி.
அலி லகிஸ் : "நான் ஒரு கோகோ தொழில் குடும்பத்தில்தான் பிறந்தேன். என்னுடைய வாழ்க்கையில் இதுவரையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோகோ தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்ததே இல்லை. கோகோ தோட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் முறையே இல்லை. ஐவரி கோஸ்டில் ஒரு குழந்தைத்தொழிலாளர்கூட கோகோ தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்பதனை ஒட்டு மொத்த உலகத்திற்கே சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பல குழுக்கள் வந்து முறையாக விசாரித்துவிட்டு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. எந்தவொரு அறிக்கையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குறிப்பிடப்படவே இல்லை. நாட்டின் எல்லைகளில் கூட இது நடக்கவில்லை."
இயக்குனர் மிக்கி : "மாலியிலிருந்தும் புர்க்கினா பாசோவிலிருந்தும் குழந்தைகள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்டின் கோகோ தோட்டங்களில் வேலை செய்யவைக்கப்படவே இல்லை என்கிறீர்களா?"
அலி லகிஸ் : "இல்லை இல்லை இல்லவே இல்லை... எங்களது நிறுவனம்தான் ஐவரி கோஸ்டிலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். சும்மா எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு போகாதீர்கள். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்பதை நீங்களே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்கிறார் உலகின் மிகப்பெரிய கோகோ ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் அலி லகிஸ். அவருடைய நிறுவனம்தான் அதிக அளவில் நெஸ்லே நிறுவனத்திற்கு கோகோ விற்பனை செய்கிறது.
இயக்குனர் மிக்கியின் ஆவணப்பட முயற்சி குறித்து கேள்விப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் தொழிலாளர் துறையின் தலைமைச்செயலர்  "டோஹே ஆடம் மாலிக்", மிக்கியை அழைத்து பேச விரும்புகிறார்.
இயக்குனர் மிக்கி : "மாலி நாட்டின் செகுவா என்ற இடத்திலிருந்து குழந்தைகளை கடத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் புறவழிச்சாலை வழியாக ஐவரி கோஸ்டிற்கு வருகிறார்கள். இதனை நானே பார்த்தேன்"
டோஹே ஆடம் மாலிக் : "வருடா வருடம் கோகோ விளைச்சலானது அக்டோபரில் துவங்கி மார்ச்சில் முடியும். நீங்கள் ஜூலையில் மக்கள் வருகையினைப் பார்த்தீர்களானால், அவர்கள் கோகோவிற்காக வரவில்லை. அந்த நேரத்தில் கோகோ எங்குமே இருக்காது. அதனால் கோகோ தோட்டங்களில் வேலையும் இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்கள் எல்லாம் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். ஒரு பேருந்தில் 20 குழந்தைகள் இருந்தால் உடனே குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஐவரி கோஸ்டின் அழகைக் காண சுற்றுலா வருகிறார்கள்"
இயக்குனர் மிக்கி : "ஆனால் நான் பார்த்தது ஏப்ரல் மாதத்தில்"
டோஹே ஆடம் மாலிக் : "அதற்கு எங்களிடம் சட்டமெல்லாம் இருக்கிறது."
சொல்லிவைத்தாற்போல் முதலாளிகளும் ஆட்சியாளர்களும் ஒரே மாதிரி குழந்தைக்கடத்தலும் குழந்தைத்தொழிலாளர் முறையும் இல்லவே இல்லை என்று அடித்துச்சொல்கின்றனர்.
ஆதாரங்கள்:

ஆதாரம் ஒன்று:

கோகோ ஏற்றுமதி நிறுவன முதலாளி அலி லகிஸ் மற்றும் ஐவரி கோஸ்டின் தொழிலாளர் துறை முதன்மைச்செயலர் ஆகியோர் சொல்வது உண்மைதானா என்பதனை அறிய, ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியினை நாடுகிறார் இயக்குனர். மேற்குலக நாட்டவரை பார்த்தால் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால், ஐவரி கோஸ்டைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களிடம் மறைமுக கேமராக்களை கொடுத்து கோகோ தோட்டங்களை வீடியோ எடுக்க சொல்கிறார் இயக்குனர். அவர்கள் எடுத்து வந்த வீடியோவில் பதிவாகியிருப்பதைப் பார்த்தால், கோகோ தோட்டங்களில் முழுவதுமாக குழந்தைகள்தான் எல்லா வேலைகளையுமே செய்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஆதாரம் இரண்டு:

வீடியோவை பார்த்ததும், இயக்குனரும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மீண்டுமொருமுறை கோகோ தோட்டங்களுக்கு செல்கிறார். அங்கே கைகளில் கத்தியும் உடலினில் வேர்வையுமாக கோகோ தோட்டங்களில் வேலை செய்கிற அச்சிறுவர்கள் ஐவரி கோஸ்டை சுற்றிப்பார்க்க வந்தவர்களல்ல, தங்கள் மீதமுள்ள வாழ்க்கையையே கோகோ தோட்டங்களில் தொலைக்க வந்தவர்கள்.

ஒரு கோகோ தோட்டத்திலிருப்பவரைச் சந்தித்து (மறைமுகக் கேமராவை வைத்துக்கொண்டு), தங்களுடைய தோட்டத்திற்கும் குழந்தைத்தொழிலாளர்கள் வேண்டுமென்றும், எவ்வாறு பெறுவது என்றும், எவ்வளவு செலவாகுமென்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகக் கேள்வி கேட்கப்படுகிறது.
கோகோ தோட்ட முதலாளி : "எங்க பெரியண்ணன் இருக்கார். அவரிடம் எத்தனை குழந்தைகள் வேண்டுமென்று சொன்னால், ஏற்பாடு செய்வார். ஒரு குழந்தைக்கு 15,000 ரூபாய் ஆகும்"
15,000 ரூபாய் கொடுத்தால், ஆயுள் முழுவதும் உழைப்பதற்கு சம்பளமே இல்லாத குழந்தை என்கிற பொருள் கிடைக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆதாரம் மூன்று:

கோகோ தோட்டங்களிலிருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லையென்றாலும், மிக அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகள் கோகோ தோட்டங்களிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

அவ்வாறு தப்பித்த இரு சிறுவர்கள்,
யாயா கொனாட்டே : "கடத்தல்காரர்கள் எங்களை எப்படியோ ஏமாற்றித்தான் அழைத்துச்சென்றார்கள். அங்கே நிறைய சிறுவர்-சிறுமிகள் இருந்தனர். நாங்கள் எல்லோரும் தப்பிக்க முயற்சி செய்தோம். தோட்ட முதலாளிகள் எங்களைத் துரத்தினார்கள். இரவெல்லாம் இருளினில் ஒளிந்து மறைந்திருந்தோம். மறுநாள், எங்களை பார்த்த வெளியாள் ஒருவர்தான் உதவி செய்து எங்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்."
சங்கா த்ரோரே : "கொஞ்சம் மெதுவாக வேலை செய்தாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ, கடுமையாக அடிப்பார்கள்."


ஆதாரம் நான்கு:

சர்வதேசக் காவல்துறையினர், குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்ததாகவும் 50 குழந்தைகளை மீட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகிறது. இயக்குனர் மிக்கி சர்வதேசக் காவல்துறை உயரதிகாரியை சந்திக்கப்புறப்படுகிறார்.
ஹென்றி ப்ளேமின் (சர்வதேச காவல்துறை தலைமை அதிகாரி) :
 "சாலைகள், சந்தைகள், கோகோ தோட்டங்கள் போன்ற இடங்களில் இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, அதன்பின் மேற்கொண்ட சோதனையில் 65 குழந்தைகள் வரை எங்களால் மீட்க முடிந்தது. எங்களது நடவடிக்கைகளை சற்று முன்கூடியே அவர்கள் அறிந்தமையால், பல குழந்தைகளை வீடுகளில் ஒளித்துக்கொண்டார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகள் அனைவரும், புர்க்கினா பாசோ, மாலி, டோகோ, நைஜர், நைஜீரியா, பெனின் போன்ற வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்."
இயக்குனர் மிக்கி : "கோகோ தோட்டங்களில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டதும் அதிர்ச்சியடையும் அளவிற்கு புதிய செய்தியாக இருந்ததா உங்களுக்கு?"
ஹென்றி ப்ளேமின் : "நிச்சயமாக இல்லை"
குழந்தைகள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்முறை போன்றவை மிகச்சாதாரணமாக நடப்பது எல்லாத் தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் ஏனோ சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரியாமல் (தெரிந்தும் ஒப்புக்கொள்ளாமல்) இருப்பது ஆச்சர்யம்தான்.

முதலாளித்துவத்தின் அடிப்படையே மனிதநேயத்திற்கு எதிரானதுதான்:


எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு சாப் கோகோவின் முதலாளி அலி லகிசை சந்திக்கிறார் இயக்குனர் மிக்கி.
இயக்குனர் மிக்கி : "சென்ற முறை உங்களை சந்தித்தபோது, ஐவரி கோஸ்டில் குழந்தைத்தொழிலாளர்களே இல்லை என்றீர்கள். ஆனால் சர்வதேச காவல்துறைகூட பல குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறார்கள்."
அலி லகிஸ் : "ஐவரி கோஸ்டிற்கே இது மிக வருத்தமான செய்திதான். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் நானும் பார்த்தேன். இதெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிறது. அரசாங்கமும் இதனை எதிர்த்து போராடிவருகிறது."
என்கிற மிகப் பொறுப்பான(?!?) பதிலை உதிர்க்கிறார் அலி லகிஸ்.

ஆதாரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர் ஆணையத்திற்கு" செல்கிறார் இயக்குனர் மிக்கி. உலகம் முழுவதிலும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பினையும் தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டியுங்கும் அமைப்பிது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இதே அமைப்புடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு குறித்த ஒப்பந்தமொன்றினை கையெழுத்திட்டது.

சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் பிரான்க் ஹேகமன், மிக்கி காண்பித்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தபின்னர்,
பிரான்க் ஹேகமன் : "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்காகக் கடந்த 13 வருடங்களாக உழைத்து வருகிறேன். ஆனால் இது போன்ற வீடியோ காட்சிகளை பார்க்கிறபோதெல்லாம், அதிர்ச்சியாகவே இருக்கிறது. இது போன்ற ஆதாரங்களெல்லாம் நம்முடைய இயலாமையினைத்தான் காட்டுகிறது."
இயக்குனர் மிக்கி : "சாக்லேட் நிறுவனங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது?"
பிரான்க் ஹேகமன் : "பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. சில வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையான மாற்றம் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. ஐவரி கோஸ்டிலும் கானாவிலும் கோகோ தோட்டங்களில் இன்றையநிலவரப்படி எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கேட்டால், என்னால் சொல்லமுடியாத நிலைதான்"
சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய ஆவணப்படத்தை திரையிட்டுக்காட்டவும், அவர்களின் உண்மையான அக்கறை குறித்து சில கேள்விகளைக் கேட்கவும் அனுமதி கேட்டுப்பார்த்தார் இயக்குனர் மிக்கி. ஆனால் எந்தவொரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனமும் அவருடைய படத்தைப் பார்க்கவோ, அவரிடம் பேசவோ மறுத்தவிட்டன. ஆனால் திடீரென ஒரு நாள், சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு அறிக்கையினை மட்டும் வெளியிட்டன. அதில், 
"பெரும்பாலான கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானதல்ல. அதனால் அங்கிருக்கும் எந்தவொரு மோசமான நிலைமைக்கும் நாங்கள் பொறுப்பாகமுடியாது"
என்றொரு வரி எழுதப்பட்டிருந்தது.
 
ஆதாரங்களை காண்பித்தவுடன், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தட்டிக்கழிக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு அக்குழந்தைகள் மீது அக்கறை இருக்கிறதா என்கிற சந்தேகம்தான் நம் அனைவருக்கும் எழும்.

ஒவ்வொரு சாக்லேட் நிறுவனங்களின் வாசலிலும் பெரிய திரையொன்றினை அமைத்து, தான் தயாரித்த ஆவணப்படத்தை திரையிடத்திட்டமிடுகிறார் இயக்குனர் மிக்கி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐவரி கோஸ்டில் அலுவலகம் அமைத்து சுரண்டலைச் செய்துவரும் நெஸ்லேயின் தலைமையகம் முன்பு திரையமைத்து தன்னுடைய ஆவணப்படத் திரையிடலைத் துவங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒட்டுமொத்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து 40 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிகளை செய்திருக்கின்றன. 
 
ஆனால், நெஸ்லே என்கிற ஒரே ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டில்மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்கிறது. சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஐவரி கோஸ்டில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. 
 
அவர்களுடைய மேற்பாவையில்தான் அனைத்து கொத்தடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன. 
இலாபமொன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், ஐ.நா.வில் சட்டம் போடுவதும், குழந்தைதொழிலாளர் முறையினை ஒழிக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று வருடாவருடம் அறிக்கைகள் விடுவதும், உதவித்தொகை என்கிற பெயரில் மிகச்சிறிய தொகையினை வீசியெறிவதும், யாரை ஏமாற்றுவதற்காக?
ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்காதீர்கள், சிரியாவிடம் சிரித்துப் பேசாதீர்கள், க்யூபாவை கண்டுகொள்ளாதீர்கள் என்று உலகிற்கே ஒரே நாளில் உத்தரவு போட்டு நிறைவேற்றுகிற ஐ.நா., அமெரிக்கா மற்றும் இன்ன பிற மேற்குலக நாடுகள் எல்லாம், இத்தனை ஆண்டுகளாகக் கொடூரமாக சுரண்டப்படும் ஆப்பிரிக்ககி குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்காததற்கான காரணம் என்ன?  

 ஒருபுறம் மனிதநேயத்தை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள்போல பேசிக்கொண்டே, மறுபுறம் மக்களைக் கொன்றாவது இலாபம் பார்க்கத்துடிக்கிற அமைப்பின் பெயர்தான் முதலாளித்துவம்.
                                                              


நன்றி :-http://www.maattru.com/2012/07/ivory-coast-film.html



ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளது. ரகசியக் கணக்கில் பணம் வைத்திருந்து வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி அளவுக்கு ஜெனீவா வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கும் குறைவான தொகை வைத்துள்ளவர்கள் மீது அபராதம் விதிப்பதெனவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கியில் ரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பிரான்ஸ் அரசு அளித்துள்ளது.

இதன்படி பட்டியலில் ரகசியக் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த ரகசியப் பட்டியலில் உள்ள சிலர் ஆயிரக்கணக்கான ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை இருப்பு வைத்துள்ளனர்.

இவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கொள்கை வகுக்குமாறு நிதி அமைச்சகத்தை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே ஸ்விஸ் வங்கியில் மாற்று பெயர்களில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை நிதி அமைச்சகம் மூலமாக வருமான வரித்துறை கேட்டு பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனி நபர்கள் குறித்து விசாரணையை வருமான வரித்துறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசு மூலம் ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் 700 கணக்குகளின் விவரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஏறக்குறைய 80 கணக்குகளில், வருமான வரி கணக்கில் காட்டப்படாத ரூ. 438 கோடி தொகையை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் ரூ. 135 கோடி தொகை வரியாப் பெறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக சமூக ஆர்வலர் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் அரசிடமிருந்து சில வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் பெறப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்                                                                                                                               

நன்றி :-தினமணி, 29-11-2012

ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசிய கணக்கு: விசாரிக்க வருமான வரித்துறை முடிவு !




ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடர வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளது. ரகசியக் கணக்கில் பணம் வைத்திருந்து வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி அளவுக்கு ஜெனீவா வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கும் குறைவான தொகை வைத்துள்ளவர்கள் மீது அபராதம் விதிப்பதெனவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கியில் ரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பிரான்ஸ் அரசு அளித்துள்ளது.

இதன்படி பட்டியலில் ரகசியக் கணக்கு வைத்துள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த ரகசியப் பட்டியலில் உள்ள சிலர் ஆயிரக்கணக்கான ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை இருப்பு வைத்துள்ளனர்.

இவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து கொள்கை வகுக்குமாறு நிதி அமைச்சகத்தை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே ஸ்விஸ் வங்கியில் மாற்று பெயர்களில் ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை நிதி அமைச்சகம் மூலமாக வருமான வரித்துறை கேட்டு பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனி நபர்கள் குறித்து விசாரணையை வருமான வரித்துறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசு மூலம் ஹெச்எஸ்பிசி வங்கியின் ஜெனீவா கிளையில் ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் 700 கணக்குகளின் விவரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஏறக்குறைய 80 கணக்குகளில், வருமான வரி கணக்கில் காட்டப்படாத ரூ. 438 கோடி தொகையை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் ரூ. 135 கோடி தொகை வரியாப் பெறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக சமூக ஆர்வலர் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் அரசிடமிருந்து சில வங்கிக் கணக்குகள் குறித்த விவரம் பெறப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்                                                                                                                               

நன்றி :-தினமணி, 29-11-2012

Wednesday, November 28, 2012

*பெயர் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

தகவல் உதவி,  டைம்ஸ் ஆப் இந்தியா, 28-11-2012 

அவரது பெயர் பலராம்*. தன் மகளைக் குறிப்பிட்டதொரு பள்ளியிலேதான் சேர்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்க்காக என்ன செய்யவும் தயாராக இருக்கின்றார். அதனால், அந்தப் பள்ளி அவரிடம் நன்கொடை கேட்பதற்கு முன்னதாகவே, இவரே முன்வந்து, அந்தப் பள்ளிக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்புடைய கம்யூட்டர் லேப்பினை அமைத்துத் தருகின்றார். இதனை  அந்தப் பள்ளியும் ஏற்றுக்கொள்கிறது. இது நடந்தது சென்னை கீழ்ப்பாக்கத்தில் !

இன்னொரு தந்தை,  தான் விரும்பிய பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பதற்கு, ரூபாய் 17 லட்சத்தில் பாஸ்கட்பால் கோர்ட்- ஐ உருவாக்கிக் கொடுக்கின்றார். இது நடந்த இடம் சென்னை மயிலாப்பூர்.

இவை எல்லாம். L K G -யில் சேர்ப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகை என்பதைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சியும் வியப்பையும்தான் தரும்.

இத்தகைய வினோதங்கள்  நடப்பதெல்லாம் நமது சென்னையில்தான். kindergarden top- பள்ளிகளில் சேர்த்திட எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் தயாராய் உள்ளனர்.

And this has redfined capation fee, which has now morphed into "informed contributions" and "retutnable investments."
கூடுதலான வசதிகளைப் பெறுவதற்காகப் பெற்றோர்கள் இத்தகைய அன்பளிப்புக்களை கல்விக்கூடங்களுக்கு வழங்குவதாக, கல்வி ஆலோசகர், ஆர்.மாலதி கூறுகின்றார்.

இத்தகைய செயல்பாடுகள் நாளடைவில் நல்லுணர்வுடன் கூடிய நட்பை மாணாக்கர்களுக்கும் நிர்வாகத்திற்கும்  இடையே ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

யார் அதிகமாகப் பணம் கொடுப்பார்கள் என்பதை எடுத்துரைக்கவே சிபார்சுகள் எல்லாம் வரும் என்று ஒரு பள்ளி நிர்வாகி தெரிவிக்கின்றார்..                            

ELITE SCHOOLS CATALYSE    -REAL ESTATE BOOM 

 REAL ESTATE VALUE AND RENTALS OF A LOCALITY GO UP 

WHEN THERTE IS A SCHOOL OF REPUTE NEARBY                               

எங்கெங்கு நல்ல பள்ளிகள் வரக்கூடுமோ அவற்றைப் பொறுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் / வீட்டின் மதிப்பும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டுகள் :-

1. Vidya Mandhir, PS Senior Secondary School, St Bedes, DAV......15-20K / 20-40  ------Mylapore


2. Chinmaya Vidyalaya, SBOA, DAV...............................................10-15K /20-35   ------Anna Nagar


3. Bhavan's Rajaji Vidyasaram, Bala Vidya Mandir, Vidya Mandir, St. Michaels.15-20K / 20-45  Adayar


4.Chinmaya Vidyalaya, CSI Ewarts................................................................10-15K / 25-40 .Kilpauk


5.DAV .............................................................................15-20K / 25-40     Gopalapuram   

 K REPRESENTS FOR 1000 ( SQ )

Red colour- To Buy          கருமை நிறம் :- வாடகைக்கு

* All Figures in Rupees./ per sq.feet  ( average 2 BHK )
     


 நன்றி :-TIMES OF INDIA, 28-11-2012


7 லட்சத்தில் கம்ப்யூட்டர் லேப், 17 லட்சத்தில் பாஸ்கட்பால் கோர்ட் எல்லாம் LKG சீட்டுக்கான ”அன்பளிப்பு" “

*பெயர் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

தகவல் உதவி,  டைம்ஸ் ஆப் இந்தியா, 28-11-2012 

அவரது பெயர் பலராம்*. தன் மகளைக் குறிப்பிட்டதொரு பள்ளியிலேதான் சேர்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்க்காக என்ன செய்யவும் தயாராக இருக்கின்றார். அதனால், அந்தப் பள்ளி அவரிடம் நன்கொடை கேட்பதற்கு முன்னதாகவே, இவரே முன்வந்து, அந்தப் பள்ளிக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்புடைய கம்யூட்டர் லேப்பினை அமைத்துத் தருகின்றார். இதனை  அந்தப் பள்ளியும் ஏற்றுக்கொள்கிறது. இது நடந்தது சென்னை கீழ்ப்பாக்கத்தில் !

இன்னொரு தந்தை,  தான் விரும்பிய பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பதற்கு, ரூபாய் 17 லட்சத்தில் பாஸ்கட்பால் கோர்ட்- ஐ உருவாக்கிக் கொடுக்கின்றார். இது நடந்த இடம் சென்னை மயிலாப்பூர்.

இவை எல்லாம். L K G -யில் சேர்ப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகை என்பதைக் கேட்டால் நமக்கு அதிர்ச்சியும் வியப்பையும்தான் தரும்.

இத்தகைய வினோதங்கள்  நடப்பதெல்லாம் நமது சென்னையில்தான். kindergarden top- பள்ளிகளில் சேர்த்திட எத்தனை லட்சங்களையும் செலவு செய்யத் தயாராய் உள்ளனர்.

And this has redfined capation fee, which has now morphed into "informed contributions" and "retutnable investments."
கூடுதலான வசதிகளைப் பெறுவதற்காகப் பெற்றோர்கள் இத்தகைய அன்பளிப்புக்களை கல்விக்கூடங்களுக்கு வழங்குவதாக, கல்வி ஆலோசகர், ஆர்.மாலதி கூறுகின்றார்.

இத்தகைய செயல்பாடுகள் நாளடைவில் நல்லுணர்வுடன் கூடிய நட்பை மாணாக்கர்களுக்கும் நிர்வாகத்திற்கும்  இடையே ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

யார் அதிகமாகப் பணம் கொடுப்பார்கள் என்பதை எடுத்துரைக்கவே சிபார்சுகள் எல்லாம் வரும் என்று ஒரு பள்ளி நிர்வாகி தெரிவிக்கின்றார்..                            

ELITE SCHOOLS CATALYSE    -REAL ESTATE BOOM 

 REAL ESTATE VALUE AND RENTALS OF A LOCALITY GO UP 

WHEN THERTE IS A SCHOOL OF REPUTE NEARBY                               

எங்கெங்கு நல்ல பள்ளிகள் வரக்கூடுமோ அவற்றைப் பொறுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் / வீட்டின் மதிப்பும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டுகள் :-

1. Vidya Mandhir, PS Senior Secondary School, St Bedes, DAV......15-20K / 20-40  ------Mylapore


2. Chinmaya Vidyalaya, SBOA, DAV...............................................10-15K /20-35   ------Anna Nagar


3. Bhavan's Rajaji Vidyasaram, Bala Vidya Mandir, Vidya Mandir, St. Michaels.15-20K / 20-45  Adayar


4.Chinmaya Vidyalaya, CSI Ewarts................................................................10-15K / 25-40 .Kilpauk


5.DAV .............................................................................15-20K / 25-40     Gopalapuram   

 K REPRESENTS FOR 1000 ( SQ )

Red colour- To Buy          கருமை நிறம் :- வாடகைக்கு

* All Figures in Rupees./ per sq.feet  ( average 2 BHK )
     


 நன்றி :-TIMES OF INDIA, 28-11-2012



சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோரப் பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகக் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதைச் செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.

கணித்ததைவிட வேகமாக உயருகிறது கடல் நீர் மட்டம் !


சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோரப் பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகக் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதைச் செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.
டெங்குக் காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளைத் தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையைத் துவக்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், இரண்டு மாதங்களாகக் குறைந்தபாடில்லை.

மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர்க் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.

டெங்குக் காய்ச்சலைத் தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:

அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்குத் தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவைக் குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலைக் குறைக்க, நிலவேம்பு குடிநீர்க் கஷாயமும், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலைச் சாறும் வழங்கப்படும்.

இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், டெங்கு குணமாகும்

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளைத் தருவதன் மூலம், டெங்குவை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறைக் கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நன்றி :- யாகூ தமிழ் நியூஸ், 28-11-2012

அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையைத் துவக்கி உள்ளது.

டெங்குக் காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளைத் தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையைத் துவக்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், இரண்டு மாதங்களாகக் குறைந்தபாடில்லை.

மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர்க் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.

டெங்குக் காய்ச்சலைத் தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:

அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்குத் தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவைக் குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலைக் குறைக்க, நிலவேம்பு குடிநீர்க் கஷாயமும், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலைச் சாறும் வழங்கப்படும்.

இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், டெங்கு குணமாகும்

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளைத் தருவதன் மூலம், டெங்குவை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறைக் கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நன்றி :- யாகூ தமிழ் நியூஸ், 28-11-2012


சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.               

இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளைச் சுற்றி சிவப்பாகக் காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழிகளையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.

செவ்வாய்க் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டன. பின்னர் 1965-ம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதைக் கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது.

அவை செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுச் சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்துப் பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றைப் போட்டோ எடுத்து அனுப்பியது.

சமீபத்தில் அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் பிடித்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதி வாய்ந்த கிரகம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய்க் கிரகத்தில் மக்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அதற்குத் தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்றத் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு காலனி அமைக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஏரோ நாட்டிக்கல் சங்கத்தின் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது,

செவ்வாய்க் கிரகத்துக்கு முதல் கட்டமாக 10 பேரை மட்டும் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக அதிக அளவில் ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான கட்டணம் சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம் (5 லட்சம் அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிக அளவில் இப்பயணத்திற்கு முன்வர வேண்டும். அதற்காகக் கட்டணத்தைக் குறைக்கக் கூடத் தயாராக உள்ளோம். தொடக்கத்தில் 10 பேரை மட்டுமே அழைத்து செல்லத் திட்டமிட்டுள்ள நாங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அங்கு குடியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.                                                 .

செவ்வாய்க் கிரகத்தில் முதலில் குடியேறுவோர் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும் என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன் பதிவு செய்யலாம்                                            

நன்றி :-மாலை மலர், 28-11-2012

செவ்வாய்க் கிரகத்தில் 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை குடியமர்த்தத் திட்டம் ! இப்போதே முன்பதிவு செய்யலாம்:


சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.               

இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளைச் சுற்றி சிவப்பாகக் காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழிகளையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.

செவ்வாய்க் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டன. பின்னர் 1965-ம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதைக் கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது.

அவை செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுச் சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்துப் பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றைப் போட்டோ எடுத்து அனுப்பியது.

சமீபத்தில் அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் பிடித்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதி வாய்ந்த கிரகம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய்க் கிரகத்தில் மக்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அதற்குத் தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்றத் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு காலனி அமைக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஏரோ நாட்டிக்கல் சங்கத்தின் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது,

செவ்வாய்க் கிரகத்துக்கு முதல் கட்டமாக 10 பேரை மட்டும் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக அதிக அளவில் ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான கட்டணம் சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம் (5 லட்சம் அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிக அளவில் இப்பயணத்திற்கு முன்வர வேண்டும். அதற்காகக் கட்டணத்தைக் குறைக்கக் கூடத் தயாராக உள்ளோம். தொடக்கத்தில் 10 பேரை மட்டுமே அழைத்து செல்லத் திட்டமிட்டுள்ள நாங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அங்கு குடியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.                                                 .

செவ்வாய்க் கிரகத்தில் முதலில் குடியேறுவோர் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும் என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன் பதிவு செய்யலாம்                                            

நன்றி :-மாலை மலர், 28-11-2012
ஜப்பானியத் தொலைநோக்கி..

அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கிதான் இந்தப் புதிய கிரகத்தையும் அதன் சூரியனையும் படம் பிடித்துள்ளது.                                                                                    



கப்பா ஆட்ரோமெடா பி..

இந்த புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி (Kappa Adromedae b) என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு "super-Jupiter" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.

இந்த நட்சத்திரம் சூரியனை விட 2.5 மடங்கு பெரிது..

சூப்பர் ஜூபிடர் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரமும் மெகா சைஸ் தான். இதன் அளவு நமது சூரியனை விட இரண்டரை மடங்காகும்.

ஆனால், இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஜூபிட்டரின் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது.

நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்தக் கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது. இதுவும் விஞ்ஞானிகளைத் தலை சுற்ற வைத்துள்ளது.

.                                                        மிக மிக நீண்ட தூரம்..    


வழக்கமாக ஒரு நடத்திரத்தைத் (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

ஆனால், இங்கு முதலில் சூப்பர் ஜூபிடர் தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே கப்பா ஆட்ரோமெடா பி சூரியன் சிக்கியது.

இரண்டுக்கும் இடையே உள்ள மிக மிக நீண்ட தூரம் தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.                                                                                      

நன்றி :- ஒனெ இந்தியா, 28-11-2012






விஞ்ஞானிகளைத் தலை சுற்ற வைத்த "கப்பா ஆட்ரோமெடா பி.."

ஜப்பானியத் தொலைநோக்கி..

அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கிதான் இந்தப் புதிய கிரகத்தையும் அதன் சூரியனையும் படம் பிடித்துள்ளது.                                                                                    



கப்பா ஆட்ரோமெடா பி..

இந்த புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி (Kappa Adromedae b) என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு "super-Jupiter" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.

இந்த நட்சத்திரம் சூரியனை விட 2.5 மடங்கு பெரிது..

சூப்பர் ஜூபிடர் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரமும் மெகா சைஸ் தான். இதன் அளவு நமது சூரியனை விட இரண்டரை மடங்காகும்.

ஆனால், இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஜூபிட்டரின் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது.

நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்தக் கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது. இதுவும் விஞ்ஞானிகளைத் தலை சுற்ற வைத்துள்ளது.

.                                                        மிக மிக நீண்ட தூரம்..    


வழக்கமாக ஒரு நடத்திரத்தைத் (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

ஆனால், இங்கு முதலில் சூப்பர் ஜூபிடர் தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே கப்பா ஆட்ரோமெடா பி சூரியன் சிக்கியது.

இரண்டுக்கும் இடையே உள்ள மிக மிக நீண்ட தூரம் தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.                                                                                      

நன்றி :- ஒனெ இந்தியா, 28-11-2012